நவீன முறையில் குடமிளகாய்!
நகரத்திலேயே,
நவீன முறையில் குடமிளகாய் பயிரிட்டு வெற்றி பெற்ற, பொறியியல் மாணவன்
நந்தகுமார்: நான், சேலத்தின் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த, பொறியியல்
பட்டதாரி. விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தால், தமிழ்நாடு வேளாண் பல்கலையில்,
பி.டெக்., படித்த போது, கள ஆய்விற்காக பலவிதமான விவசாய பண்ணைகளை
பார்வையிட்டேன். அந்த அனுபவத்தால், புதிய தொழில்நுட்ப முறையில், குடமிளகாய்
சாகுபடி செய்ய திட்டமிட்டேன். என் வீட்டில் உள்ள, அரை ஏக்கர் நிலத்தில்,
"பசுமைக்குடில்' அமைத்து, சொட்டு நீர் பாசனத்தில், பயிர் செய்தேன். கார
அமில தன்மையின் அளவு, "பி.எச்.6' ஆக இருக்கும் செம்மண்ணில் தான்,
குடமிளகாய் நன்றாக வளர்வதால், அரை ஏக்கர் களிமண் நிலத்தை சீர் செய்து, 45
டன் தொழு உரமிட்டு, அதை நன்றாக உழுது பின், செம்மண் நிரப்பி, நிலத்தை
தயாரித்தேன். முதன் முறையாக விவசாயம் செய்ய, அரை ஏக்கருக்கு, 17 லட்சம்
ரூபாய் தேவைப்படும். இதற்கு, மத்திய அரசின், என்.எச்.பி., திட்டம் மூலம், 4
லட்சம் ரூபாயும், மாநில அரசின், என்.எச்.எம்., திட்டம் மூலம், 6 லட்சம்
ரூபாயும் மானியம் கிடைக்கும். ஆனால், இதில் ஏதேனும் ஒன்றை மட்டுமே, நாம்
தேர்வு செய்ய முடியும். மீதி தொகையை, வங்கி மூலம் கடனாக பெறலாம். சிவப்பு
மற்றும் மஞ்சள் நிறத்தில் காய்க்கும் குடமிளகாய் செடிகளை, ஒரு சதுர
அடிக்கு, 4 செடிகள் வீதம், அரை ஏக்கருக்கு, 8,500 செடிகளை நட்டேன். ஒரு
செடியின் விலை, 5 ரூபாய். நாற்று நட்ட, 85ம் நாட்களுக்குள், குடமிளகாயை
அறுவடை செய்யலாம். அரை ஏக்கரில் பயிரிட்ட செடிகளிலிருந்து, தினமும், 80
முதல், 100 கிலோ என, ஒரு மாதத்திற்கு, 2.5 டன் வரையிலும், மொத்தத்தில் ஒரு
செடியிலிருந்து, 6 கிலோ வரையிலும் அறுவடை செய்கிறேன். பசுமைக்குடில்
அமைக்க, அதிக செலவானாலும், 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். இதனால், எவ்வித
சூழலிலும், எல்லா பருவ காலத்திலும், இதை பயிரிட்டு வளர்க்கலாம். சமீப
காலமாக, குடமிளகாயின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சராசரியாக, 1 கிலோ, 40
ரூபாய் வரை விற்பனை செய்கிறேன்.தொடர்புக்கு: 99947 71512.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.