திருமணம் நடந்தால்
பாணாசுரனை அழிப்பதில்
சிக்கல் ஏற்படும் என்பதால்
நாரதர் சேவலாக உருவெடுத்து
கூவினார். விடிந்து
விட்டதாக நினைத்த
சிவபெருமான் பாதி
வழியிலேயே
சுசீந்திரத்திற்கு
திரும்பினார்.
திருமணத்திற்காக
காத்திருந்த பராசக்தி இதனால்
கோபமடைந்தார். திருமண
வைபவங்கள் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் பராசக்தி பாணாசுரனின்
தீய சக்திகளோடு போர்புரிய
துவங்கினார். மேலும் பாணாசுரன்
பராசக்தியை தன்னை திருமணம்
செய்து கொள்ள வற்புறுத்தினான்.
இதில் நடந்த போரில் பாணாசுரனை
பராசக்தி வதம் செய்தாள்.
பின்னர் திருமணமே செய்து
கொள்ளாமல் இருந்ததால்
கன்னியாகுமரி என்ற பெயர்
வந்தது.
அரபிக்கடல், வங்கக்கடல்,
இந்திய பெருங்கடல் கலக்கும்
முக்கடல் சங்கமமாகும்
கடற்கரையில் அமைந்துள்ள
கன்னியாகுமரி அம்மனின்
பெயராலேயே கன்னியாகுமரி என்ற
பெயர் வந்தது.
கன்னியாகுமரி பாரம்பரிய
வைத்தியங்களான சித்தவைத்தியம்,
ஆயுர்வேதம், வர்மக்கலைக்கு
பெயர் போனதாகும்.
கன்னியாகுமரி கலை மற்றும்
பக்திக்கான சிறந்த இடமாக
கருதப்படுகிறது. மேலும்
வர்த்தக முக்கியத்துவம்
வாய்ந்த பகுதியாகவும்
கருதப்படுகிறது. கன்னியாகுமரி,
சேர, சோழ, பாண்டிய மற்றும்
நாயக்க மன்னர்களின் ஆட்சியின்
கீழ் இருந்துள்ளது. இங்குள்ள
கோயில்கள் மன்னர்களால்
கட்டப்பட்டதாகும்.
பின்னர் கன்னியாகுமரி
வேணாட்டின் ஒரு பகுதியாக
பத்மநாபபுரத்தை தலைமையகமாக
கொண்டு செயல்பட்டது. 1949ம்
ஆண்டு கன்னியாகுமரி
திருவாங்கூர்-கொச்சி
மாநிலத்தில் சேர்க்கப்பட்டது.
இந்த நேரத்தில் கன்னியாகுமரியை
தமிழகத்துடன் சேர்க்க கோரி
நேசமணி தலைமையில் போராட்டம்
நடத்தப்பட்டது. 1956ம் ஆண்டு
மொழி வாரியாக மாநிலங்கள்
பிரிக்கப்பட்ட போது
கன்னியாகுமரி தமிழகத்துடன்
இணைக்கப்பட்டது.
தென்னிந்தியாவில் கி.பி.52ல்
12 அப்போஸ்தலர்களில் ஒருவரான
செயின்ட் தாமஸ் வந்த பின்னர்
தான் கிறிஸ்தவ மதம் பரவ
துவங்கியது. 16ம் நூற்றாண்டில்
இங்கு வந்த ஐரோப்பிய மத
போதகர்கள் கிறிஸ்தவ மதத்தை
பரப்பினார்கள். செயின்ட்
பிரான்சிஸ் சேவியர் இவர்களில்
முக்கியமானவர் ஆவார்.
கன்னியாகுமரி கடலில்
சூரியோதயம் மிக பிரசித்தி
பெற்றதாகும். இந்தியாவிலேயே
சூரியோதயம் மற்றும் சூரிய
அஸ்தமனத்தை பார்க்கக்கூடிய
இடம் இது மட்டுமே.
சித்ராபவுர்ணமி அன்று சூரிய
அஸ்தமனம் மற்றும் முழு நிலா
தோன்றுவதை ஒருங்கே காணலாம்.
இட அமைப்பு :
கன்னியாகுமரி கடல்மட்டத்தில்
இருந்து சராசரி உயரத்தில்
உள்ளது. இதன் கிழக்கு மற்றும்
வடக்கு பகுதியில் திருநெல்வேலி
மாவட்டமும், மேற்கு மற்றும்
வடமேற்கு பகுதியில் கேரளாவும்
உள்ளன.
போக்குவரத்து வசதி :
எல்லா நகரங்களில் இருந்தும்
கன்னியாகுமரிக்கு பஸ் மற்றும்
ரயில் வசதி உள்ளது.
அருகிலுள்ள விமான நிலையம்
: திருவனந்தபுரம் (கன்னியாகுமரியில்
இருந்து 85 கி.மீ தொலைவில்)