திருச்சிராபள்ளி என்ற பெயர்
ஏற்பட்டதற்கு பல காரணங்கள்
கூறப்படுகின்றன. திரு என்பது
தமிழில் மரியாதையை குறிக்கும்
சொல். சிரா என்பது ஜைன
துறவியின் பெயராகும். இதனால்
திருச்சிராப்பள்ளி என்ற பெயர்
ஏற்பட்டதாகவும், மூன்று தலை
கொண்ட திரிசிரா (ராவணனின் மகன்)
சிவனை வழிபட்டு தன் பாவத்தை
போக்கிய தலம் என்பதால் இந்த
பெயர் வந்தது என்றும்
கூறப்படுகிறது. திரு
செவ்வந்திபுரம் என்ற பெயர்
நாளடைவில் மருவி திருச்சி
என்று அழைக்கப்பட்டதாகவும்
கூறுவர்.
23.26 சதுர கிலோமீட்டர்
பரப்பளவில் அமைந்துள்ள
திருச்சி நகரம், 1991-ம் ஆண்டு
மக்கள்தொகைக்
கணக்கெடுப்பின்படி 7 லட்சம்
மக்களைக் கொண்டது. ஆண்டு
முழுவதும் சராசரியான வெப்ப
நிலையைக் கொண்டதாக திருச்சி
உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக
83.5 சென்டிமீட்டர் மழை
பதிவாகிறது. தமிழ் மற்றும்
ஆங்கில மொழிகள் இங்கு
பேசப்படுகின்றன.