Advertisement
தினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி »பேச்சு, பேட்டி, அறிக்கை
பேச்சு, பேட்டி, அறிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : மே 21,2013,00:00 IST

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேட்டி: குற்றச்சாட்டுகள் யார் மீது எழுந்தாலும், காங்கிரஸ் அரசு, தாமதமின்றி நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில், சமீபத்தில், இரு மத்திய அமைச்சர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டுகளால், அவர்கள் பதவியைத் தொடர அனுமதிக்கப்படவில்லை. இது, கட்சிக்கு பலவீனமல்ல.

பணியாளர் சீர்திருத்தப் பணிச் செயலர் வி.இறையன்பு பேச்சு: ஆசிரியர் பணி, மற்ற பணிகளை விட, மிகவும் புனிதமான பணி. அந்தப் பணியை, ஒரு வேலையாகக் கருதி செய்யும் ஆசிரியர், வெறும் பாடம் போதிப்பவராக மட்டும் கருதப்படுவார். ஆனால், தன் பணியை முழு அர்ப்பணிப்புடன் செய்து, தனித் திறன்மிக்க மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மனதில் என்றென்றும் நிலைத்து வாழ்கின்றனர்.

கடும் நிதி நெருக்கடியிலும், திரிணமுல் காங்கிரஸ் அரசு, பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், விவசாயம், தொழில் துறை, சேவை துறைகளில், மேற்கு வங்க மாநிலம், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. என் அரசின் செயல்பாடுகளை மதிப்பிட, இரண்டு ஆண்டுகள் போதாது.அவ்வப்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு, மாநிலமே சின்னாபின்னமாகிப் போயுள்ள நிலையில், தற்பெருமையில் ஊறித் திளைக்கும், மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, "பேஸ்புக்' வலைதளத்தில், மம்தா பானர்ஜி வெளியிட்ட தகவல்

தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் பேச்சு: ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வார் என, எதிர்பார்த்தோம். ஆனால், தன் மனக் குரோதத்தையும், வஞ்சத்தையும், பழிவாங்கும் செயலையும் நிறைவேற்றிக் கொள்ளும் போர்க்களமாக, ஆட்சியையும், நிர்வாகத்தையும் மாற்றி அமைத்துள்ளார். சட்டசபையும், ஜனநாயகமும் கேலிக்கூத்தாக்கப்பட்டு உள்ளது.

"அ.தி.மு.க.,வில் சேரும் காலம் நெருங்கி வருகிறது' என்பதை, வெளிப்படையாகச் சொல்லாமல் விளக்கும் வகையில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., வெங்கடேசன் பேச்சு: ஜெ., தலைமையிலான அரசு தற்போது, எந்தச் செயலையும் செய்ய தயாராகி விட்டது. கடந்த, 56 நாட்களாக சட்டசபை நடந்ததால், தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை, சீராக இருந்தது. கடந்த, 16ம் தேதி சட்டசபை முடிந்தவுடன், அன்றிரவு முதல், வழக்கம் போல் மின்வெட்டு துவங்கி விட்டது. இந்த ஆட்சியில், சொல்வது வேறாகவும், செய்வது வேறாகவும் இருக்கிறது.



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.