வருடா வருடம், புத்தாண்டு சபதமாக, மும்பை பகுதியில், "துப்புவதற்கு குட்பை சொல்வோம்' என்ற சபதத்தை ஏற்பர். இருந்தாலும், இரண்டு நாட்களிலேயே அந்த சபதத்தை மறந்து விடுவர்!
சமீபத்தில், புவனேஸ்வர் ரயில் நிலையத்தில், பிளாட்பார்மில் துப்பியவர்களுக்கு உடனடியாக, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வடக்கு கடற்கரை ரயில்வேயில் புவனேஸ்வர் முக்கிய, "ஏ' நகரம். "ஏ' நகரம் என்றால், 100 ரூபாய் அபராதம். கட்டக், பெர்காம்பூர் போன்ற ரயில் நிலையங்கள், "பி' யில் வருகின்றன. இங்கு, 50 ரூபாய் அபராதம். மற்ற நகரங்கள், "சி' கிரேடு உள்ளவை. இங்கு, 30 ரூபாய்.
இந்த கடுமையான சட்டத்தை தமிழக ரயில் நிலையங்களில் உடனடியாக அமல்படுத்தி, துப்பலுக்கு தமிழக ரயில்வேயும் குட்பை சொல்லலாமே... இதன் மூலம் மக்களுக்கும் ஒரு சுய கட்டுப்பாடு வரும்!
— ஜோல்னா பையன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கண்ட இடத்தில் காறி துப்புவதில் தானய்யா இந்திய ஜனநாயகத்தின் மகிமையே இருக்கிறது
பண்பாடு என்பது சிறு வயதிலிருந்து கற்றுக்கொடுக்கப் பட வேண்டும்
.பொது வினியோகத்தில் அரிசி இலவசம் ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..
அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..
மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்
மேரா பாரத் மகான்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.