தலவரலாறு : இலங்கையில் நீர்வேலிக் கந்தசுவாமி கோயிலுக்கு தென் மேற்குத் திசையாக அமைந்துள்ளதே, அருள்மிகு நீர்வேலி தெற்கு முருகையன் கோயிலாகும். முருக பக்தர்கள் கந்தபுராணகாலம் என்றுஅழைத்த காலத்தில் கந்த புராண படலம் செய்து வந்த மடாலயமாக விளங்கியதால், இக்கோயில் கந்த புராணக் கொட்டில் என அழைக்கப்பட்டு வந்தது. அன்று மடாலயமாக அமைந்திருந்த இடம் இன்று வளர்சியடைந்து அழகு மிளிரும், முருகன் அடியார்களின் அல்லல் அகற்றி அருள்பாலிக்கும் ஆலயமாக விளங்குகிறது. நொத்தாரிஸ் த. சச்சிதானந்தன் என்பவராலும், அவரைச் சார்ந்தவர்களாலும் பரிபாலிக்கப்பட்டு வந்த இவ்வாலயம், இன்று பக்தர்கள் பலரின் ஒத்துழைப்பாலும், முருகனது திருவருளாலும் அழகிய கற்பக் கிரகம், அர்த்த மண்டபம், சபா மண்டபம், தரிசன மண்டபம், மணிக்கோபுரம், மடப்பள்ளி ஆகிய அமைப்புக்களுடன் கூடிய ஆலயமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்திராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபையில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசை சுயேட்சை எம்.எல்.ஏ.தாக்கிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது. ஜார்க்கண்ட் மாநிலம் ...
மே 24,2013 IST