"சே... இன்டெலிஜென்சுலேர்ந்து தகவல் கேட்ட காலம் போயி, பத்திரிகைகளைப் பார்த்து, "டேட்டா' எடுக்க வேண்டிய நிலைமை ஆயிடிச்சே...' என்ற எண்ணம் தோன்றினாலும், அதை மறைத்தபடி, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை: 2006-2011 வரையான தி.மு.க., ஆட்சியில், வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள், மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. 2011 மார்ச்சில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், 1.27 லட்சம் தொலைக்காட்சி பெட்டிகள், மிச்சம் வைக்கப்பட்டன. அவை, பள்ளி, மருத்துவமனை, ஆதரவற்றோர் மையங்களுக்கு வழங்கப்படும் என, அ.தி.மு.க., அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதன் மதிப்பு, 22.82 கோடி ரூபாய்.
"ஈழப் பிரச்னையைப் பேசி ஓய்ஞ்சு போயாச்சி, ஸ்டெர்லைட் பிரச்னையிலும் அதே நிலை, தேர்தல் வேற வருது... காவிரி பிரச்னையை மறுபடி இழுப்போம்' என்ற கணக்கில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை: கர்நாடக மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும், காவிரி பிரச்னையில், தமிழகத்திற்கு வஞ்சம் இழைப்பதே வாடிக்கையாகி விட்டது. கர்நாடக முதல்வராக பதவி ஏற்று உள்ள சித்தராமையாவும், இதற்கு விதிவிலக்கு இல்லை. தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட, பா.ஜ., முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் முயன்ற போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில், "ஸ்பாட் பிக்சிங்' செய்தது தொடர்பாக, பலர் கைதாகி வருகின்றனர். இந்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசின் அமைச்சர்களுக்கும், தொடர்பு உள்ளது. நிலக்கரி சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல் என, எந்த ஊழலும், ஐ.மு., கூட்டணி அரசின் பங்களிப்பு இல்லாமல் நடக்க முடியாது. "இன்றைய ஜோக்' பகுதியில் சேர்க்கக் கூடிய, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சுவாமியின் பேட்டி
'மறுபடி முதல்லேர்ந்தா...' என, நடிகர் வடிவேலு பாணியில் கேட்கத் தோன்றும், கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி: காவிரி விவகாரத்தில், சுமுக தீர்வு எட்ட வேண்டும் என்பது, எங்கள் அரசின் எதிர்பார்ப்பு. அதற்கு நான், எப்போதும் தயாராக உள்ளேன். ஆனால், இதில் தமிழக முதல்வரும், அந்த மாநில அரசும் தயாராக உள்ளதா என்பதை, அறிய விரும்புகிறேன்.
மத்திய வேளாண்மை துறை இணை அமைச்சர் தாரிக் அன்வர் பேட்டி: உணவு பாதுகாப்பு மசோதா, மிகவும் முக்கியமானது. எனவே, அதை நிறைவேற்றுவதில், அவசரம் காட்ட மாட்டோம். அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன், எந்த பிரச்னையும் இன்றி, பார்லிமென்டில் மசோதாவை நிறைவேற்றுவோம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.