"அ.தி.மு.க., அரசை எல்லாவற்றிலும், நான் ஆதரிக்கவில்லை. கூடங்குளம் அணு மின் நிலையம் பிரச்னையில், ஆரம்பத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அண்ணா நூலகத்திற்கு இடையூறு செய்திருக்கக் கூடாது" சொல்வது சரி. ஆனால் இது தவிர வேறு சில குறைகளும் உண்டு. மந்திரி சபையில் தகுதியானவர்களே இல்லை. முதல்வர் ஜெயா ஒருவரே நிர்வாகத்தை கவனிக்க முடியாது. மின் வெட்டில் இந்த அரசும் சரியாக திட்டமிடவில்லை. திட்டக்குழு சிறப்பாக செயல்படவில்லை. சமீபத்தில் திட்ட குழு உறுப்பினர் ஒருவர் மனம் வெதும்பி ராஜினமா செய்து விட்டார் என தினமலர் செய்தி வந்தது. முதல்வரின் அணுகுமுறை மத்திய அரசுடன் சரியில்லை. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பா.ஜ.க அணியில் இருந்தாலும், தேவையான சமயத்தில் மத்திய அரசுடன் இணங்கி காரியம் சாதிப்பது போல் தமிழக் முதல்வரும் செய்ய வேண்டும். காவிரி பிரசினை, மின் வெட்டை முன் வைத்தால் அதிமுகவுக்கு எதிராக முடியும். அதிமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜெயிக்க வேண்டுமானால் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டும். மந்திரி சபை, ஆலோசகர்கள் அளவில் மாற்றம் வேண்டும். நல்ல நிர்வாகம்தான் ஓட்டு கொடுக்கும். குஜராத், பீகார் மாநிலத்தில் திரும்ப திரும்ப வெற்றி பெறுவது நல்ல நிர்வாகத்தை வைத்து... பீகார் தமிழ் நாட்டை விட பின் தங்கிய மாநிலம், ஆனாலும் இலவசம் இல்லாமல் நிதிஷ் வெற்றி பெறுகிறார். ஓட்டுக்கு பணமோ, இலவசமோ உதவாது. கருணாநிதி கொடுக்காத இலவசம் இல்லை. கருணா நிதி கொடுக்காத பணம் இல்லை...அதிமுக பா.ஜ.கவுடன் கூட்டு வைத்தால், மோடி பிரதமர் என்றால் ஓட்டு விழும்.
15-ஜன-2013 06:41:18 IST
காவிரியை தற்காலிக ஓட்டுக்காக யோசிக்காமல், நிரந்தர தீர்வு என்று யோசிக்க வேண்டும். பொதுவாக மழை குறைந்து வருகிறது. ஆனால், காவிரி பாசன நில பரப்பு அதிகம் அதிகம் ஆகி விட்டது. கர்நாடகாவில் மண்டயா மாவட்டம் 1960, 70 களில் இவ்வளவு தண்ணீர் உபயோக்படுத்தபடவில்லை. அப்போது, தமிழக அரசு பேசாமல் இருந்து விட்டது. சுப்ரீம் கோர்டில் சென்று போராடி நம் உரிமையை நிலை நாட்டினால் பத்தாது. இந்த வருடம் பெங்களூரில் குடிக்க தண்ணீர் இல்லை. அப்புறம் என்ன செய்ய முடியும்? தமிழக மற்றும் கர்நாடக அரசு மாற்று பயிர் செய்ய (தண்ணீர் குறைவாக செலவாகும்) மத்திய அரசை நிதி கொடுக்க நிர்பந்திக்க வேண்டும். மழை காலங்களில் நீர் வீணாகிறது. இதை தமிழ் நாட்டில் உள்ள ஏரி, குட்டிகளை நிரப்பி (காவிரி நீர் வைத்து) நிலத்தடி மட்டத்தை உயர்த்தாலம். வெறும் ஓட்டுக்கு இந்த விவாகரத்தை கையில் எடுத்தால் ஓட்டு கிடைக்காது.
13-ஜன-2013 07:45:48 IST
காங்கிரஸ் + தே.தி.மு.க + திமுக ஒரு அணி என்ற நிலை உருவாகும்போது, மிக கடுமையான போட்டி இருக்கும். அதிமுக ஆட்சி பொறுத்தவரை திமுக ஆட்சியை விட சட்டம் ஒழுங்கு பரவாயில்லை. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆதிக்கம் இல்லை. இன்னும் சிறப்பாக ஆட்சி இருக்க மின் வெட்டு தீர வேண்டும், திறமையான மந்திரிகள் இருக்க வேண்டும், பொது பிரசினைகலான டெங்கு போன்றவை ஒழிக்கப்பட வேண்டும்....ஆட்சி சிறப்பாக இருந்தால் மக்கள் அதிமுகவுக்கு ஓட்டு போடுவார்கள். அதிமுக + பா.ஜ.க கூட்டணி நன்றாக இருக்கும். மோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஓட்டு கூடி விழும்...
01-ஜன-2013 06:38:31 IST
எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளை குறை சொல்வது நம் பழக்கம் ஆகி விட்டது. நம்மில் எத்தனை பேர் சுத்தம்? கடையில் பொருள் வாங்கும்போது ரசீது கேட்டு வாங்குகிறோமா? இதுவும் வரி ஏய்ப்புதானே? எத்தனை டாக்டர் பில் கொடுக்கிறார்கள்? தனியார் பள்ளியில் எவ்வளவு பணம் கொடுத்தாவது பிள்ளைகளை படிக்க வைக்கவில்லையா? சாலை விதிமுறைகளை எத்தனை பேர் கடை பிடிக்கிறோம்? ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்வதில்லையா? நம் குறைகளை மறைக்க அடுத்தவர்களை குறை சொல்வது பழக்கம் ஆகி விட்டது.
31-டிச-2012 09:48:06 IST
முதல்வர் ஜெயா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச விட்டால் இந்த சந்தேகம் வராது. சமீபத்தில் நடந்த கலெக்டர்/எஸ்.பி மாநாட்டில் மந்திரிகள் ஒருவர் கூட பேசவில்லை என்று ஒரு பெரிய பத்திரிகை எழுதி இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதல்வர் மத்திய அரசை குறை சொன்னால் சந்தேக கண்ணுடன் பார்க்க வேண்டியுள்ளது. குற்றசாட்டு என்பது இருமுனை கத்தி.
27-டிச-2012 13:10:56 IST
திமுக (20 சீட்டுகள்?) + காங்கிரஸ் (10 சீட்டுகள்?) + தேதிமுக (10 சீட்டுகள்?) ஓர் அணி , மறு பக்கம் அதிமுக (30 சீட்டுகள்?) + பா.ஜ.க (5 சீட்டுகள்?) + ?? (5 சீட்டுகள்?) ஓர் அணி என்று உருவாகி வருகிறது. பிரதமர் வேட்பாளர் யார் (பா.ஜ.கவில் மோடி, ஜெட்லி, சுஷ்மா, காங்கிரசில் ராகுல், சிதம்பரம், ஷிண்டே...), கடந்த ஒன்றரை ஆண்டில் அதிமுக ஆட்சி குறித்து மக்கள் திருப்தி, மின் வெட்டு, சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்சினைகள்தான் வரும் தேர்தல் முடிவை தீர்மானிக்கும். போட்டி கடுமையாக இருக்கும்.
24-டிச-2012 06:08:56 IST