பல்கலையில் "மொட்டை' கலாசாரம்!
""கூட்டணி அமைக்க, தூது அனுப்பியிருக்காங்க...'' என்று கூறியபடி, நாயர் கடைக்கு வந்த அந்தோணிசாமி, சட்டென நிமிர்ந்து, மழை வருகிறதா என கவனித்தார்.
பின் தொடர்ந்தார்...""லோக்சபா தேர்தல்ல, தி.மு.க.,வோட கூட்டணி அமைக்க, பா.ம.க., தரப்புல விரும்புறாங்க... தி.மு.க., மாஜி அமைச்சர் துரைமுருகனை, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி சந்தித்து, "மீண்டும் உங்களுடன் கூட்டணி அமைக்க, கட்சிக்காரங்க விரும்புறாங்க... 2004 லோக்சபா தேர்தல்ல, 40 தொகுதிகள்ல, அ.தி.மு.க., கூட்டணியை வீழ்த்துன மாதிரி, இந்த தேர்தலில் வீழ்த்த, நாமெல்லாம் ஒண்ணு சேரணும்'ன்னு சொல்லி இருக்காரு...
""அதுக்கு துரைமுருகன், "இந்த மேட்டரை, தலைவர்ட்ட நான் சொல்ல முடியாது... நானும் வன்னியர்ங்கறதால, பா.ம.க.,வுக்கு ஆதரவாக செயல்படுறேன்னு சந்தேகப்பட்டுடுவாங்க... ஆனா, வன்னியர் சமுதாய பிரச்னை தொடர்பா, கனிமொழி தான் இப்போ அதிகமாக தலையிடுறாங்க... அதனால நீங்க, கனிமொழியை சந்திச்சு வலியுறுத்துங்க'ன்னு சொல்லி அனுப்பி வைச்சிட்டாருங்க...'' என, மூச்சு விடாமல் கூறி முடித்தார்.
""நகராட்சித் தலைவர் பதவியை கைப்பத்த, "கியூ' கட்டி நிக்கிறாங்க பா...'' என, அடுத்த விவாதத்தைத் துவக்கினார் அன்வர்பாய்.
""எந்த நகராட்சியில ஓய்...'' என்றார் அண்ணாச்சி.
""கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சித் தலைவரா இருந்த, அரங்கநாதன் இறந்து போனதால, அந்தப் பதவிக்கு, இப்போ அவரோட மகன் ரமேஷ், தன் அம்மாவோட வந்து, முதல்வரை நேர்ல சந்திச்சிருக்காரு... முதல்வரும், "பார்த்துக்கிறேன்'ன்னு நம்பிக்கை காட்டி இருக்காங்க... அடுத்ததா, நகர செயலர் கலைச்செல்வன், வேறு ஒருத்தர் மூலமாவும், இப்போதைய நகராட்சித் தலைவர் பொறுப்புல இருக்கற சந்திரகுமார், உள்ளூர் அமைச்சர் ஆதரவோடயும், முயற்சி பண்றாங்க... தொகுதி செயலர் அருளழகன், உள்ளூர்ல, கிளினிக் வச்சிருக்குற டாக்டர் ஒருத்தர், ஜெ., பேரவை நிர்வாகி ஒருத்தர்ன்னு, "கியூ' கட்டி நிக்கறாங்க பா...'' எனக் கூறி முடித்தார் அன்வர்பாய்.
""மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்கள் பெரும் கலக்கத்துல இருக்கா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
""என்னாச்சு... ஏன் இவ்ளோ குழப்பம்வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
""பல்கலைல, ஒருத்தரை ஒருத்தர், "போட்டு'க் குடுக்க, மொட்டை கடுதாசி எழுதற பழக்கம், ரொம்ப ஓவரா போயிண்டிருக்கு... "கிசு கிசு' கடிதங்களுக்கும் பஞ்சமில்லேன்னு சொல்றா... துணைவேந்தர் கோஷ்டி, ஆசிரியர்கள் சங்கம்ன்னு, ரெண்டு கோஷ்டியா பிரிஞ்சு இருக்கா... அடிக்கடி, "எங்க சங்கத்து ஆளை, யாரு அடிச்சா?'ன்னு கேட்டு, சங்கத்துக்காரா, ஆர்ப்பாட்டம், போராட்டம்னு நடத்தி, எப்பப் பார்த்தாலும், புழுதியும், குப்பையும் கிளப்பறா... ஆனா, "இதெல்லாம் எனக்கு, "ஐúஐúபி'ங்கறா மாதிரி, துணைவேந்தர், எல்லாத்தையும் சமாளிச்சிண்டிருக்கார்...
""இந்த பிரச்னையை மையப்படுத்தி, உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் தொடங்கி, கவர்னர் ஆபீஸ் வரைக்கும், மொட்டை கடுதாசு அனுப்பறதுலயும் இறங்கிட்டா... இதனால, தினமும் பல்கலைக்கு வர்ற ஆசிரியர்கள், "இன்னிக்கு என்ன மொட்டை இருக்கு...'ன்னு ஆவலா கேக்கறா மாதிரி, நிலைமை மோசமாயிடுத்து ஓய்...'' எனக் கூறி முடித்தார் குப்பண்ணா.
நண்பர்கள் டீ குடித்தனர்; பின், மவுனமாய் நடையைக் கட்டினர்; பெஞ்ச் அமைதியானது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.