Advertisement
தினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி »டவுட் தனபாலு
"டவுட்' தனபாலு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : மே 22,2013,00:00 IST

தி.மு.க., தலைவர், கருணாநிதி: முதல்வருக்கு, கடந்த ஒரு வாரமாகத் தான், 110வது விதியின் கீழ் அறிக்கை படிப்பதிலிருந்து, சற்று ஓய்வு கிடைத்துள்ளது. இனியாவது, கெட்ட பெயரைச் சம்பாதிப்பதை விட்டுவிட்டு, கிடப்பிலே போடப்பட்டுள்ள தி.மு.க., ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டங்களை எல்லாம் உடனடியாகத் துவங்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

டவுட் தனபாலு: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைவில் நிறைவேற்றினால், முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவோம்னு ஸ்டாலின் சொல்றாரு... இப்ப நீங்க, ஆட்சிக்கு கெட்ட பேரு வந்திடக் கூடாதுன்னு அக்கறையா கோ ரிக்கை வைக்கிறீங்க... மொத்தத்துல உங்க கட்சி, ஏதோ குழப்பத்துல இருக்கிற மாதிரி தெரியுதே... இது, உங்க உடன்பிறப்புகளுக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும்கறதுல, "டவுட்'டே இல்லை...!

பத்திரிகை செய்தி: அரவிந்த் கெஜ்ரிவாலின், "ஆம் ஆத்மி' கட்சி கூட்டம், அமெரிக்காவின் சிகாகோ நகரில், கடந்த வாரம் நடந்தது. அடுத்த கூட்டம், நியூஜெர்சியில் நடைபெற உள்ளது.

டவுட் தனபாலு: ஊழலையும், வறுமையையும் ஒழிக்க ஆரம்பிக்கப்பட்ட உங்க, "சாமானிய மக்கள் கட்சி', ரொம்பவே செழிப்பாகிடுச்சு போல தெரியுதே... இந்தியாவுல இருக்குற எல்லா குக்கிராமங்களிலும் உங்க கட்சிக்கு நிர்வாகிகளை போட்டு, விழிப்புணர்வு பிரசாரத்தை முடிச்சுட்டீங்களா... பேஸ் மட்டமே இன்னும் போடலை... அதுக்குள்ளே பில்டிங்கை ஸ்ட்ராங் பண்ண, அமெரிக்கா வரைக்கும் போயிருக்கிறது, பல, "டவுட்' கிளப்புதே...!

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர், மணீஷ் திவாரி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறிய மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய், அது தொடர்பாக, பொது விவாதத்துக்கு தயாரா?

டவுட் தனபாலு: நீங்க சவால் விடுற வேகத்தைப் பார்த்தா, ஸ்பெக்ட்ரம் விவகாரத்துல பெருசா ஏதோ, "கேப்' கிடைச்சுட்ட மாதிரி தெரியுதே... வினோத் ராயை விவாதத்துக்கு அழைக்குற நீங்க, இதே விவகாரத்துல, பார்லிமென்ட் கூட்டுக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க, கெஞ்சிக் கூத்தாடிய ராஜாவின் கோரிக்கையை ஏன் தட்டிக் கழிச்சீங்க... உங்க வீரத்தையும், கோபத்தையும் ஓய்வு பெற்ற அதிகாரிகளிடம் தான் காட்டுவீங்களாங்கறது தான், என்னோட, "டவுட்!'



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
P.T.Murugan @ Ambai Sutharsanan - Trichy,இந்தியா
22-மே-201308:07:42 IST Report Abuse
 P.T.Murugan @ Ambai Sutharsanan இதில் கவனிக்க வேண்டிய விஷயம் யாதெனில் 'மேற்கொண்டு கெட்ட பயர் வாங்காமல்' . கலைஞர் கலைஞர் தான்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.