தமிழ் திரை உலகமும், மக்களும் மிக சிறந்த தயாரிப்பாளர், நடிகர் என பன்முக மாமனிதரை இழந்து விட்டோம். அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். யாருக்கும் அஞ்சாத, கட்சி சார்பற்ற மாமனிதர் மணிவண்ணன் ஐயாவின் குடும்பத்துக்கு எல்லா நலமும் பெருக ஆண்டவனை மன்றாடி கேட்டு கொள்வோமாக.
15-ஜூன்-2013 18:32:28 IST
தர்மபுரி கலவரத்துக்கு காரணமான காதல் ஜோடி பிரிந்தது. கலவி முடிந்தது. தவறு உணர்ந்து பெண் தாயுடன் சேர்ந்து விட்டார். திவ்யாவின் தந்தை அவமானம் தாங்காமல் மாய்ந்து விட்டார். இவ்வளவு கலவரத்துக்கும் காரணமான இளவரசனை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ராமதாஸ் அய்யா சொன்னது போல நாடக காதல் 100% வீதம் நிரூபணமாகிறது. இளவரசனுக்கு வேறு பெண் கிடைப்பாள். திவ்யாவின் தந்தை மரணம் மீட்க முடியாதது. விடலை காதல் திருமணம் விவாகரத்தில் முடியும். பெண்களே சற்று யோசித்து முடிவு செய்யுங்கள். வேண்டாம் இந்த விபரீதம்.
07-ஜூன்-2013 00:36:19 IST
தர்மபுரி கலவரத்துக்கு காரணமான காதல் ஜோடி பிரிந்தது. கலவி முடிந்தது. தவறு உணர்ந்து பெண் தாயுடன் சேர்ந்து விட்டார். திவ்யாவின் தந்தை அவமானம் தாங்காமல் மாய்ந்து விட்டார். இவ்வளவு கலவரத்துக்கும் காரணமான இளவரசனை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ராமதாஸ் அய்யா சொன்னது போல நாடக காதல் 100% வீதம் நிரூபணமாகிறது. இளவரசனுக்கு வேறு பெண் கிடைப்பாள். திவ்யாவின் தந்தை மரணம் மீட்க முடியாதது. விடலை காதல் திருமணம் விவாகரத்தில் முடியும். பெண்களே சற்று யோசித்து முடிவு செய்யுங்கள். வேண்டாம் இந்த விபரீதம்.
06-ஜூன்-2013 21:30:04 IST
ஜாதி மோதலை உருவாக்கி பூசலை வரவைத்து குளிர் காய்ந்து கொண்டிருப்பவர் ஜெயலலிதாதான். பிணை கொடுக்கப்பட்ட பிறகும் எப்பொழுதோ பேசிய பேச்சுக்காக கைது நாடகம் நடத்துவது எதற்காக? தற்போது நடந்த கலவரங்களுக்கு காரணம் முதல்வரின் அரசியல் முதிர்ச்சியின்மையே. மாற்று கட்சியினரை பழிவாங்கும் போக்கை கைவிடவேண்டும். காவல் துறையை ஏவல் அடிமைகளாக பயன்படுத்துவது வெட்கி தலைகுனிய வேண்டிய செயல். அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சகட்டம்.
01-ஜூன்-2013 01:42:16 IST
சமசீர் கல்வி மூலம் அனைவருக்கும் ஒரே கல்வி தி.மு.க வின் உருப்படியான திட்டம். ஒட்டுமொத்தமாக கணக்கில் கொண்டால் அரசு பள்ளிகள் தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. முதல் மதிப்பெண் தனியார் பள்ளிகள் பெறுவதால் தவறு ஒன்றும் இல்லை. காசு ஊள்ளவனுக்கும் இல்லாதவனுக்கும் ஒரே கல்வி கிடைப்பதை தினமலர் உட்பட விரும்பவில்லை. தற்போது தனியார் பள்ளி மோகம் கொஞ்சம் குறைந்து உள்ளது. அப்படியே 1ஆம் வகுப்பு முதல் ஆங்கிலம் அரசு பள்ளிகளில் தொடங்கினால் ஜெயா ஆட்சி பொற்காலம் என போற்றலாம். காசு புடுங்க காரணம் வேணுமேன்னு CBSC க்கு பெரும்பாலான தனியார் பள்ளிகள் தாவி விட்டன போனா போகட்டும். அறிவு தேட ஆங்கிலத்தில் புலமை மட்டுமே அவசியம், CBSC மட்டுமே வைத்துகொண்டு ஒன்றும் செய்ய முடியாது. பொது தேர்வுக்கு ஆயிரம் கோச்சிங் சென்டர் இருக்கு. பெரும்பாலான அறிவியல் படிப்புகளும், உலக மயமாக்கமும் ஆங்கில அவசியத்தை ஏற்படுத்தி விட்டது. அரசு பள்ளிகளும் தற்போது தனியார் பள்ளிகளின் கல்விக்கு சவால் விடுவது ஆரோக்கியமான தகவல். தரமான கல்வியை கொடுக்க வேண்டிய அரசு சாராயம் விற்கிறது. சாராயம் விற்க வேண்டிய தனியார் கல்வியை விற்கிறார்கள். என்ன செய்ய இந்த அரசியல் வாதிகள் தனியாருடன் சேர்ந்து கூட்டு கொள்ளை அடிகின்றனர். வாழ்நாள் சம்பாத்தியத்தில் பெரும்பாலான தொகையை தனியாரிடம் கல்விக்காக கொட்டி அழ வேண்டிய நிலைக்கு தள்ளி விட்டார்களே.
01-ஜூன்-2013 01:30:11 IST
கிரிகெட்க்கு தரும் முக்கியத்துவத பேப்பர், டெலிவிஷன் நிறுத்தவேண்டும்.கிரிகெட் என்பது கவர்ச்சியானது, நாகரீகமானது என பெரும் பண முதலீட்டுடன் பிரபலங்களை கொண்டு சாயம் பூசப்பட்டுள்ளது. வீணடிக்கப்படும் நேரம் என பார்த்தால் இந்த கிரிகெட் முதல் இடம் பிடிக்கும். கிரிகெட் பார்வையாளர்களை ஸ்பான்சர் கொடுக்கும் விளம்பரங்களை மனதில் சுமக்கும் பொதி கழுதைகலாக மாற்றி விட்டார்கள்.
25-மே-2013 13:01:25 IST
சீரான மும்முனை மின்சாரம் குறிப்பிட்ட நேரத்தில் தடை இல்லாமல் வழங்கினால் நாங்கள் ஏன் மின்சாரத்தை வீணடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள படுகிறோம்? மோட்டார் போட்டு தண்ணி வயலுக்கு போறதுக்கு முன்னாடியே மின்சாரம் துண்டிக்க படுகிறது. மீண்டும் மின்சாரம் வரும் போது மீண்டும் தொடங்கிய நிலையே நீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயம். மின்னழுத்த வேறுபாடு காரனத்தால் மோட்டாரும் பழுது ஆகின்றது. இரவு நேரம் முழுவதும் எப்படி இந்த மின்சாரத்துக்க தூக்கம் இல்லாமல் இருப்பது? விவசாயம் தொடர் நஷ்டம் ஏற்படுவது எப்படி? Transformer பழுது ஆனால் அந்த அந்த பகுதியை சேர்ந்த விவசாயி களிடம் வசூல் செய்து சரி செய்கிறார்கள். இல்லை என்றால் இரண்டு மாசம் ஆகும் சரிசெய்ய என சொல்கிறார்கள். ஆக மொத்தத்தில் விவசாயி ஊருப்படகூடாது என்பது திட்டமிட்டே சதி செய்கிறார்கள். அந்த பகுதியை சேர்ந்த மின் ஊழியர்களை விசாரித்தல் தெரிந்து கொள்வீர்கள். எனவேதான் எந்த ஒரு விவசாயியும் தன் வாரிசுகளை விவசாயத்தில் ஈடு படுத்த தயங்குகிறான். இப்போது விவசாயம் என்பது பிச்சை எடுக்கும் தொழிலை விட கேவலமாகி விட்டது.
24-மே-2013 12:37:41 IST
ஐயா மு. க அவர்களே, நீங்கள் கொஞ்சம் திருவாயை மூடுங்கள். ஆங்கிலம் என்பது உலக பொது மொழி. நல்லதை யார் செய்தாலும் பாராட்டும் மனம் வேண்டும் அப்படி இல்லையென்றால் நோனவட்டம் சொல்லாமல் இருங்கள். தமிழ் என்பது எங்கள் சுவாசம் போல, நாங்கள் தமிழை தேவையான அளவு கற்போம். பெரும்பாலான அறிவியல் சார்ந்த பதிப்புகள் ஆங்கிலம் வாயிலாகவே கற்க முடியும். அரசாங்க பள்ளிகளில் ஆங்கிலம் ஊடாக கற்பிப்பதால் தனியார் பள்ளிகளின் திமிர் குறையும். நாங்களும் நிம்மதியாக அரசாங்க பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்போம். தமிழ் தமிழ் என பேசி மக்களை முட்டாளாக்கி விட்டு மு.க வாரிசுகள் மட்டும் ஆங்கில வழி கல்வி. உங்களுக்கு ரொம்ப பாசம் தமிழ் மேல, யப்பா நெனக்கும் போதே புல்லரிக்குது.
17-மே-2013 11:07:40 IST
தயவு செய்து இந்த TASMAC ரேசன் சரக்கு கடையை மூடுங்கள். நான் நல்ல குடிகாரன மாசத்துல ஒரு முறை குடிசுகிட்டு இருந்தேன். இப்போவும் அப்படித்தான் இருக்கேன், ஆனா ஒருசின்ன மாற்றம், இப்போ குடிக்கபோரோமேன்னு நெனக்கும் போதே வாந்தி தொண்டை வரைக்கும் வந்துடுது.
13-மே-2013 21:30:11 IST