Advertisement
தினமலர் முதல் பக்கம் » GUNAVENDHAN அவரது கருத்துக்கள்
GUNAVENDHAN : கருத்துக்கள் ( 158 )
GUNAVENDHAN
Advertisement
மே
16
2013
சினிமா அரை மணி நேரம் நடனமாட 8 கோடி வாங்கிய ஷாரூக்கான்...
ஏமாந்த சோணகிரிகள் நாட்டில் இருக்கும் வரை இவர்கள் காட்டில் ஆடை மழை தான் . 30 நிமிடம் நடனமாட 8 கோடிகளை அள்ளி வீசுகிறான் என்றால் , அவன் எப்படி அந்த பணத்தை சம்பாதித்து இருப்பான் என்று எண்ணிப்பாருங்கள் . 2 ஜி போல எங்கேயோ சுருட்டிய பணமாக இருக்கும் , அல்லது கடத்தல் போன்ற வழிகளில் வந்ததாக இருக்கும் , ஆனால் கஷ்டப்பட்டு சம்பாதித்ததாக மட்டும் இருக்கவே இருக்காது . சுலபமாக வந்த பணம் இப்படி சுலபமாகத்தான் போகும் .   00:02:22 IST
Rate this:
0 members
0 members
48 members
Share this Comment

மே
15
2013
அரசியல் மதுக்கடைகளுக்கு முதல்வர் பெயர் வைக்கும் போராட்டம் விஜயகாந்த் ஆலோசனை
""கேப்டன் மதுக்கடல் "" என்ற பெயர் தான் மிகவும் பொருத்தமாக இருக்கும் .   17:45:26 IST
Rate this:
10 members
0 members
31 members
Share this Comment

மே
15
2013
அரசியல் ஈராண்டு இருண்ட ஆட்சி ஸ்டாலின் குற்றச்சாட்டு
கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தில் நடப்பது இருண்ட ஆட்சி என்று ஸ்டாலின் சொல்லியிருப்பது அவரைப்பொறுத்தவரை, அவர்களது குடும்பத்தை பொருத்தவரை, அவர்கள் கட்சியினரை பொறுத்த அளவில் இருண்ட ஆட்சி தான் . என்றைக்கு சென்ற தேர்தலில் அவர்களை தமிழக மக்கள் செல்லாக்காசுகள் என்று தூக்கி வீசிவிட்டார்களோ, இது போன்ற அட்டூழியம் செய்யும் ஆட்சி தேவையில்லை என்று விரட்டிவிட்டார்களோ, குடும்பமே கொள்ளையில் ஈடுபடுகின்ற ஆட்சி வேண்டாம் என்று ஒட்டிவிட்டார்களோ அன்றையிலிருந்தே ஸ்டாலினுக்கும் , அவரது குடும்பத்துக்கும், அவர்களது கைத்தடிகளுக்கும் வாழ்க்கையே இருண்டு போனது முக்காலும் உண்மை . தமிழகமெங்கும் ஏமாந்தவர்கள் யார் ?, சொத்துக்கு சொந்தக்காரன் வெளிநாட்டில் இருக்கின்றான ? , கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்கு சொந்தக்காரர் மிகவும் வயதானவராக இருக்கின்றாரா ? , என்றெல்லாம் தொண்டித்துருவிப்பார்த்து அந்த சொத்துக்களை , டுப்ளிகட் பத்திரம் தயார் செய்து , பின் தங்கள் பெயருக்கு இப்போதெல்லாம் இந்தம்மா ஆட்சிக்கு வந்த பின்னல் எந்த திமுக காரனாலும் மாற்றிக்கொள்ளல முடியவில்லை , தங்கள் விருப்பம் போல அடுத்தவன் சொத்தை ஏப்பம் விடமுடியாதபடி ஒரு ஆட்சி நடக்கின்றதென்றால் அது ஸ்டாலின் வகையறாக்களுக்கு இருண்ட ஆட்சி தானே, ஸ்டாலின் அதைத்தான் சொல்கிறார். அரசு கேபிள் TV தொடங்குவதாக சொல்லி , பல கோடிக்காணக்கான ரூபாய்களுக்கு அதற்க்கான சாதனங்களையும் வாங்கி , பின் பேரன் சரண்டர் ஆனதால், பேரன் பெரும்தொகையை கொடுத்து சமாதான உடன்படிக்கை செய்துகொண்டதால், அரசு பணம் எத்தனை கொடிகள் வீனாகினாலும் எனக்கு கவலை என்பதே இல்லை என்கிற விதமாக அரசு கேபிளை முடக்கி , தங்கள் குடும்ப தொலைக்காட்சி வருமானம் கெடாமல் பார்த்துகொண்டிருந்தவர்களுக்கு , ஜெயலலிதா தலைமையில் ஒரு ஆட்சி வந்து கோடிக்காணக்கான ரூபாய் கொடுத்து வாங்கிய சாதனங்கள் எல்லாம் பாழாகிறதே என்றும், மக்களுக்கு குறைந்த சிலவில் கேபிள் இணைப்பு கிடைத்திட செய்யவேண்டும் என்று முடிவெடுத்து தமிழகமெங்கும் அரசு கேபிளை இயக்கினால் , கருணாநிதி குடும்பத்தினருக்கு என்ன வெளிச்சமாகவா இருக்கும், இப்படியெல்லாம் தங்கள் வருமானம் குறைந்தால் அந்த ஆட்சி அவர்கள் கணக்கில் இருண்ட ஆட்சி தானே , அதைத்தான் ஸ்டாலின் சொல்கிறார். தமிழக அரசு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ள அரசு பணிகள் தேர்வாணையத்தில் தங்கள் ஆட்களை உட்காரவைத்திருந்து , தங்கள் விருப்பம் போல ஆட்களை தேர்வு செய்துகொண்டிருந்தால் அதில் குற்றம் குறைகளை கண்டு பிடித்து , தேர்வாணையத்தில் ஏகப்பட்ட ஊழல்கள் செய்துகொண்டிருந்தவர்களை கூண்டோடு வீட்டுக்கு அனுப்பிவிட்டு , மக்கள் நலனே முக்கியம் என்று செயல்படக்கூடியவர்களாக தலைவர்களாக நியமித்து , தேர்வாணையத்தை நானயமானதாக, கட்டுப்பாடானதாக மாற்றி தங்கள் பிழைப்பில் மண்ணை போட்டால் அந்த அரசு ஸ்டாலின் குடும்பத்தினரை பொறுத்த அளவில் இருண்ட ஆட்சி தானே திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தன்னுடைய எடுபிடியை அமர்த்தி , சிக்கலில் சிக்கி தவிக்கும் தயாரிப்பாளர்களாக பார்த்து , ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களது படங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி தன் குடும்பத்தில் பலர் கோடிக்கணக்கில் குவித்துக்கொண்டிருக்கும் போது , ஆட்சி அதிகாரம் கையைவிட்டு போய், அதனால் தங்கள் வருமானம் பெருமளவுக்கு குறைந்தால் அடுத்ததாக வந்த ஆட்சி ஸ்டாலின் குடும்பத்தினருக்கு இருண்ட ஆட்சியாகத்தானே தெரியும் . எந்த சாதனையையும் செய்யாமலேயே , சாதனைகள் செய்ததாக தன் அடிவருடிகள் மூலம் , மாதா மாதம் பாராட்டுவிழா எடுத்து குதுகளித்துகொண்டிருந்தவர்களுக்கு, வண்ண வண்ண ஒளியில் , நடிகைகளை ஆடவிட்டு குடும்பத்துடன் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து பொழுதை களித்துக்கொண்டிருந்தவர்களுக்கு , அத்தகைய ஆட்டம் , பாட்டம் எல்லாம் பகல் கனவாகிப்போனால் வெளிச்சமாகவா இருக்கும் , இருண்டு தான் இருக்கும் . குடும்பத்தில் பத்துக்கும் மேற்பட்ட அதிகார மையங்களை வைத்துகொண்டு , தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கிற விதமாக , ஒரு அதிகார மையத்தினை கவனித்து ஒருவர் பதவியோ, அல்லது பதவி உயர்வோ வாங்கிவந்தால், அடுத்த அதிகார மையத்தின் மூலம் அதே பதவிக்கு மாறுதல் கொடுத்து பையை நிரப்பிய காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்தவர்களுக்கு , இப்போது உள்ள ஆட்சி இருண்ட ஆட்சியாகத்தானே இருக்கும் இப்போது மேற்கண்ட பத்துக்கும் மேற்பட்ட அதிகார மையங்களுக்கேல்லாம் பல வழிகளில் வந்து குவிந்துகொண்டிருந்த வருமானம் வராமல், சிலவு மட்டும் வந்து கொண்டிருந்தால் என்ன வெளிச்சமாகவா இருக்கும், எல்லாமே இருண்டதாகத்தான் தோன்றும் . 2 ஜி மெகா ஊழல் ஒன்றை வைத்தே ஒரு தொலைக்காட்சியையே தொடங்கியவர்களுக்கு, அப்படிப்பட்ட சான்ஸ் இப்போது இல்லை , இனி எப்போதும் இருக்காது என்ற நிலைமையில் எல்லாமே அவர்கள் கண்களுக்கு இருட்டாகத்தான் இருக்கும் , இருண்டதாகத்தான் தெரியும் . மத்திய அரசில் பங்கெடுத்துகொண்டிருந்த போது , வருமானம் பார்த்துக்கொண்டிருந்தபோது தங்கள் கண்களுக்கு வெளிச்சமாக , பிரகாசமாக தோன்றிய மத்திய அரசு கூட இனிமேல் இருண்ட ஆட்சியாகத்தான் ஸ்டாலின் கண்களுக்கு தெரியப்போகிறது . இதுபோன்ற கருத்து குருடர்கள் , ஆங்காங்கே பள்ளிகளுக்கு சென்று , இவ்வளவு காலமாக மடிக்கணினியை புகைப்படத்திலும், ஓவியத்திலும் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் கைகளில் வைத்துக்கொண்டு உலகையே அளந்து கொண்டிருப்பதைப்பார்த்தால் தெரியும் இந்த ஆட்சி இருண்ட ஆட்சியா , அல்லது இவர்கள் மனம் தான் இருண்டு போயுள்ளதா என்பது . அந்த மாணவர்களிடம் கேட்டாலே , அடித்து சொல்வார்கள் ஜெயலலிதா ஆட்சி இருண்ட ஆட்சியா ? . அல்லது கருணாநிதியின் அலங்கோலமான ஆட்சி இருண்ட ஆட்சியா என்று. ஒரு பசு மாடு வாங்கினால் கூட பிழைப்பை ஒட்டிவிட முடியுமே , அதுக்கூட முடியாத நிலைமையில் உள்ளோமே என்று தங்கள் வாழ்க்கையே இருண்டுபோனதாக நினைத்து தினம் தினம் மனம் நொந்து கிடந்தவர்கள் வீட்டு முற்றங்களில் விலை உயர்ந்த பசுக்கள் இந்த ஆட்சியில் துள்ளி குதித்தபடி இருக்கின்றது இது வல்லவோ பசுமையான ஆட்சி, வெளிச்சம் தரும் ஆட்சி , கருத்து குருடர்கள் அத்தகைய ஏழை எளியோரை கேட்டாலே சொல்வார்கள் யார் ஆட்சி இருண்ட ஆட்சி என்று . வறண்டு போயிருந்த தங்கள் வீடு முன் , இப்போதைய ஜெயலலிதா அரசால் தங்களுக்கு வழங்கப்பட்ட நாலைந்து ஆட்டு குட்டிகள் துள்ளி ஓடி விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்து பார்த்து , தங்களது வறுமையை இந்த ஆட்டுக்குட்டிகள் போக்கிவிடும் என்று நெஞ்சுயர்த்தி , நிமிர்ந்து உட்காருகின்றானே ஏழை எளியோன் அவனைப்பார்த்து ஸ்டாலின் கேட்டாலே அவன் சொல்வான் யார் ஆட்சி இருண்ட ஆட்சி என்று . தமிழக மக்களை சொல்லொன்னா துயரத்திலாழ்த்திவிட்டு, கோடி கோடியாக குவித்து வைத்துக்கொண்டு கும்மாளமிட்டு கொண்டிருக்கும் ஸ்டாலின் வகையறாக்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது இந்த ஆட்சியை விமர்சிப்பதற்கு ?. ஸ்டாலின் அவர்களே உன் அப்பன் ஆட்சி தான் தமிழகத்தில் இருண்ட ஆட்சி நடந்த காலம் , ஆனால் அந்த ஆட்சி தான் உங்களைப்போன்ற சுயநலவாதிகளுக்கு வெளிச்சமான, சந்தோசமான, ஆடம்பரமான , அட்டகாசமான ஆட்சி என்பதை மக்களும் மறக்க வில்லை . இனி மறந்தும் அத்தகைய இருண்ட ஆட்சியை மக்கள் நாட மாட்டார்கள் , இனியும் ஏமாற்றி பிழைக்கலாம் என்கிற என்னத்தை அடியோடு விட்டொழியுங்கள் , வீணாக இப்படி பிதற்றிக்கொண்டிருக்க வேண்டாம் .    17:36:34 IST
Rate this:
165 members
1 members
60 members
Share this Comment

மே
14
2013
அரசியல் மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய்க்கு பிரமாண்ட சிலை ஜெ., அறிவிப்பு
தமிழ், தமிழ் என்றும் தமிழன், தமிழன் என்றெல்லாம் சொல்லி சொல்லியே தன் வாழ்நாளை எல்லாம் ஒட்டிவிட்ட சுயநலவாதி, எம்ஜியார் அவர்களால் தீயசக்தி என்று தமிழ்நாட்டுக்கு அடையாளம் காட்டப்பட்டவர் செய்யாததை எல்லாம், அவரால் செய்ய முடியாததை எல்லாம் தன் தனித்துவத்தால் இன்று புரட்சிகரமாக செய்து வரலாற்றில் நீங்காத இடம் பிடிக்கவிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களது சீரிய முயற்சிக்கு, தொலைநோக்கு பார்வைக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும். முதலில் செய்தியின் தலைப்பை பார்த்தபோது ஒரு சிலைக்கு 100 கோடிகளா என்று தான் தோன்றிற்று. அமெரிக்க நாட்டின் பெருமையையும், புகழையும் உலகுக்கு பறைசாற்றிக்கொண்டுள்ள சுதந்திரா தேவியின் சிலை போன்ற வரலாற்று பொக்கிஷத்தை தமிழகத்தில், அதுவும் சங்கம் அமைத்து தமிழுக்கு தொண்டாற்றிய, தமிழை பரப்பிய மதுரையில் அமைப்பது என்று முதல்வர் முடிவெடுத்து அறிவித்திருப்பதை கேட்டு, உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவருமே மகிழ்வார்கள், போற்றி புகழ்வார்கள். ஜெயலலிதா அவர்கள் எதை செய்தாலும் மிக சிறப்பாக செய்வதில் வல்லவர் என்பதால், இந்த தமிழ் தாயின் சிலை காலாகாலத்துக்கும் தமிழர்கள் பெருமைகளை உலகெங்கும் கொண்டு செல்கிற விதத்தில் செம்மையாக அமையும் எனலாம். பல நூறு வருடங்களை கடந்தபின்பும் ஜி.யு .போப் போன்றவர்களது தமிழ் தொண்டினை வியந்து பாராட்டிக்கொண்டிருக்கின்றோம். அதே போல் நம் வருங்கால சந்ததியினர் எத்தனை நூறு ஆண்டுகள் ஆனபின்பும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தமிழ் பற்றினையும், அவரால் அமைக்கப்பட விருக்கும் தமிழ் தாய் சிலை பற்றியும் உலகெங்கிலும் பேசுவார்கள், பாராட்டுவார்கள், அக மகிழ்வார்கள் என்பது திண்ணம்.   14:46:35 IST
Rate this:
67 members
3 members
10 members
Share this Comment

மே
13
2013
பொது பா.ம.க., வன்முறையில் பொது சொத்துக்கள் சேதம்இழப்பீடு பெற பட்டியல் தயாரிக்கும் போலீஸார்
ராமதாஸ் & கோ வினரின் அட்டகாசம் தமிழகத்தில் சென்ற வாரம் உச்சகட்டத்தில் இருந்த போதே, 550 பஸ்களை அடித்து உடைத்துள்ளார்கள், 13 பஸ்களை முழுமையாக கொளுத்தியுள்ளார்கள் என்று செய்தி வந்தபோதே , இந்த நட்டத்துக்கெல்லாம் பாமக வினரிடமிருந்து நஷ்ட ஈடு வசூலிக்கவேண்டும் , அதற்க்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் இங்கே கருத்து தெரிவித்திருந்தேன். இப்போதைய நிலவரப்படி 800 க்கும் மேற்பட்ட பஸ்களை உடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது, அரசு இப்போது நஷ்ட ஈடு வசூலிப்பதென முடிவு செய்திருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி . அவர்களிடமிருந்து அரசு நட்ட ஈடு வசூலிக்க முடியுமா ? என்று சிலர் சந்தேகமாக கேட்டுள்ளனர், சென்ற முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே இப்படிப்பட்ட , அராஜகங்களில் எந்த கட்சியாவது ஈடுபடும்போது அவர்களிடம் இருந்து நஷ்ட ஈடு பெற வழி வகை செய்து சட்டமே இயற்றப்பட்டுள்ளது என கருதுகிறேன். எனவே நஷ்ட ஈடு கோரி அந்த சட்டத்தின்படி அவர்கள் மீது வழக்கு தொடருவதில் எந்த பிரச்சினையும் இல்லை . நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்று அவர்கள் மீது முதலில் அரசு வழக்கு பதிவு செய்து , அவர்களிடமிருந்து அத்தொகையினை வசூலிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கட்டும், அவர்கள் நாங்கள் யோக்கியர்கள் , எங்களிடமிருந்து நஷ்ட ஈடு கேட்பது அநியாயம் என்று கோர்டுக்கு போவார்கள் . ராமதாசும் அவரது பேச்சை நம்பி செயலில் இறங்கி இப்போது மாட்டிக்கொண்டு முழிப்பவர்களும் கோர்டுக்கு போய் தாங்கள் அகிம்சாவாதிகள் என்று சொல்லட்டும், கோர்டில் என்ன முடிவு வந்தாலும் பரவாயில்லை . நினைத்தால் பஸ்களை உடைக்கலாம் , பாலங்களை தகர்க்கலாம் , மரங்களை வெட்டி வெட்டி நடு ரோட்டில் போட்டு மக்களுக்கு சொல்லொன்னா துயரத்தை அளிக்கலாம், நம்மை யாரும் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று நினைத்து செயல்படுகின்றார்களே , அந்த நினைப்பு இனி வராதல்லவா ?. இப்படிப்பட்ட அராஜகங்களில் இனி ஈடுபட்டால் நஷ்ட ஈடு வழக்கு பாயும் என்கிற அச்சமாவது இருக்கும் அல்லவா ? எனவே அரசு உடனடியாக நஷ்ட ஈடு வழக்குகளை பதிவு செய்து , முடிந்தால் அத்தகைய செயல்களில் நேரிடையாக ஈடுபட்டவர்களது சொத்துக்களை வழக்கு முடியும் வரை முடக்கி வைத்திட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் . ஒரு முறை இப்படிப்பட்ட வன்முறையில் ஈடுபட்டதாக எந்த கட்சி மீது நஷ்ட ஈடு கேட்டு அரசு சார்பில் வழக்கு பதியப்பட்டு நிலுவையில் உள்ளதோ , அவர்கள் அடுத்த முறை இப்படிப்பட்ட அராஜக நிகழ்சிகள் நடத்த போலீசிடம் அனுமதி கேட்கும் போதே ஒரு கோடி ரூபாய் அல்லது இரண்டு கோடி ரூபாய் முன்பணமாக கட்டினால் தான் அனுமதி கொடுக்க முடியும் என்று சொல்லக்கூடிய விதமாக சட்டத்திலேயே சரத்தினை சேர்க்க வேண்டும்.   15:07:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
12
2013
அரசியல் உயிரோடு தப்பி வெளியில் வந்துவிட்டேன் திருச்சி சிறை வாசலில் ராமதாஸ்
புத்தர் , காந்தி இவர்களுக்கு பின் தோன்றிய அகிம்சைவாதி இவர் தான் , நாம் இதை நம்பவேண்டுமாம். ஆரம்ப காலத்தில் இருந்தே மரங்களை வெட்டி நடுரோட்டில் சாய்த்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்து மக்களுக்கு சொல்லொன்னா thunbaththai கொடுத்துகொண்டிருந்ததிளிருந்தே எல்லோருக்கும் தெரியும் உங்கள் சீடர்கள் என்றாலே மரம் வெட்டிகள் என்று ,அதுதானே உங்கள் அருமை தொண்டர்களின் செல்லப்பெயர் . ஆங்காங்கே மரங்களை வெட்டி சாய்ப்பது, பாலங்களை குண்டு வைத்து தகர்ப்பது , பஸ்களை எரிப்பது போன்ற வழக்கமாக நீங்கள் செய்யும் எல்லா வேலைகளையும் இம்முறையும் கனகட்சிதமாக செய்துள்ளீர்கள், ஆனால் இப்போது எங்கே நமக்கு 2 கோடி கட்டு , 3 கோடி கட்டு என்று உடைத்த பஸ்களுக்கெல்லாம் கணக்குபோட்டு நோட்டீஸ் அனுப்பிவிடுவார்களோ என்கிற பயம் வந்துவிட்டதால் மாற்றி பேச தொடங்கிவிட்டார் . தமிழக அரசும் , விடுதலை சிறுத்தைகளும் சேர்ந்து பஸ்களை உடைத்துவிட்டு இவரது கட்சியினர் உடைத்ததாக பழி போடுகிறார்களாம் . ஐயோ பாவம் எவ்வளவு அப்பாவிகளாக இருக்கின்றார்கள் இவரும் , இவரது கட்சியினரும் , யாரோ உடைத்த பஸ்களுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் ஜெயிலில் இருக்கின்றார்களாம் . இவரது பேச்சை அப்பாவித்தனமான பேச்சு என்று எடுத்துக்கொள்வதா ? சிறுபிள்ளைத்தனமான பேச்சு என்று எடுத்துக்கொள்வதா ? அல்லது பைத்தியக்காரத்தனமான பேச்சு என்று எடுத்துக்கொள்வதா ? ஜெயிலுக்கு போய் வந்ததில் சித்தம் கலங்கிய நிலையினதான பேச்சு என்று எடுத்துக்கொள்வதா ?. ஆங்காங்கே பஸ்களை இவர்கள் கட்சியினர் அடித்து நொறுக்குவதையும், சில இடங்களில் பஸ்களை எரித்ததையும் தமிழக மக்களே நேரிடையாக கண்கூடாக கண்டார்களே இப்போது இப்படி பேசுவதற்கான ஒரே காரணம் , சில நாட்களாகவே தமிழகமெங்கும் , பொது சொத்துக்களை நாசப்படுத்தியதர்கான நஷ்ட ஈட்டை இவர்களிடமிருந்து தமிழக அரசு தயவு தாட்சண்யமில்லாமல் வசூல் செய்ய வேண்டும் என்கிற குரல் ஒலிக்கத்தொடங்கிவிட்டிருப்பது தான் . பெரும் துன்பத்திலிருந்து தப்பிப்பிழைத்து உயிரோடு வந்துவிட்டதாக பேட்டி கொடுத்துள்ள இதே ராமதாஸ் தான் , மாமல்லபுரத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரமான 9 மணியை தாண்டி பத்தரை மணிக்கு மேல் பேச மைக்கை பிடித்தவர் வீராவேசமாக , திமிராக , தான்தோன்றித்தனமாக உதிர்த்த வார்த்தைகளை இப்போது எண்ணிப்பார்க்கின்றேன், "" நான் இப்போது { தாமதமாகத்தான் }தான் பேசுவேன், முடிந்தால் என்னை கைது செய் "" என்றாரே அப்போதே சனி அவர் வாயில் இருந்து வெளிவந்து போலிசுக்கு அறைகூவல் விடுத்துவிட்டது . சரி அன்றைக்கு தான் தன் ஜாதி கட்சியினர் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் தன்னை யாருக்கும் தலைவணங்காத தலைவனாக, வீரத்தின் முழு உருவமாக தன்னை காட்டிக்கொள்ள அப்படி பேசினார் என்றால் , அடுத்த நாள் இவர் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தபோவதாக அறிவித்தபோதாவது கொஞ்சம் நிதானத்தை கடைபிடித்திருக்க வேண்டாமா ? ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதி கொடுக்கவில்லை என்று தெரிந்தும், பத்திரிகை நிருபர்கள் கேட்க்கும் போது , அனுமதி கொடுக்காவிட்டாலும் நான் போராட்டம் நடத்துவேன் என்று ஆணவமாக சொல்லியபடி சென்றது அவரது தவறு தானே . தமிழக அரசும் , விடுதலை சிருத்தைகலுமா அவரை அப்படி சொல்லச்சொன்னார்கள் ? அடுத்ததாக இவரை போலிஸ் கைது செய்தபோது இவர் சொன்ன வார்த்தைகள், "" நான் சிறைக்கு போக தயாராகத்தான் வந்துள்ளேன் "" என்பது . சிறைக்கு போக தயாராகத்தான் வந்துள்ளேன் என்று இறுமாப்புடன் சொன்னவர் நினைத்தது வேறு நடந்தது வேறு , கைது செய்து மாலை விட்டுவிடுவார்கள் என்று நினைத்து அப்படி ஏகத்தாளமாக சொல்லியிருப்பார் சிறைக்கு போகத்தயாராக வந்துள்ளவரை வீணாக மனச்சங்கடத்தை ஏற்படுத்தவேண்டாம் என்று அவர் ஆசைப்படியே சிறைக்கு அனுப்பிவிட்டார்கள் காவல் துறையினர் என்று கருதுகிறேன். எல்லாம் இவர் விருப்பப்படியே தான் நடந்தது , இப்போது அப்பாடி , அம்மாடி என்று அலறுவது ஏன் ? தமிழகத்தில் எத்துணையோ கட்சிகள் இருக்கின்றன, எல்லா கட்சிகளுக்கும் தலைவர்கள் இருக்கின்றார்கள், ஆனால் இவரைப்போல ஒரு தலைவரை பார்ப்பது முடியாத செயல் . 10 நாள் A வகுப்பு சிறையில் வசதியாக இருந்துவிட்டு வெளியே வந்து எண்ணமாக ஆர்ப்பாட்டமெல்லாம் பண்ணுகிறார், சிறைச்சாலை க்கு போக தயாராகத்தான் வந்தேன் என்றவர் , சிறைச்சாலைக்கு டூர் போவதாக நினைத்து வந்தாரா ?. தன் கட்சி தொண்டர்களை உசுப்பேற்றி , உசுப்பேற்றி இத்தனை வருடங்களாக சிறையில் தள்ளிக்கொண்டிருந்தாரே அவர்கள் சாதாரண வகுப்பு சிறையில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருப்பார்கள் என்பதையெல்லாம் இத்தனை வருடங்களாக இவரும் , இவரது மகனும் கொஞ்சமாவது நினைத்து பார்த்திருப்பார்களா ? இவர்கள் பேச்சை வேத வாகாக எண்ணி மரங்களை வெட்டியும் , பாலங்களை தகர்த்தும் , பஸ்களை உடைத்தும் தொடர்ந்து ஜெயிலுக்கு போய் கொண்டிருந்தார்களே இவரது கட்சியினர் அவர்களுக்காக ராமதாஸ் என்ன செய்தார் ? இரண்டு திராவிட கட்சிகளுடனும் கூட்டு இல்லை என்று இன்று சொல்லும் இவர் , முன்பு இரண்டு திராவிட கட்சிகளின் தோளில் ஏறிக்கொண்டு தானே டில்லிக்கு சென்றார், மத்திய அரசில் மந்திரி பதவிகளை கேட்டு , கேட்டு பெற்றார். பாராளுமன்ற அனுபவமே சிறிதும் இல்லாத இவர் maganai மத்திய அரசில் kebinat அமைச்சராக்கினாரே , பதவி சுகத்தை இவரது குடிம்பத்தினர் முழுமையாக அனுபவித்தார்களே, அப்போதெல்லாம் இவரது கட்சியின் அடிமட்ட தொண்டனை பற்றி நினைத்து பார்த்ததுண்டா ? அன்புமணி ராமதாஸ் பதவியில் இருந்தபோது இவர்களை சின்ன சின்ன உதவிகளுக்காக கட்சி முக்கியஸ்த்தர்கள் அணுகியபோது எப்படியெல்லாம் எரிந்து விழுந்தார்கள் என்று கட்சியினர் புலம்பினார்களே , அன்றைக்கு அவர்களை புலம்பவிட்ட பாவத்துக்கு இன்று இவர் புலம்புகிறார் . அண்ணா.தி.மு.க 39 பாராளுமன்ற தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெராதாம், ஆனால் இவரது கட்சி 10 இடங்களை பிடித்துவிடுமாம் . பாவம் மனுஷன் ஜெயிலில் இருந்து வெளியே வந்தபின் அதிகமாகவே புலம்பத்தொடங்கிவிட்டார் என்று கருதுகிறேன். நாட்டு மக்கள் இவர் மீதும் , இவரது கட்சி மீதும் எந்த அளவுக்கு ஆத்திரத்தில் உள்ளார்கள் என்பதெல்லாம் மனுஷனுக்கு ஒன்றுமே தெரியாது போலிருக்கின்றது . கனவு காண்கிறார் 10 தொகுதிகளில் வெற்றி பெறப்போவதாக . 10 தொகுதி அல்ல, தனியே தான் போட்டியிடுவோம் என்று கொக்கரிக்கின்றாரே , அவர் சொன்ன சொல்லை மாற்றாமல் தனித்து போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமாவது வெற்றிபெறட்டும் பார்க்கலாம் . இன்றைய நிலைமையில் அவரது கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பது தான் உண்மை . தமிழக மக்கள் மனைகளில் மரம் வெட்டி கட்சியாக இருந்த நீங்கள் சில வருடங்களாக ஜனநாயக அரசியல் பாதைக்கு வந்து விட்டதாகத்தான் எல்லோருமே நினைத்திருந்தனர், அனைவரது எண்ணத்தையும் பொய்யாக்கி, நீங்கள் பழைய மரம் வெட்டி கட்சி தான் என்பதை நாட்டு மக்களுக்கு இப்போது நிருபித்துவிட்டீர்கள், ஆகவே இனி நீங்கள் தமிழக மக்கள் மனங்களில் இடம் பிடிப்பது என்பது எட்டாக்கனி தான் .    14:57:28 IST
Rate this:
73 members
4 members
66 members
Share this Comment

மே
10
2013
பொது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பா.ம.க., எம்.எல்.ஏ.,குருவை கைது செய்ய உத்தரவு
இங்கு வினோத் எனும் வன்னியர் மிக அருமையான கருத்தினை பதிவு செய்துள்ளார். வன்னியர்களிடம் தங்கள் செல்வாக்கு குறைந்துவிட்டதால் , அதை ஈடுகட்ட அவர்களை மற்ற சாதியினரிடம் மோதவிடுவது, மரம் வெட்டி சாய்ப்பது, பாலங்களை தகர்ப்பது , பஸ்களை அடித்து நொறுக்குவது, பஸ்களை கொளுத்துவது போன்ற ஈனத்தனமான வேலைகளை செய்கின்றனர். ஆனால் வன்னியர்களில் பெரும்பாலோர் ராமதாஸ் கட்சியினரின் அருவருக்கத்தக்க செயலை ஆதரிக்கவில்லை என்பதைத்தான் வினோத் அவர்களின் கருத்து படம் பிடித்து காட்டுகின்றது . வன்னியர்களே உங்கள் மீது மக்களில் யாருக்கும் கோபமில்லை, எங்கள் கோபமெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சி என்ற போர்வையில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது தான் . வன்னிய இளைஞ்சர்களே இந்த வீணர்களின் வாய் சவடாலில் மயங்கி அவர்கள் பேச்சை கேட்டு வன்முறை பாதைக்கு போய்விடாதீர்கள் , உங்களை காப்பாற்ற தலைவர்கள் யாரும் வர மாட்டார்கள் . ஜாக்கிரதை .   21:23:32 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
10
2013
அரசியல் ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து பன்சால் ராஜினாமா அடுத்து அஸ்வினி?
அப்பாடா , ஒருவழியாய் இடத்தை காலி செய்ய ஒப்புக்கொண்டாரே பெரிய மனிதர்கள் போர்வையில் உள்ள சின்ன மனிதர்கள் . ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டதால் இவர் ராஜினமா செய்வதால் காங்கிரஸ் தூய்மையடைந்து விடாது . இன்னமும் எவ்வளவோ அக்கப்போர்கள் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வர வேண்டியுள்ளது, வரிசையாக வரும் . ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்களே அதுபோன்று இப்போது கர்நாடகாவில் காங்கிரசுக்கு கொண்டாட்டமாக உள்ளது . வரிசையாக ஊழல் திமிங்கிலங்கள் மாட்டிக்கொண்டிருக்கும் நிலைமையிலும் காங்கிரசுக்கும் ஒட்டு போட மக்கள் இருக்கின்றார்களே என்பதை நினைத்தால் தான் வேதனையாக இருக்கின்றது .   21:03:54 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

மே
8
2013
அரசியல் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பா.ஜ.,விலிருந்து நிரந்தரமாக நீக்கம்?
பிரபலமான வக்கீல் என்பதால் ராஜ்யசபா உறுப்பினராக்கினார்கள் , தன்னை பதவி கொடுத்து அழகு பார்த்த கட்சியையே கேலியும் கிண்டலும் செய்து இவர் பெரிய மனிதர் போல வெளிஉலகுக்கு காட்டிக்கொள்ளவேண்டும் என்றால் என்ன நியாயம் ?. கட்சிக்கு கட்டுப்படாதவர்களை எல்லாம் கட்சியின் தொடர்ந்து வைத்திருந்தால் மற்றவர்களும் கேட்டுவிடுவார்கள் , எனவே இவரை நிரந்தரமாக கட்சியை விட்டு நீக்க முடிவெடுத்திருப்பது சரிதான்.   21:37:02 IST
Rate this:
2 members
0 members
34 members
Share this Comment

மே
6
2013
அரசியல் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் நடத்துவது நாடகமா? உளவுத்துறை போலீசார் சந்தேகம்
மேற்கண்ட இருவருமே தங்கள் தங்கள் ஜாதி அமைப்புகளில் இப்போது பழைய செல்வாக்கில் இல்லை , சுமார் 30 to 40 சதவிகித அளவுக்கு செல்வாக்கு சரிந்துவிட்டது , எனவே இருவரும் பேசி வைத்துக்கொண்டு இரண்டு பக்கமும் சூடேற்றி , தங்கள் நிலையை சரிசெய்துக்கொள்ள முடிவெடுத்து செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை , ஆனால் போகும் போக்கை பார்க்கும்போது அப்படி இருக்காது என்று நம்பவேண்டிய விதத்திலும் சில காரியங்கள் அரங்கேறியுள்ளது. எது எப்படி இருந்தாலும் , இந்த இருவருமே தமிழகத்தை பின்னோக்கி இழுத்துசெல்கின்றார்கள் என்பது தான் உண்மை. தமிழகத்தில் உள்ள மற்ற ஜாதியினர் யாருமே இந்த இருவரையும் ஆதரிப்பதே இல்லை என்பது நிதர்சனம் . ஆனால் இந்த இருவரும் ஏதாவது ஒரு திராவிட கட்சியை பிடித்துக்கொண்டு , தேர்தல் நேரத்தில் கூட்டு சேர்ந்து போட்டியிடும் போது , எந்த திராவிட கட்சியுடன் கூட்டு வைத்து போட்டியிடுகின்றார்களோ அந்த கட்சியினரின் ஓட்டுக்கள் இவர்களுக்கு முழுமையாக விழுந்து விடுகின்றது, அதில் தப்பிப்பிழைத்து வெற்றிபெற்றுவிடுகிரார்கள். ஒன்று இந்த ஜாதி கட்சிகளை எந்த பெரிய கட்சியும் தங்கள் கூட்டணியில் சேர்க்கக்கூடாது, அல்லது அப்படி எந்த கட்சியாவது இவர்களை தங்கள் கூட்டணியில் சேர்த்தாலும் மக்கள் இவர்கள் எந்த கூட்டணியில் நின்றாலும் சரி இவர்களை தோற்கடித்து பாடம் புகட்டவேண்டும் . இந்த இரண்டில் ஒன்று நடந்தால் போதும் , இவர்கள் தானாக கொஞ்ச நாளில் காணாமல் போய்விடுவார்கள். மக்கள் மனது வைத்தால் இவர்களை சுத்தமாக அரசியலில் இருந்து அப்புறப்படுத்திவிடலாம் . வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்த இரு கட்சிகளும் எந்த கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டாலும் , ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறப்போவதில்லை .   21:34:07 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment