Advertisement
தினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி »டவுட் தனபாலு
"டவுட்' தனபாலு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : மே 23,2013,00:00 IST

மத்திய கப்பல் போக்குவரத்து துறை, அமைச்சர் வாசன்: குற்றச்சாட்டுகள் யார் மீது எழுந்தாலும், காங்கிரஸ் அரசு, தாமதமின்றி நடவடிக்கை எடுக்கும்.

டவுட் தனபாலு: சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் மற்றும் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலை பதவி விலக வைத்ததே, இந்த மாதிரி மார் தட்டிக்கத் தான் என்பது நாட்டு மக்களுக்கு நல்லாவே தெரியும்... "இது, சின்ன மீனை சிக்க வெச்சு, திமிங்கலத்தை தப்ப வைக்கற தந்திரம்'னு சொல்றாங்களே... இதுக்கு ஏதாவது பதில் வெச்சிருக்கீங்களாங்கறது தான், என்னோட, "டவுட்!'

சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே: லோக்சபா தேர்தலில், ஊழல் மற்றும் குற்றப் பின்னணி இல்லாத, நேர்மையான, தனிப்பட்ட நபர்களுக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும். கட்சிகள் அடிப்படையிலான அரசியல், நாட்டின் அரசியல் நடைமுறைக்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

டவுட் தனபாலு:
அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் திருத்தப் போறேன்னு களத்துல குதிச்ச நீங்க, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிக்கு திசை மாறிட்டீங்க... இப்ப திடீர்னு, "கட்சி அடிப்படையிலான அரசியல், நாட்டுக்கு பாதிப்பு'னு கொளுத்திப் போடுறீங்க... உங்க மனசுல என்ன தான் ஓடுதுங்கற, "டவுட்' வருதே...!

விருதுநகர் போலீஸ் எஸ்.பி., மகேஸ்வரன்: விடுமுறை நாட்களில் இயங்கும் பட்டாசு ஆலைகளை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையும் மீறி, பட்டாசு விபத்து ஏற்பட்டால், அப்பகுதி போலீசார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

டவுட் தனபாலு: உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா, போலீசுக்கு இருபக்கமும் இடி... ஆலைகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள், விபத்து ஏற்பட்டா மட்டும், சுறுசுறுப்பை காட்டுறாங்க... பத்து நாள் முடிஞ்சா, பழைய நிலைக்கு திரும்பிடுறாங்க... சாதாரண நாட்கள்லயே இது தான் நிலைன்னா, விடுமுறை நாட்களில், அரசு அதிகாரிகள், ஆலை பக்கம் தலைவச்சு கூட படுக்க மாட்டாங்க... அதனால தான், இந்த பொறுப்பை, போலீசிடம் தந்துட்டாங்களோங்கிற, "டவுட்' வருதே...!



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Cheenu Meenu - cheenai,இந்தியா
23-மே-201300:10:56 IST Report Abuse
Cheenu Meenu பசி மீது வந்த குற்றசாட்டுக்கள் என்ன ஆச்சு? காணமல் போச்சு ..... வாசன் சோர்வாகி விட்டார்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.