சேலம் மலைகள் சூழ்ந்து
காணப்பட்டதால் சைலம் என்று
அழைக்கப்பட்டு அது சேலம் என
மருவியதாகவும், சேர நாட்டின்
கிழக்கு எல்லையாக இருந்ததால்,
சேரலம் எனப்பட்டு, சேலம் என
மருவியதாகவும், சமண சமயத்தின்
முக்கிய தளமாக இருந்ததால்,
சைலம் என அழைக்கப்பட்டு சேலம்
என மருவியதாகவும் என பல்வேறு
காரணங்கள் சேலத்தின் பெயருக்கு
காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நகரைச் சுற்றி முழுவதும்
மலைகள் அமைந்துள்ளது. இந்த
ஊரின் வடக்குப் பகுதியில்
நாகர்மலையும், மேற்குப்
பகுதியில் காஞ்சனமலையும்
அமைந்துள்ளது.
சேலத்திற்கு மாம்பழ நகரம்
என்ற பெயரும் உண்டு. இந்நகரில்
லாரி கட்டுமானப் பொருட்கள்
தயாரிப்பு, பாக்ஸைட் தயாரிப்பு,
நெசவுத் தொழில் போன்ற
தொழில்கள் மிகவும் சிறப்பாக
நடைபெறுகிறது.
வணிகத்துறையில் சிறந்து
விளங்கும் சேலம் தமிழ்நாட்டின்
இறக்குமதி ஏற்றுமதி
வியாபாரத்தில் உயிர்நாடியாக
விளங்குகிறது. புகழ்பெற்ற
சேலம் உருக்காலை தற்போது
தனியாரிடம் ஒப்படைக்கவும்
பேச்சு வார்த்தை நடந்து
வருகிறது. சேலத்தில்
சாயத்தொழிற்சாலை,
உணவுப்பொருட்கள் தயாரிப்புத்
தொழிற்சாலைகளும் உள்ளன.