பிரசவத்திற்கு பரிசு
ஆரம்ப சுகாதார மையங்களின் "ரோல்மாடல்' மாவட்டமாக, இந்தியாவிலேயே வேலூர் மாவட்டம் உள்ளது.தமிழகத்தில், இன்று எந்த பிரசவமும் வீட்டில் நடைபெறவில்லை. இதில்
தமிழகம், மற்ற எல்லா மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக உள்ளது. ஆனால் வட மாநிலங்களின் கிராமங்களில் இன்றும் பிரசவம் வீட்டில் தான் நடைபெறுகிறது.பிரசவம் வீட்டில்
நடைபெறாமல், ஆஸ்பத்திரி களில் நடைபெற வேண்டும் என்பதற்காகவே ஓர் இயக்கம் நடைபெறுகிறது. இதற்கென ஒவ்வொரு கிராமத்திலும் "ஆஷா பஹூ' என்பவர் நியமிக்கப்
படுகிறார். இவருடைய வேலை, பிரசவம் வீட்டில் நடைபெறாமல், சுகாதார நிலையங்களுக்கு அழைத்து வருவதாகும். இதற்காக இவருக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கப்
படும்.பிரசவத்திற்கு ஒரு பெண்ணை அழைத்து வரும் போது, ஊக்க சம்பளம் தனியாக வழங்கப்படும். பிரசவித்த பெண்ணுடன் தங்க, சாப்பிட தனியே ரூபாயும் தரப்படுகிறது.
தகவல் சுரங்கம்
கோல்கட்டாவில் சீனர்கள்
வங்கதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் கோல்கட்டாவிலும், நேபாளத்தில் இருந்து வந்தவர்கள் டார்ஜிலிங்கிலும், மேற்கு வங்கத்தில் வாழ்கின்றனர். இவர்களைத் தவிர
கோல்கட்டாவின் புறநகர் பகுதியான டாங்ராவில் சீனர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.இவர்கள் 18ம் நூற்றாண்டிலேயே சீனாவில் இருந்து, இந்தியாவுக்கு வந்து குடியேறியவர்கள்.
21ம் நூற்றாண்டிலும் இவர்கள் இன்னமும் சீனர்கள் என்ற அடையாளத்துடனும், மேற்குவங்க மக்களுடன் சுமுகமாக வாழ்கின்றனர்.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார்
7 ஆயிரம் சீனர்கள் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் கோல்கட்டாவின் டாங்ரா தான் பூர்வீகமாக கருதப்படுகிறது. ஏனெனில் இவர்கள் டாங்ராவில் குடியேறிய பின் தான்,
வேறு பகுதி களுக்கு இடம் பெயர்ந்தனர். சீன உணவு வகைகள், இந்தியாவில் இன்று பிரபலமாக இருப்பதற்கு டாங்ரா பகுதி சீனர்கள் தான் காரணம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.