அ.தி.மு.க.,வின் சிறப்புரையை கேட்ட காலி இருக்கைகள்!
சென்னை
அடுத்த, மீஞ்சூர் ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், இரண்டு ஆண்டு சாதனை
விளக்க பொதுக்கூட்டம், பொன்னேரியில் சமீபத்தில் நடந்தது. கூட்டத்தில்
பங்கேற்கும் கட்சி தொண்டர்கள் அமர்வதற்காக, 500 இருக்கைகள் போடப்பட்டு
இருந்தன. அங்கொன்றும், இங்கொன்றுமாக, கட்சி தொண்டர்கள் அமர்ந்திருந்தனர்.
பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன. அமைச்சர் ரமணா, சட்டசபை
உறுப்பினர் பொன்.ராஜா, தலைமை கழக பேச்சாளர் கருணாநிதி ஆகியோரது
சிறப்புரையை, காலி இருக்கைகளே கேட்டுக் கொண்டு இருந்தன. இதை கண்ட,
கட்சியின் மூத்த தொண்டர் ஒருவர், "துண்டு பிரசுரத்தில் போடப்பட்டு,
கூட்டத்தின் வரவேற்பு உரையில் வாசிக்கப்பட்ட, கட்சியின் மாவட்ட, ஒன்றிய,
நகர, ஊராட்சி நிர்வாகிகளின் பெயர்களுக்கு உரியவர்கள் வந்திருந்தாலே,
கூட்டம் நிரம்பியிருக்கும்' என, ஆதங்கத்துடன் கூறி, துண்டை உதறி தோளில்
போட்டபடி, "விருட்'டென சென்றார்
கையெழுத்து போட்டா "கரன்ட்' வருமா?
திருப்பூரில்,
தே.மு.தி.க., பொதுக்கூட்டம் நடந்தது. இதில், மின்வெட்டின் பாதிப்புகள்
குறித்து விளக்கும் வகையில், மின் விளக்குகளை அணைத்து விட்டு, விஜயகாந்த்
உள்ளிட்டோர் தீப்பந்தம், மெழுகுவர்த்தி பிடித்து காட்டினர். அப்போது,
பின்னணி குரலாக, "விஜயகாந்த் முதல்வராக வந்தால், முதல் கையெழுத்து மூலம்,
24 மணி நேரத்தில் மின்வெட்டை தீர்க்க வேண்டும்' என, உணர்ச்சி பொங்க
கூறினர். "கையெழுத்து போட்டா, "கரன்ட்' வருவதற்கு, இது என்ன சினிமாவா?' என,
சற்றே ஓங்கிய குரலில் ஒருவர் கூற, "யாருய்யா அது...' என, மற்றவர்கள் குரல்
எழுப்ப, சைலன்ட்டாக, அடுத்த மேட்டருக்கு மாறினார் விஜயகாந்த்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பொதுக் கூட்டங்களுக்கு ஆட்களை இழுத்துப் பிடித்து அமர வைப்பது என்பது எந்தக் கட்சியாக இருப்பினும் இதே நிலைமை தான்.. கட்சி ஆட்கள் மட்டும் வந்தால் போதாது.. பொது ஜனங்களும் வந்து கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு பார்த்துக் கொள்ளல் வேண்டும்..இது எல்லாக் கட்சிக்கும் பொருந்தும். ஏன் இப்படி இந்த நிலை என்று ஆக்கப் பூர்வமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் ஒவ்வொரு கட்சியும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.