ஆலய விபரம் : பாகிஸ்தானின் கராச்சி நகர நகராட்சி அலுவலக கட்டிடத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள இந்துக் கோயில் ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர்.பாகிஸ்தான் அரசு மற்றும் இந்து அமைப்புக்களால் இக்கோயில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடலோரத்தில் அமைந்துள்ள இக்கோயில் கடல் சீற்றங்கள் பலவற்றால் சிதலமடைந்துள்ளது. பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்து இக்கோயிலில் தற்போது பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சிறிய மைய அறையைக் கொண்டுள்ள இக்கோயிலின் ஒருபுறத்தில் மகாவிஷ்ணுவும் அவருக்கு அருகில் மகாலட்சுமியும் காட்சி அளிக்கின்றனர். மற்றொரு புறத்தில் மகாகாளி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் ஒரு புறத்தில் சிறிய மடப்பள்ளி அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்நேரமும் உணவு வழங்கப்படுகிறது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் அளித்து வரும் நன்கொடையால் இந்த அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
லண்டன் உலகத் தமிழ் மையத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா...
தற்போதைய செய்திதிருநெல்வேலி : நெல்லை தி.மு.க.,வினரிடமிருந்து பார்லிமென்ட் தேர்தல் செலவுக்காக மூன்று கோடி ரூபாயை பொருளாளர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். பார்லிமென்ட் தேர்தல் ...
மே 22,2013 IST