தொடுதிரை இயக்கம் தான், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பிரபலப்படுத்தி, புதுமையானதாகக் காட்டி வருகிறது. ஆனால், இதனாலேயே விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் களின் விலை, மக்கள் ஈடு கொடுக்க முடியாத நிலையில் உள்ளது.
இந்நிலையில், ஏசர் நிறுவனம் தன் ஆஸ்பயர் வி5 (Aspire V5), லேப்டாப் கம்ப்யூட்டரை ரூ. 34,550 என்ற விலைக்கு அறிமுகப்படுத்தி, இந்தியாவில், விலை குறைந்த விண்டோஸ் 8 லேப்டாப் என்ற பெயரைப் பெற்றுள்ளது. இதுவரை அசூஸ் நிறுவன லேப்டாப் கம்ப்யூட்டர், ரூ.39,990 என்று விலையிட்டு குறைந்த விலை நோட்புக் என்ற பெயரினைப் பெற்று வந்தது. தற்போது இந்த இடத்தில், ஏசர் நிறுவனத்தின் ஆஸ்பயர் 5 இடம் பெற்றுள்ளது. இதன் திரை அகலம் 14 மற்றும் 15.6 அங்குலமாக உள்ளது. தொடக்க நிலை நோட்புக் கம்ப்யூட்டர்களில், பென்டியம் டூயல் கோர் ப்ராசசர்கள் அமைக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து, இன்டெல் கோர் ஐ3 மற்றும் ஐ5 சிப்களுடனும் நோட்புக் கம்ப்யூட்டர்கள் வெளியா கின்றன.இதன் தடிமன் 20மிமீ. எடை 2 கிலோ. இவை வழக்கமான லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் 10% குறைவாக தடிமன் மற்றும் எடை கொண்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் சிறப்பு இவை கொண்டுள்ள தொடுதிரை இயக்கம் கொள்ளும் ஸ்கிரீனில் உள்ளது. டச் ஸ்கிரீன் இயக்கம் என்பதாலேயே, விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து தள்ளிப் போனவர்கள், குறைந்த விலையில் இது கிடைப்பதனால், இந்த தொழில் நுட்பத்திற்கு மாறிக் கொள்வார்கள், என்று ஏசர் நிறுவன தலைமை விற்பனை அதிகாரி ராஜேந்திரன் அறிவித்துள்ளார். ஏசர் நிறுவன விண்டோஸ் 8 இயக்க லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ரூ. 34,550 லிருந்து ரூ. 47,500 வரை விலையிடப்பட்டு மார்க்கட்டில் கிடைக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.