நாட்டுக்கோட்டை செட்டியார் தண்டாயுதபாணி ஆலயம், மலேசியா

பிப்ரவரி 03,2012  IST

Comments

ஆலய வரலாறு : மலேசியாவின் பெனாங் பகுதியில் அமைந்துள்ள நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயம், செட்டியார் சமூகத்தினரால் உருவாக்கப்பட்டதாகும். நாட்டுக்கோட்டை செட்டியார் தண்டாயுதபாணி ஆலயம் என பக்தர்களால் அழைக்கப்படும் இவ்வாலயம் தண்டாயுதபாணி ஆலயம் எனவும் அழைக்கப்படுகிறது. வாட்டர்ஃபால் ரோடு பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலின் திருப்பணிகள் 1854ம் ஆண்டு துவங்கப்பட்டது. செட்டியார் சமூகத்தினரால் சிறிய அளவிலான நிலம் இப்பகுதியில் கோயில் அமைப்பதற்காக பெறப்பட்டுள்ளது. செட்டியார்களின் பாரம்பரிய முறைப்படி, கோட்டை அமைப்பிலான கோயிலாக இவ்வாலயம் கட்டப்பட்டுள்ளது. செட்டியார் சமூகத்தாரின் நன்கொடையால் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வரும் இக்கோயிலில் தண்டாயுதபாணி என்ற திருநாமத்துடன் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் திருப்பணிகள் 1857ம் ஆண்டு முடிவடைந்து, மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் தைப்பூச திருநாளன்று செட்டியார் சமூகத்தினர், மயிலிறகால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தை நகர வீதிகளில் 3 நாட்கள் இழுத்து வருகின்றனர். இவ்விழா, ஆலயத்தின் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. நாட்டுக்கோட்டை செட்டியார் தண்டாயுதபாணி ஆலயம், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.
ஆலய முகவரி : Nattukkottai Chettiar Thendayuthapani Temple,
Jalan Kebun Bunga, George Town, Malaysia.


மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பெண்களுக்கு எதிரான கொடு‌மை‌யை ஒழிக்க உதவிக்கரம் நீட்டுவோம்

பெண்களுக்கு எதிரான கொடு‌மை‌யை ஒழிக்க உதவிக்கரம் நீட்டுவோம்...

லண்டனில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்

லண்டனில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்...

துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு

துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு...

ஸ்காட்லாந்தில் முருகன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்காட்லாந்தில் முருகன் கோயில் கும்பாபிஷேகம்...

Advertisement
Advertisement

நாகரீகமா பேசுங்க: கருணாநிதி அறிவுரை

சென்னை: தி.மு.க. ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்தது. இதில் மாவட்ட ‌தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கலந்து கொண்டனர். ...

மே 19,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)