துபாய் : அமீரகத் தமிழ் மன்றம் கணினியில் தமிழின் செயல்பாட்டை பரவலாக்கும் நோக்கத்தோடு கடந்த 16 ஆண்டுகளாக துபாயில் இயங்கி வருகிறது. 'தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவ வகை செய்வோம்' என்ற கொள்கையோடு நல்ல தமிழில் பேசவும் எழுதவும் உற்சாகப்படுத்தும் இந்த அமைப்பு ஆண்டு தோறும் நல்ல படைப்புகளைத் தாங்கி வரும் ஆண்டு விழா மலரையும் வெளியிட்டு வருகிறது. இதைப்போன்றே 'தொலைக்காட்சியில் தொலைந்த கண்களைப் புத்தகங்கள் மூலம் மீட்டெடுப்போம்' என்ற முழக்கத்தோடு தொழிலாளர் முகாம்களில் தொழிலாளர்களுக்காக நூலகம் ஒன்றையும் நடத்தி வருகிறது. திறந்த அமைப்பாக ஜனநாயகத் தன்மையுடன் இயங்கும் இவ்வமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. உறுப்பினர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்ட விழாவில் இவ்வாண்டுக்கான நிர்வாகிகளின் பட்டியலை தற்போதைய தலைவர் ஆசிப் மீரான் அறிவித்தார்.
அமீரகத் தமிழ் மன்றத்தின் தலைவராக காமராஜனும், உதவித் தலைவராக சிவகுமாரும், பொதுச் செயலாளராக ஜெஸிலா ரியாசும், கலைச் செயலாளராக பாரூக் அலியாரும், இணைச் செயலாளராக ரமணியும், பொருளாளராக நஜ்முதீனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர்களாக பானு காமராஜன், சுமதி சுப்ரமணியன், வி.கார்த்திகேயன், கார்த்திகேயன் பொன்னம்பலம் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆசிப் மீரான்,ஜெகுபர், அகமது முகைதீன் ஆகியோர் அமைப்பின் ஆலோசகர்களாக பலம் சேர்ப்பார்கள்.
- நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
மேலும் செய்திகள் உங்களுக்காக ... சென்னை: ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மும்பை போலீசார் சென்னை வந்துள்ளனர். அவர்கள் இன்று காலை முதல் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனின் வீட்டில் ...
மே 23,2013 IST