எப்படி இப்படி...?'
காங்.,
மூத்த தலைவரும், மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சருமான, ஜெய்ராம்
ரமேஷின் வாய்க்கு, கட்சி மேலிடம், எவ்வளவு கடிவாளம் போட்டாலும், அவர் அடங்க
மாட்டார் போலிருக்கிறது.சமீபத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த,
ஜெய்ராம், "காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா
ஆகிய மாநிலங்களில் தான், நக்சலைட்டுகள் அட்டூழியம் அதிகமாக உள்ளது.
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்களில், இந்த பிரச்னையே இல்லை.
அங்கெல்லாம், சட்டம் - ஒழுங்கு ஜோராக இருக்கிறது' என, "அள்ளி'
விட்டார்."இவர், எப்படி, இப்படியெல்லாம் யோசிக்கிறார்' என, "காட்டமான'
பத்திரிகையாளர்கள், "ஜார்க்கண்டில், இப்போது ஜனாதிபதி ஆட்சியல்லவா
நடக்கிறது? அங்கும், சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்கிறீர்களா?' என,
எதிர்கேள்வி கேட்டனர். இதைக் கேட்டதும், ஜெய்ராமுக்கு, சற்று, "ஜெர்க்'
ஆனது."ஜார்க்கண்ட் மாநிலத்தை பற்றி, நான் எதுவும் கூறவில்லையே...' என,
நழுவினார். பத்திரிகையாளர்கள் விடவில்லை. "மத்திய பிரதேசத்தில், பா.ஜ.,
ஆட்சி நடக்கிறது. அங்கு, நக்சலைட்டுகள் தொல்லை, அதிகம் இல்லையே...' என,
அடுத்த கேள்வியை கேட்டனர்."கொஞ்சம், யோசிக்க டைம் கொடுங்கப்பா...' என,
முணுமுணுத்த ஜெய்ராம், "ம.பி.,யில், பா.ஜ., ஆட்சி நடந்தாலும், அங்கு
காங்கிரஸ் கட்சி, பலமாக இருக்கிறது. அதனால் தான், நக்சலைட் பிரச்னை, அங்கு
இல்லை' என, புதுமையான விளக்கத்தை கொடுத்து, பத்திரிகையாளர்களை, "ஒரு
மாதிரியாக' பார்த்தார்.
அவர்களின் முகங்களில், கொலை வெறி தாண்டவமாடியதால், அங்கிருந்து நைசாக, "எஸ்கேப்' ஆனார்!
தில்லாலங்கடி அரசியல்வாதி
அரியானா
முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, பூபிந்தர் சிங் ஹூடா, தில்லாலங்கடி
அரசியல்வாதி. சமீபத்தில், செய்தியாளர்களை சந்தித்த ஹூடா, "நம் மாநில
முன்னாள் முதல்வர்களுக்கு, இனி, அமைச்சர்களுக்கு இணையான அந்தஸ்து
அளிக்கப்படும்; பாதுகாப்புக்கு போலீசார், பயணத்துக்காக கார், தனி அலுவலகம்,
சண்டிகாரில் வீடு ஆகியவை அளிக்கப்படும்' என்றார்.அரியானாவில் உள்ள
எதிர்க்கட்சிகாரர்களே, அவரின் இந்த அறிவிப்பை கேட்டு, ஆடிப் போய் விட்டனர்.
"பரவாயில்லையே... அரசியல்வாதியாக இருந்தாலும், அநியாயத்துக்கு, நல்ல
மனிதனாக இருக்கிறாரே...' என, பாராட்டினர்.ஆனால், விஷயம் தெரிந்த
அரசியல்வாதிகளோ, ஹூடாவின் அறிவிப்புக்கு, வேறொரு பின்னணியை கூறுகின்றனர்.
"அரியானாவின் முன்னாள் முதல்வர்களில், பெரும்பாலானோர், இறந்து விட்டனர்.
குகும் சிங், ஓம் பிரகாஷ் சவுதாலா ஆகியோர் மட்டுமே, உயிருடன் உள்ளனர்.
இவர்களில், குகும் சிங்கிற்கு வயதாகி, வெளியில் நடமாட முடியாத நிலையில்
உள்ளார். அவருக்கு சலுகை அளித்தும், பயனில்லை. மற்றொருவரான, சவுதாலா, லஞ்ச
குற்றச்சாட்டில் சிக்கி, சிறையில் உள்ளார். அவருக்கும் சலுகைகள்
கிடைக்காது' என்கின்றனர்."அப்படியானால், பின், எதுக்கு தான், இந்த
திட்டத்தை, ஹூடா அறிவித்தார்...' என, மற்றவர்கள் தலையை பிய்க்க, அதற்கும்,
பதிலை ரெடியாக வைத்துள்ளனர், அரியானா அரசியல்வாதிகள். "அடுத்த தேர்தலில்
வெற்றி பெற்று, முதல்வராக முடியாது என, ஹூடாவுக்கு தெரிந்து விட்டது.
அதனால், தன் வருங்காலத்தை வளமாக மாற்றுவதற்காக, இப்போதே, ஏற்பாடுகளை செய்து
வருகிறார்' என, அடுத்த அணுகுண்டை வீசுகின்றனர்.இப்போது சொல்லுங்கள்; ஹூடா,
தில்லாலங்கடி அரசியல்வாதி தானே...?
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.