கரெக்ட் தான்.. இந்தக் காலத்துல கல்யாணம் பண்ண பொம்பளையை விட ஆம்பிளைதான் ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கு... கல்யாணம் பண்ணி மாட்டிகிட்டு ஆயுசுக்கும் ஆயுள் கைதி ஆகிடாதீங்க...
23-மே-2013 12:12:10 IST
அருமையான கண்டுபிடிப்பு.. ஆனால் மாணவ மணிகளின் எண்ணற்ற கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாகி வழக்கம் போல் அரசால் செயல் படுத்தப்படாமலேயே போய்விடப் போகிறதே என்று வேதனையாக இருக்கிறது...
22-மே-2013 11:18:21 IST
தலைவரே.. திமுக ஆட்சியில் நாங்கள் வெறும் திட்டங்கள்தான் போடுவோம், ஆனா திட்டங்களை அதிமுக தான் செயல்படுத்தணும்.. ஏன்னா எனக்கு என்னோட குடும்ப சண்டையை தீர்த்து வைக்கறதுக்கே நேரம் பத்தலை'ன்னு சொல்லாம சொல்லிடீங்க.. இதுல எனக்கு டவுட்டே இல்ல...
22-மே-2013 11:14:24 IST
1 லட்சம் சம்பளமா.... அது ஒரு கவுன்சிலரோட ஒரு மாச "இன்கம்"'ங்க... இன்னும் ஜாஸ்தியா கேளுங்க.. ஒரு விஷயம்: (1) கல்வித் தகுதி குறைந்தது டிகிரி (2) நேரந்தவறாமை, (3) ஒழுக்கம், (4) கொடுக்கப்படும் பணிகளைத் திறமையாகவும் குறித்த நேரத்திற்குள்ளும் முடிக்கும் திறமை (5) நிர்வாகத் திறமை (6) ஆளுமைத் திறன் (6) எந்த சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப் பட்டிருக்கக் கூடாது... - இதெல்லாம் எதற்கான தகுதிகள் தெரியுமா? ஒரு சாதாரண தனியார் நிறுவனத்தில் 5,000 ரூபாய் மாத சம்பளத்தில் ஒரு எழுத்தர் பணிக்கான தகுதிகள்... இதில் ஒன்றாவது நமது MLA-க்களிடம் இருக்குமா?
16-மே-2013 12:37:06 IST
ராஜன், சரவணன் கேட்டது சரியான கேள்வி... மற்ற மாநிலங்கள் தமது வருவாயைப் பெருக்க டாஸ்மாக் நடத்துகின்றனவா என்ன? அப்படி வரும் பணத்தின் மூலம்தான் இலவசங்கள் தரப்பட வேண்டுமென்றால் அந்த இலவசங்கள் தேவையே இல்லை... இது அனைத்து நடுநிலையாளர்களின் கருத்து... குடிப்பது தனி மனித ஒழுக்கம் சம்பந்தப் பட்டதுதான்.. ஆனால் அதை டாஸ்மாக் மூலம் மறைமுகமாகத் தூண்டுவது எந்த விதத்தில் நியாயம்? எளிதாகக் கிடைக்கிறதே என்று குடிக்க ஆரம்பித்து, முழுநேரக் குடிகாரன் ஆனவன்தான் இன்று தமிழகத்தில் அதிகம்... நீங்கள் சொல்வது போல் டாஸ்மாக் வைப்பது சரி என்று பட்டால் அரசாங்கம் கஞ்சா செடிகளையே பயிரிடலாமே... மதுவை விடவும் கஞ்சா மூலம் அதிகப்படியான வருவாயும் வரும், வளர்ச்சி பணிகளையும் நன்கு நிறைவேற்றலாம் அல்லவா...
16-மே-2013 12:12:20 IST
நாட்டுல எவ்ளோ பிரச்னை இருக்கு.. நண்பர் சுரேஷ் குமார் சொன்னது மாதிரி, உழைப்பவனும், விவசாயியும் சாகறான்.. இடைல பொருளை மாதி விடும் தரகர்கள் கொழிக்கிறாங்க... இந்தமுறை சத்தியமங்கலம், புளியம்பட்டி பக்கம் போனபோது, விவசாய நிலமெல்லாம் பிளாட் போட்டு விக்கறதைப் பார்த்து மனசு கலங்கிடுச்சு... பண்ணாரி'ல இருந்து பவானிசாகர் அணைக்கட்டு வழியா மேட்டுப்பாளையம் போனா பச்சைப் பசேல்னு வயல்களும், காடும் இருக்கும்... இப்போ எல்லாம் வறண்டுபோய் கருகி நிக்கறதைப் பார்த்து சகிச்சுக்க முடியலை... 200 அடி, 300 அடி'ல கெடச்சுட்ருந்த நிலத்தடி நீர் இன்னைக்கு 1000, 1200 அடிக்கு கீழ போய்டுச்சு... குடிநீர் மற்றும் மழை நீர் மேலாண்மை'ல நாம செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கு... இல்லன்னா மூணு வேளையும் சாப்பாட்டுக்கும் தண்ணிக்கும் பதிலா மருந்து மாத்திரை கண்டுபிடிப்பாங்களா'ன்னு எதிர்பார்த்து உக்காந்துருக்க வேண்டியதுதான்...
16-மே-2013 11:50:58 IST
மங்கை மாமியார் மட்டுமல்ல, கணவன் கூட பாவம் தான்... விடுங்கள் நண்பர்களே.. நல்ல நோட்டுக்கு நடுவுல சில கள்ள நோட்டுகள் இருக்கற மாதிரி, பல நல்ல பெண்கள் மத்தியில் இப்படியும் சிலர்...
10-மே-2013 18:53:21 IST
மங்கை, உங்கள் கேள்விக்கு ஒவ்வொன்றாக, ரொம்ப சிம்பிளாக பதில் சொல்கிறேன்.... மருமகள் தன் மாமியாரை துவேஷமாகப் பார்ப்பது போல் எந்த மருமகனும் தன மாமியாரை அவ்வாறு பார்ப்பது இல்லை... அம்மா என்று பர்ர்க்காவிட்டாலும் சத்தியமாக விரோதியாகப் பார்க்க மாட்டான்.... மருமகள் ஒரு அம்மாவாக மாமியாரைப் பார்க்க வேண்டாம்.. அட்லீஸ்ட் எதிரியைப் போலாவது பார்க்காமல் இருக்கலாம் அல்லவா.. அதற்காக மாமியார் செய்வது எல்லாமே சரியென்று நான் சொல்லவில்லை... ஆனால் அப்பிராணியாக இருக்கும் எத்தனை மாமியார்கள், தமது மருமகள்கள் மூலம் துன்பம் அனுபவிக்கிறார்கள் என்று தெரியுமா? சும்மா வாதத்திற்கு ஆண்களை சாடலாம்... ஆனால் நிதர்சனம் என்று ஒன்று உண்டு... புரிந்துகொள்ளுங்கள்... அடுத்ததாக நீங்கள் சொல்லும் "the so called investment"... பையன் பெத்த பையனை ennamo L.I.C. பாலிசி மாதிரி பேசறீங்க.. முதல்'ல செலவு பண்ணதுக்கு பின்னாடி பார்த்துக்கிட்டாதான் பையன், இல்லன்ன அவனுக்கு பெற்றோர் கிட்ட மரியாதை கிடைக்காதுங்கறீங்க... பெற்றோரை வெச்சுக் காப்பாத்த வேண்டியது மரியாதைக்காக இல்லங்க.. அது பையனோட கடமை... ஒருவேளை அவன் நல்ல சம்பாதிச்சும் பெற்றோரைப் பார்த்துக்காம போனா அதுக்கு காரணம் அவனோட மனைவிதான்... முதியோர் இல்லம்'ன்னு ஒண்ணு இருக்கு... என்னைக்காவது அங்க போய் பார்த்துருக்கீங்களா.. நான் ஒவ்வொரு விசேஷத்துக்கும் அங்க போய் nidhi உதவி செய்வேன்.. அங்க இருக்கறவங்கள்ள பெரும்பாலானோர் சொல்றது இதுதான்... "மருமகள் அடிச்சு வெரட்டிட்டா"... உங்களை சொல்லி தப்பில்லை... உங்களுக்கு ஒரு அண்ணன் இருந்து அவன் கல்யாணம் பண்ணி இருந்தா ஒரு ஆம்பிளையோட கஷ்டம் என்ன'ன்னு தெரிஞ்சுருக்கும்...
08-மே-2013 15:50:18 IST