கோலாலம்பூர்: மலேசியா, சுபாங் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீற்றிருந்து தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு குறையாது அருள் பாலித்து வரும் ஸ்ரீ லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 44ம் ஆண்டு வருடாந்திர மகா சிவராத்திரி திருவிழா 108 கலசாபி ஷேகத்துடன் கோலாகலமாக கொண் டாடப்பட்டது.
பல நூறு பக்தர்கள் ஆலயத்தில் ஒன்று திரண்டு தங்களின் நேர்த்தி கடனை நிறைவேற்றினர். கடந்த ஞாயிறன்று நடை பெற்ற சிவராத்திரி திருவிழாவில் சமூக சேவகர் அண்ணாமலை உட்பட திரளானோர் கலந்து லிங்கேஸ்வரரின் ஆசியைப் பெற்றனர். தற்போது ஆலயத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் ஒரு சில நிர்மாணிப்பு பணிகளை மேற்கொள்ளப் படவிருக்கிறது. அதற்கு பொது மக்களின் உதவியையும் கொடை நெஞ்சங்களின் ஆதரவையும் ஆலய நிர்வாகம் நாடுவதாக செயலாளர் மணிகந்தன் கூறினார்.
- கோலாலம்பூரிலிருந்து காயத்ரி
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
புதுடில்லி: ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் வீரர்கள் உட்பட 5 பேரை வரும் ஜூன் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ...
மே 24,2013 IST