ஹாங்காங் : ஹாங்காங்கின் ஹேப்பிவேளி இந்து ஆலயத்தில் டிசம்பர் 02ம் தேதி ஐயப்ப பூஜை நடைபெற்றது. சகஸ்ரநாம ஆராதனையுடன் துவங்கிய இவ்விழாவில் ஹாங்காங் வாழ் பாடகர்கள், ஐயப்ப பக்தர்கள் ஆகியோர் பங்கேற்ற சிறப்பு பஜனை நடைபெற்றது. பஜனையில் பாடப்பட்ட சுவாமி ஐயப்பனின் துதிப் பாடல்கள் பக்தர்கள் மனதில் பக்தியை பெருக்கெடுக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து 18 படிகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டது. பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஐயப்பனை பக்தர்கள் வழிபட்டு சென்றனர். இந்த பூஜையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் மகாபிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
கோவை: சத்திய மங்கலம் அருகே ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி செய்து, 7 கோடி ரூபாயுடன் தலைமறைவாக இருந்த, ஈமு பண்ணை உரிமையாளர் ராஜா உட்பட 3 பேரை கோவையில், பொருளாதார ...
மே 25,2013 IST