பல்வேறு சிறப்புகளுக்கும் தொன்மைக்கும் பெயர்பெற்ற ஓமன் நாட்டில், பாரத கலாச்சாரமும் இழையோடி உள்ளது. தொடக்க காலங்களில் தமிழ் கத்தோலிக்க மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் சிறு அறையில் ஜெபவழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டது. 1977க்கு பிறகு ரூவி ஆலயம் மற்றும் தூய ஆவியானவரின் காலா ஆலயம் ஆகியன கட்டப்பட்டது. 2003ம் ஆண்டிலிருந்து அருட்தந்தை குழந்தை போஸ் பங்கு குருவானவராக பொறுப்பேற்ற பின்னர் பல முன்னேற்றங்களையும் மாறுதல்களையும் தமிழ் கத்தோலிக்கச் சங்கம் பெற்றது. 1978ம் ஆண்டு சிறு குழுவாக செயல்பட்ட தமிழ் கத்தோலிக்க சங்கம், 1994ம் ஆண்டு முதல் ஓமன் தமிழ் கத்தோலிக்கச் சங்கமாக உருமாறப்பட்டது. அதன் முதல் தலைவராக தேவ் அசோகன் பொறுப்பேற்றார். அன்று முதல் செலின் மார்க், ஆர்.தனிஸ்லாஸ், எஸ்.அருள் மைக்கேல், ஜெயகுமார், தனபாலன் ஆகியோரின் தளராத முயற்சியாலும், உழைப்பாலும் ஓமன் தமிழ் கத்தோலிக்க சங்கம் வெள்ளி விழாவை கடந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. மாதாந்திர திருப்பலிக்கு 50 பேர் மட்டுமே பங்கு பெற்ற நிலையிலிருந்து 1300 பேருக்கு மேல் வரை கலந்து கொள்ளும் நிலையை அடைந்துள்ளது.
சங்க உறுப்பினர்கள் : 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அருட்தந்தை போஸ் ஆன்மிக இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.
தலைவர் : ராபர்ட் ரொசாரியோ
துணைத் தலைவர் : ஜோசப் வெஸ்லி
செயலாளர் : அலெக்ஸ் ராஜேந்திரன்
பொருளாளர் : ஜோசப் தாஸ்
சங்க முகவரி : ஓமன் தமிழ் கத்தோலிக்க சங்கம், மஸ்கட், ஓமன்
இ-மெயில் : omantcs@gmail.com
இணையதளம் : www.omantcs.com
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
பெண்களுக்கு எதிரான கொடுமையை ஒழிக்க உதவிக்கரம் நீட்டுவோம்...
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரிட்டிஷ் கொலம்பியா...
தற்போதைய செய்தி
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், கொடுவாய் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், கடந்த நிதியாண்டு கணக்கு தணிக்கை நடந்தது. வங்கி லாக்கரில் போலி நகைகள் இருப்பது ...
மே 21,2013 IST