சபாஷ்... நல்ல யோசனை!
விவஸ்தை இல்லாமல் விமர்சிக்கும் ஆசாமிகள்!
டாம்பீக கிறுக்குகள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சுஹாசினி அவர்களின் யோசனை சரியல்ல. சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ளுவது போன்றது இது. சுஹாசினியின் தோழியிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன் .நீங்கள் வாசலில் நிற்பதையும், எதிர் வீட்டுக்காரர் பார்ப்பதையும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கவனித்திருந்திருந்தால், வெளியே சொல்லாவிட்டாலும் , மனதிற்குள் உங்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைத்திருப்பார்கள் ? அதோடு நில்லாமல்,எதிர் வீட்டுக்காரர் மனதில் "வலை விரிக்கிறாள் " என்று உங்களைப் பற்றிப் பதிந்த எண்ணம் , உங்கள் நோக்கம் நிறைவேறி விட்டதென்று நீங்கள் வெளியில் போய் நிற்பதை நிறுத்திக் கொண்டவுடன் மறைந்து விடுமா?அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பார்க்கக் கூடிய வாய்ப்பில்லை என்று வைத்துக் கொண்டால் இன்னொரு கோணத்தில் இதைப் பார்ப்போம் . பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் நீங்கள், உங்கள் கணவர்,எதிர் வீட்டுப் பெண் ஆகிய மூன்று நபர்கள் . உங்கள் பிரச்சினை தீருவதற்காக உங்கள் பிரச்சினைக்குக் காரணமில்லாத ஒருவரைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவது மிக மிக மட்டமான செயல் .என்ன காரணம் சொல்லியும் நியாயப்படுத்த முடியாத மிகக் கேவலமான செயல் . எந்தவொரு செயலுக்கும் நோக்கம் நியாயமாக இருப்பது மட்டும் போதாது, நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளக் கடைபிடிக்கும் முறையும் நியாயமாக இருக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் வாக்கு.
இந்த கலி காலத்தில் யதார்த்தம், உண்மையான அன்பு மற்றும் பாசம், தூய பக்தி, அறம், நெறி எல்லாம் மிகவும் கம்மி. எனக்கு தெரிந்து என் அனுபவத்தில், வெறும் பணத்திற்கும், படோபமான செயல்களுக்குதான் இப்பொழுதெல்லாம் மதிப்பு மற்றும் மரியாதை. காலம் கலி காலம் வேறென்ன சொல்ல. தயவு செய்து மனிதனை மனிதனாக மதிக்க கற்றுகொள்வோம் மற்றும் நம் சந்ததிகளுக்கு கற்றுகொடுப்போம்.
சுகாசினி நீங்கள் சொல்லும் கருத்தை பார்த்தால் குஷ்பு கற்பு பற்றி அளித்த பேட்டி உண்மைதான் என்று தோன்றுகிறது? முதலில் மணமான பெண் அடுத்தவள் கணவரை சைட் அடித்தாள் எனபது, அதற்கு பழியாக மற்றவள் செய்தது, ஒரு வேளை இந்த ஏட்டிக்கு போட்டி தொடர்ந்திருந்தால் இருவரும் படுக்கையை பகிர்ந்து கொள்வது வரை சென்றிருப்பார்களா?
சுஹாசினி அவர்களின் யோசனை சரியல்ல. சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ளுவது போன்றது இது.
உங்கள் தோழி வாசலில் நிற்பதையும், எதிர் வீட்டுக்காரர் பார்ப்பதையும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கவனித்திருந்திருந்தால், வெளியே சொல்லாவிட்டாலும் , மனதிற்குள் உங்கள் தோழியைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைத்திருப்பார்கள் ? அதோடு நில்லாமல்,எதிர் வீட்டுக்காரர் மனதில் "வலை விரிக்கிறாள் " என்று உங்களைப் பற்றிப் பதிந்த எண்ணம் , நீங்கள் வெளியில் போய் நிற்பதை நிறுத்தியவுடன் மறைந்து விடுமா?அக்கம்
பக்கத்தில் இருப்பவர்கள் பார்க்கக் கூடிய வாய்ப்பில்லை என்று வைத்துக் கொண்டால் இன்னொரு கோணத்தில் இதைப் பார்ப்போம் . பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் நீங்கள், உங்கள் கணவர்,எதிர் வீட்டுப் பெண் ஆகிய மூன்று நபர்கள் . உங்கள் பிரச்சினை தீருவதற்காக உங்கள் பிரச்சினைக்குக் காரணமில்லாத ஒருவரைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவது மிக மிக மட்டமான செயல் .என்ன காரணம் சொல்லியும் நியாயப்படுத்த முடியாத மிகக் கேவலமான செயல்.
முதல் கதை ஒரு வேஸ்ட் யோசனை.. திருந்துவதற்கு இது சரியான யோசனை இல்லை.. பக்கத்துக்கு வீடு பெண்ணின் கணவரை தூண்டி விடுவது போல் உள்ளது.. அலுவலகத்தில் இதே வேலையை அவர் செய்தால் இந்த பெண்ணால் என்ன செய்ய முடியும்.. அன்புடன் சொல்லி , குடும்பம் மீது பற்று வர வைக்க வேண்டும்.. பெரும்பாலான ஆண்கள் குழந்தைக்கு பிறகு இது போன்ற விசயங்களில் ஈடுபடுவது இல்லை.. எனவே குழந்தையை வைத்து அவரை திருத்த பார்க்கலாம் .. இரண்டாம் கதை அருமை.. அதே போல் முடி நரைத்து இருக்கும் ஒருவரின் தலையை பார்த்து கொண்டே பேசுவது அந்த நபருக்கு எவ்வளவு சங்கடம் தெரியுமா ..
மூன்றாம் கதை கேட்க கஷ்டமா இருந்தாலும் அதுதான் யதார்த்தம்.. கலியுகம்..
முதல் கதையில் இந்த உத்தி எல்லா இடத்திலும் பலிக்காது. நான் என்னவேணும்னாலும் செய்வேன்
நீ செய்யகூடாது என்கிற ஆணுக்கு எப்படி புரிய வைப்பது. ஒழுக்கம் தானாகவே வர வேண்டும்.
2) மூன்றாவதில் , முல்லா கதை தான் ஞாபகம் வருகிறது. ஒரு விருந்துக்கு சென்ற முல்லா, அங்கு உடைக்கும், பணத்திற்கும் தரப்படுகிற மரியாதையையும் பார்த்து போய் ஒரு கோட் போட்டுக்கொண்டு வந்தார். உணவுகளை ஒவ்வொன்றாக எடுத்து கோட் பாக்கெட்டில் போட்டபடியே கோட்டே இந்த சாப்பிடு என்று சொல்லிக்கொண்டே போட்டுக்கொண்டு இருந்தார். ஏன் என்று ஒருவர் கேட்க இங்கே மனிதருக்கு இல்லை விருந்து, உடைகளுக்கு த்தானே என்றார். இதுவும் அதேதான். . மனிதம் பணத்தால் சாகடிக்கப்பட்டு விட்டது.
சுகாசினி,சென்னை அவர்களின் யோசனை அபோதைக்கு சரியாகத் தோன்றினாலும் மிகுந்த ஆபத்து மிகுந்தது.கையாள எண்ணுவோர் மிகுந்த கவனமுடன் கையாளவேண்டும்.கார்த்திக் ராஜா,மதுரை அவர்களுக்கு, கவலையே படாதீர்கள் பணி ஓய்வுக்குப்பின் மிகத்தெளிவு பெறுவார்.மீனா,மாயவரம் அவர்களுக்கு,அந்த மனிதரை அவமதித்தவர்கள் தான் "அழுக்கு". இந்த அழுக்கு பணம் படைத்த பலரிடம் உள்ளது.துவைத்தாலும் போகாது.இவர்கள் கால ஓட்டத்தில் காணாமல் போய்விடுவார்கள்.அன்று நான்கு பேர் மத்தியில் அவமானபடுத்த பட்டவர் உங்களால் உலகம் முழுவதும் உள்ள இணைய தள வாசகர்களால் உயர்த்தப்பட போகிறார்.அழுக்குமனிதர்கள் சேற்றில் கால் வைப்பதால் தான் வெள்ளை என எண்ணுகிற மனிதர்கள் சோற்றில் கைவைக்க முடியும்.ஒருவரை அழுக்கு,கருப்பு என ஏளனம் செய்பவர்களுக்கு ஒன்று "நாம் அனைவருமே அழுக்கின் தேக்கங்கள் தான்" ஒருவரை பிடிக்க வில்லை எனில் அழைப்பிதழ் கொடுக்காமல் இருப்பது நல்லது.அழைத்து அவமான படுத்த என்ன அதிகாரம் உள்ளது? நிறைந்த அன்புடன்........................................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.