வெற்று பேச்சு பேசும் வசதி படைத்தவர்கள் ஒட்டு போடுவதில் அக்கறை காட்டுவதில்லை. ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் மட்டுமே ஒட்டு போடுவதில் 80% ஆவர். ஒட்டு போட்டவர்களை அரசியல்வாதிகள் ஏமாற்றுவதால் ஒட்டு போடுவதில் ஆர்வம் குறைந்து வருகிறது.
07-ஏப்-2013 12:39:20 IST
தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிதான் ஜெயிக்க வைத்து AC வாகனம், AC சட்டசபை, போலீஸ் பாதுகாப்பு அரசாங்க எடுபிடிகள் இவை எல்லாம் மக்கள் வரி பணத்தால் செலவு செய்து கொண்டு கடமையை செய்ததற்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்து கொண்டு அதற்க்கு வந்து போகும் செலவு, விழா செலவு கோடி கணக்கில் செய்வதில் யாருக்கு புண்ணியம். இந்த செலவை டெல்டா மாவட்ட விவசாயிக்கு நிவாரணம் கொடுத்தால் எவ்வளவு நல்லது. விழா ஏற்பாடு செய்தவனும், பாராட்டு பெற்றவர்களும் அவ்வளவு அறிவு ஜீவிகள். யாருக்கும் மக்கள் மேல் அக்கறை இல்லை. தன்னை பாராட்டி மக்கள் மத்தியில் விளம்பரம் தேடிக்கொள்வது தான் முக்கியம். மக்கள் திருந்த வேண்டும். சிந்திக்க வேண்டும். பட்டினியால் வாடும், விவசாயத்தால் நொடித்தவர்களை கேட்டால் தெரியும் இந்த விழா அவசியமா?.
10-மார்-2013 12:51:18 IST
தேனை எடுத்தவன் புறம்கையை நக்காமலா இருப்பான்?. லஞ்சம் வாங்கியே பழகிய நமது ஆட்கள் சும்மா இருப்பார்களா? சிபிஐ விசாரணை கண் துடைப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
12-பிப்-2013 18:19:22 IST
ஒரு அமைப்பை வைத்துகொண்டு மிரட்டும் கும்பலுக்கு அரசு பயப்படுகிறது என்றால் அரசை நிர்வகிக்கும் நிர்வாகி லாயக்கில்லை என்று அர்த்தம். கூடங்குளம் பிரச்சனையில் ஜெயலலிதா மத்திய அரசை மிரட்ட போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்தார். அதை போலவே விஸ்வரூபம் பிரச்சனையில் முஸ்லிம் பிரச்சனையை வளரவிட்டார். ஆனால் அதுவே அவருக்கு இவ்வளவு சிக்கலுக்கும் காரணம். யாரையும் அடிபணிய வைக்க பிரச்சனையை வளரவிட்டு பின்பு சரிசெய்வது ஜெயலலிதாவின் வழக்கம். கமலின் பிரச்சனையில் ஜெயலலிதாவின் அணுகு முறையை மக்களும் சரி, திரைத்துறையினரும் சரி யர்ருக்கும் பிடிக்கவில்லை என்பது கமலுக்கு கொடுக்கும் ஆதரவில் இருந்து தெரிகிறது. எதிர் கட்சிகளை பொய் குற்றம் சாட்டி சிறையில் தள்ளும் பொது. முஸ்லிம் அமைப்புகளுக்கு அரசு அடிபணிந்தால் நாளை யார் வேண்டுமானாலும் ஏதாவது காரணம் சொல்லி மிரட்ட வருவார்கள் என்பது ஜெயலலிதாவுக்கு தெரியாதா? வரும் தேர்தலில் முஸ்லிம் அமைப்பை யார் கூட்டணியில் சேர்த்தாலும் அவர்களுக்கு தோல்வி என்பது நிச்சயம்.
01-பிப்-2013 15:00:41 IST
முதலில் மனிதன் அப்புறம் தான் மதத்தை பார்க்க வேண்டும். கமல் எப்பொழுதுமே மனிதனை தான் நேசித்துள்ளார். மதத்தையோ அல்லது ஜாதியையோ பார்த்தது இல்லை. சில முஸ்லிம் அமைப்புகள் அரசியல் செய்வதற்கும் தங்களை முஸ்லிம் மக்களின் காவலன் என்று பறை சாற்றி கொள்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உண்மையில் திரைபடத்தில் பாடல் வருகிறது அதைப்போல ஒருவன் நிஜ வாழ்கையில் வாழ முடியுமா?. அதைப்போலத்தான் அனைத்தையும் பார்க்கவேண்டும். அப்படி அல்லாமல் அரசியல் செய்யும் முஸ்லிம் அமைப்புகளை வளர விட்டால் நாளை எவன் வேண்டுமானாலும் அரசியல் பண்ண வந்துவிடுவான்.
31-ஜன-2013 15:35:18 IST
அதிமுக ஆட்சி எதிர்கட்சியை பழிவாங்கவே நேரம் போதவில்லை. அதிகாரிகள் எல்லாம் தன்தொரி தன்மை லஞ்சத்தில் ஊறி மிதந்து கொண்டு இருப்பதுதான் நிர்வாக சீர்திருத்தமா?
23-டிச-2012 16:30:09 IST
மைனாரிட்டி திமுக ஆட்சியில் குறைவாக மின் வெட்டில் தமிழகம் இருந்ததது. மெஜாரிட்டி அதிமுக கையாலகாத அரசு 16 மணிநேர மின் வேட்டை அமுல் படுத்தி உள்ளது. மெஜாரிட்டியாக இருந்து மக்களுக்கு என்ன பயன்?. கையாகலாத மெஜாரிட்டி அதிமுக முந்தைய ஆட்சியை குறை கூற தகுதி உண்டா?
23-டிச-2012 16:20:56 IST