சென்னை நகரில் பார்க்க
வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.
அண்ணா நகர் கோபுரம்:
சென்னையில் உள்ள உயரமான
மற்றும் பெரிய பூங்கா கோபுரம்.
அண்ணாநகர் பூங்காவில்
அமைந்துள்ள இந்த கோபுரம் வட்ட
வடிவில் சுற்றி சுற்றிச்
செல்லும் படிக்கட்டுகளைக்
கொண்டுள்ளது. இதன் உச்சியில்
இருந்து சென்னையை முழுமையாக
கண்டு ரசிக்க முடியும்.
அண்ணாநகர் ரவுன்டானா அருகே
அமைந்துள்ள இதற்கு நுழைவு
கட்டணம் ரூ.1; காலை 9 மணி
முதல் மாலை 6 மணி வரை
வாரத்தில் 7 நாட்களும் இது
திறந்திருக்கும்.
பிர்லா கோளரங்கம்: இந்த நவீன
கோளரங்கம் அரை வட்ட வடிவிலான
உருண்டையான கட்டிடத்தில்
அமைந்துள்ளது. இங்குள்ள
கம்ப்யூட்டர் மய கருவிகள்
மூலம் வானில் உள்ள கோள்களையும்
நட்சத்திரங்களையும் காண
முடியும்.
கோட்டூர்புரம்
காந்தி மண்டபம் அருகே பெரியார்
அறிவியல் மற்றும் தொழிநுட்ப
மையத்தில் அமைந்துள்ள இந்
கோளரங்கத்தில் ஆங்கிலம் ( காலை
10-45; பகல் 01-15; 03-45)
தமிழ் ( பகல் 12; 02-30)
மொழிகளில் விளக்கம்
தரப்படுகிறது. இதற்கான கட்டணம்
பெரியவர்களுக்கு ரூ.20;
சிறியவர்களுக்கு ரூ.10.
கன்னிமாரா பொது நூலகம்:
தேசிய நூலகங்களில் ஒன்று.
இங்கு ஏராளமான நூல்களும்
இதழ்களும் உள்ளன.
கம்பூயட்டரில் இயங்கும்
தொடுதிரை வசதியும் செய்து
தரப்பட்டுள்ளது. எழும்பூர்
பாந்தியன் சாலையில் உள்ள இது
காலை 9 மணி முதல் இரவு 07- 30
வரை திறந்திருக்கும். தேசிய
விடுமுறை நாட்களில் இது
செயல்படாது. அனுமதி இலவசம்.
அரசு அருங்காட்சியகம்: பாந்தியன் சாலையில்
அமைந்துள்ள இந்த
அருங்காட்சியகத்தில் தற்கால
கலைப் பொருட்கள் முதல்
வரலாற்று காலத்துக்கு
முற்பட்ட கலைப் பொருட்கள் வரை
இடம் பெற்றுள்ளன. இங்கு
பிரதான தென் இந்திய ராஜ
பரம்பரைகளின் நினைவுச்
சின்னங்கள் பெருவாரியாக உள்ளன.
இங்குள்ள பல்வேறு கால வெண்கல
மற்றும் இதர உலோக சிற்பங்கள்,
விலங்கியல் மற்றும் புவியியல்
பகுதிகள் பார்வையாளர்களின்
கருத்தைக் கவர்வதாக உள்ளன.
அமராவதி பகதியில்
கண்டெடுக்கப்பட்ட புத்தர்
சிலைகள், அவரது வாழ்க்கையைச்
சித்தரிப்பதாக உள்ளன.
இங்குள்ள தேசிய கலைப் பொருள்
பகுதியில் 10 முதல் 13ம்
நூற்றாண்டு வரையான காலத்தைச்
சேர்ந்த வெண்கலப் பொருட்கள்,
16, 18ம் நூற்றாண்டுகளைச்
சேர்ந்த முகலாய ஓவியங்கள்,
ராஜஸ்தானி மற்றும் 18ம்
நூற்றாண்டைச் சேர்ந்த தட்சிண
கலைப் பொருட்கள், பல்வேறு
காலகட்டங்களைச் சேர்ந்த
கைவினைப் பொருட்கள் ஆகியவை
கண்ணைக் கவர்வதாக அமைந்துள்ளன
தேசிய கலைப்பொருள் பகுதி
அமைந்துள்ள கட்டிடம் சிவப்பு
கற்களால் கட்டப்பட்டது.
இங்குள் பொருட்கள்
மட்டுமல்லாமல் இந்த கட்டிடமே
ஒரு கலைப்பொருளாக திகழ்கிறது.