இந்துமதம் ஆறுபிரிவுகளாக இருந்த காலம் ஒன்று உண்டு. கணபதியை வழிபடுவோர் காணாபத்யம், சிவனை வழிபடுவோர் சைவம், விஷ்ணுவை வழிபடுவோர் வைணவம், சக்தியை வழிபடுவோர் சாக்தம், குமரனை வழிபடுவோர் கவுமாரம் எனப்பட்டனர். இந்தக் கடவுள்களின் வழிபாடு இன்று வரை நிலைத்து நிற்கிறது. ஆனால், சூரியனை வழிபடும் சவுமாரம் என்ற மதம் மட்டும் காலப்போக்கில் மறைந்து விட்டது. அதுவும் வடமாநிலங்களில் ..
"வீட்டை கட்டிப்பார், திருமணத்தை முடித்து பார், ' என்பதெல்லாம் அன்று. "திருமணத்தை முடித்து பார், அதன் பின் வரும் சங்கடங்களை எண்ணிப்பார் ,' என்கிறது, "மாடர்ன்' உலகம். திருமணம்- அது இருவீட்டாருக்கும் பொதுவானது என்றாலும், பெண் வீட்டார் கொஞ்சம் அதிகமாகவே ஆர்ப்பரிப்பார்கள். கல்யாண சீர் வரிசையுடன் நிற்பதில்லை, பெண் வீட்டாரின் செய்முறை படலம். "தலைத் தீபாவளி, ..
தமிழில் நடித்தது இரண்டு படங்கள் தான்; இரண்டும் பேசப்பட்டன. "கும்கி' அல்லியும், "சுந்தரபாண்டியன்' அர்ச்சனாவும் ரசிகர் மனதை கொள்ளை கொண்டு விட்டார்கள். யதார்த்தமான, "நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணு' என்று சொல்லத்தோன்றும் முகம். சோகம், மகிழ்ச்சி என களிநடனம் புரியும் கண்கள். அனுபவ நடிகை போன்று ஆச்சரியம் காட்டும் முகபாவனைகள்... தமிழ்த்திரை உலகிற்கு, மலையாள தேசத்தில் ..
ஆயுத பூஜை, பொங்கல் பண்டிகைக்கு இருக்கும் வரவேற்பு, வேறு எந்தப்பண்டிக்கைக்கும் இருப்பதுஇல்லை. காரணம், அவை இரண்டிற்கு மட்டும் தான், தொடர்ச்சியாக "விடுமுறை' கிடைக்குமாம்.பாரம்பரிய பொங்கல் பண்டிகைக்கு, நாம் தரும் முக்கியத்துவம் இதுதான். அதனால்தான், வீட்டு பொங்கல், மாட்டுப் பொங்கல், என தனித்தனியே பிரித்து, அவரவருக்குரிய நாளில் பொங்கல் கொண்டாடி முடிக்கிறோம். ஆனால் ..
இது இ(ணைய)ளைய தலைமுறைக்கு கிட்டாத அனுபவம்பண்டைக்கால இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, சீனாவில் வேளாண் பொருட்களை ஏற்றிச்செல்ல மாட்டு வண்டிகள் பயன்பட்டுள்ளன. மொகஞ்சதாரோ அகழாய்வில், மாட்டுவண்டிப் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று வீடுகளில் கார்கள் இருப்பதுபோல், அன்று கவுரவத்தின் அடையாளம் மாட்டு வண்டிகள். இவை, மாடுகளின் இழுவைத்திறன் மூலம் இயங்குபவை. ..
"தை' பிறந்தால் வழி பிறக்கும் என்பதால்தான், பொங்கல் விழா கொண்டாட்டம், மூன்று நாட்களுக்கு தொடர்கிறது. அதற்கான தொடக்கம், காப்புக் கட்டும் நிகழ்ச்சி. மார்கழி கடைசியில் பழையதை போக்க "போகி'யும், பின் புதியவை புகுவதற்கு "தை'யும் உதவுகிறது. தைத்திருநாளை வரவேற்க, வீட்டின் கூரையில் "பூ' காப்புக் கட்டிய பிறகே, பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது."காப்பு'க் கட்டுவதின் ..
மஞ்சள் குளித்து, பனியில் நனைந்து பரவசப் பொங்கல் கொண்டாடும், நம் தமிழ்ப் பண்பாட்டு பெண்கள், கொஞ்சம் கொஞ்சமாய் மாறி வருகின்றனர். மஞ்சள் பூசிய கிராமத்து குயில்கள்... ரசாயன "கிரீம்' மோகத்தில், மஞ்சளை மறந்தனர். நாட்டு மருந்துக் கடைகளில், குவித்து வைக்கப்பட்டிருக்கும், பாரம்பரிய அடையாளங்கள் எல்லாம்... பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாப்பில் சென்று விட்டன. அரைத்த மஞ்சளை ..
"பழநிக்கு போய் பஞ்சாமிர்தம் சாப்பிடாதவரும், திருப்பதிக்கு போய் லட்டு வாங்காதவரும், தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காதவரும், பொங்கலுக்கு கரும்பு கடிக்காதவரும்,' திருப்தி அடைவது சிரமம்தான்.இது பொங்கல் சீசன் என்பதால், கரும்புக்கு வருவோம். பொங்கல் இனிப்பான உணவு என்றாலும், கரும்புக்குத் தான் அன்றைய தினம் குட்டீஸ்கள், குதூகளிப்பர். காரணம், வேண்டிய நேரத்தில் பொங்கல் ..
பொங்கல் என்ற சொல், தமிழில் சோறு பொங்குவதையோ, பால் பொங்குவதையோ மட்டும் குறிப்பதல்ல. வளர்தல், உயர்தல், எழுதல், பொழிதல், நிறைதல், மிகுதி என பல அர்த்தங்களுடன் உள்ளும், புறமும் உற்சாகத்தை பொங்கவைக்கும் ஒரு சொல். மண்ணும், மனமும் இயற்கையால் நிறைந்து வழிவதை சொல்வது.இயற்கையின் தலைப்பிள்ளைகள் உழவர்கள். அவர்கள் இன்று தலைகுனிந்து நிற்கின்றனர். ஊர்ப்பசியை தீர்ப்பவர்கள், உறு ..
""சின்னச் சின்ன மூக்குத்தியாம்...சிவப்புக் கல்லு மூக்குத்தியாம்...கன்னிப் பெண்ணே... உன் ஒய்யாரம் கண்டுகண்ணு சிமிட்டுற மூக்குத்தியாம்...'' என மூக்குத்தியின் பெருமையை, பாடல்கள் சொல்கின்றன.வெறும் அலங்காரப் பொருளல்ல, மூக்குத்தி.பெண்களின் உடலோடு, உணர்வோடு தொடர்புடையது. இந்தியப் பெண்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய அடையாளச் சின்னம். வடஇந்தியப் பெண்கள் மூக்கின் ..