கிரிக்கெட் பார்க்க வரும் மக்களிடம் காசு வசூல் பண்ணுகிறார்கள். பிறகு அவர்களுக்கு எதுக்கு சலுகைவிலையில் தண்ணீர். விவசாயிகளை விட அதிக விலைக்கு மூவாயிரம் ரூபாய்க்கு தண்ணீர் விற்கலாம். என்னைகேட்டால் கிரிக்கெட் ச்டய்டியம் தனக்கு என தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் (கடல் நீரை குடிநீராக்குவது) அமைத்துக்கொள்ளலாம். தங்கள் தேவை போக மற்ற நாட்களில் பக்கத்தில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யலாம்.
04-ஏப்-2013 17:02:49 IST
கடலை, அவல், நிலகடலை, சுண்டல் போன்றவைகள் கொடுக்கலாம். கொய்யா பழம், வாழைபழ்ம், வெள்ளரிக்காய், காரட் போன்றவை கொடுக்கலாம். அல்வா காரசேவ் எல்லாம் எண்ணை பலகாரங்கள். ஊட்ட சத்து என்று சொல்ல முடியாது. என்னமோ காசுக்கு புடிச்ச கேடு.
04-ஏப்-2013 16:28:31 IST
இது சரியல்ல. நாம் அடிபட்டு விழுந்தால் யாரவது உதவி செய்தால் நல்லது என்று தானே நினைப்போம். நமக்கு என் வம்பு என்று போனால் நமக்கு ஒரு கேட்டது நடந்தாலும் யாரும் வர மாட்டான். நான் ஹார்ட் அட்டாக் ஆனா ஒருவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தேன் அவர் என்னை நீ தெய்வம்பா என்று கும்பிட்டார் (அவருக்கு வயது அறுபது எனக்கோ இருப்பத்தி ஐந்துக்குள் இருக்கும்) எனக்கு அப்போது ஹார்ட் அட்டாக் என்ரால் என்ன என்று தெரியாது. ஆச்பத்திர்க்கு கூட்டி சென்றது தான் முக்கிய நிகழ்வு. கோல்டன் ஹவர் என்று சொல்லும் ஒரு மணிநேரத்தில் அவரை அழைத்து சென்றோம். இது நடந்து இருபத்தி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. என் தகப்பன் மயங்கி விழுந்த போது வேறு ஒருவர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டார். அப்பாவுக்கு பக்கவாதம். கோல்டன் ஹவரில் சேர்த்ததால் அவரும் பிழைத்தார். இறைவன் நன்மையை திரும்ப தந்தான் என்றே நான் நினைப்பேன். எனவே உதவி செய்ய வாய்ப்பு இருந்தால் உதவுங்கள். வழக்கு பற்றி கவலை வேண்டாம்.
03-ஏப்-2013 17:04:05 IST
ஆங்கில மருத்துவத்தில் ஊசி போட்டுகொண்டால் நாம் கிறிஸ்தவர்கள் ஆவது இல்லை. அதுமாதிரி யோகா ஒரு உடற்பயிற்சி கலை. எல்லாரும் கற்றுக்கொள்ளலாம். அப்படி கற்று கொண்டால் மதம் மாத்தும் வேலை தேவை இல்லை என்பதும் கிறிஸ்தவர்களுக்கு புரிந்து விடும். இந்து மத உபநிஷத் சொல்லாததை எந்த மதமும் சொல்ல வில்லை.அவரவர் அவர்கள் மத புத்தகத்தை படித்தால் போதும். உடற்பயிற்சிக்கு எது உங்களுக்கு ஒத்து வருமோ அதை பின்பற்றலாம். ஆயுர்வேதம் தேடி கேரளாவுக்கு வருபவர்கள் எத்தனை பேர்
01-ஏப்-2013 19:43:47 IST
இவர் படித்து கலக்டர் ஆகவேண்டும் என்று ஆசைப்படவில்லை. தான் வாழ்ந்த கிராம தொழிலை செய்ய ஆசைபடுகிறார். உங்களின் நகரமயமாக்கல் அதையும் சாத்தியம் ஆக்கவில்லை. படித்தவனுக்கும் வேலை கிடைக்கவில்லை. நோய் நொடி பெருகியதுதான் மிச்சம். கேட்டால் முப்பத்தி இரண்டு ரூபாய் மாதம் சம்பாதிப்பவன் வறுமை கோட்டை கடந்துவிட்டான் என்று எங்கள் மெத்தபடித்த அலுவாலியா சொல்லி அவர் கணக்கில் எல்லாரும் பணக்காரன் என்று சொல்லிவிடுவார்.
31-மார்-2013 19:14:03 IST
பரவாயில்லை. தனக்கு நேர்ந்த அவலம் யாருக்கு வர கூடாது என்று நினைப்பது நல்ல எண்ணமே. தேள் கொட்டின திருடன் அடுத்தவனுக்கும் கொட்டவேண்டும் என்பது மனித சுபாவம்.
30-மார்-2013 16:20:31 IST