"ஆண்கள் கூறுவதை சமயம்பார்த்து சமயோசித புத்தி கூர்மையால் காரியம் சாதிப்பது பெண்களின் குணங்களில் ஒன்று என்பது இராமாயண காலத்து பெண்கள் முதல் இன்றைய கால பெண்கள் வரை இருக்கிறது" என்பதைத்தான் காட்டுகிறது சீதையின் பேச்சு. எலோருக்கும் என் யுகாதி என்ற தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் .
11-ஏப்-2013 12:26:49 IST
சென்ற ஆண்டு சிங்கப்பூர் வந்தபொழுது விமான நிலையத்தில் தமிழில் வரவேற்பு என்று எழுதியிருந்ததை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன், ஆனால் சென்ற ஆண்டு இறுதியில் செய்தி தாள்களில் அதை அடித்து விட்டார்கள் என்று படித்த பொழுது மிகவும் வேதனை அடைந்தேன். அந்த வாசகம் இன்றும் உள்ளதா? இல்லையா?
03-ஏப்-2013 13:10:21 IST
இந்திய தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள், இது ஒவ்வொரு இந்தியர்களுக்கும் ஏற்பட்ட அவமானம். இதற்கு டர்பன் நாட்டு அதிபர், மற்றும் ஏற்பாட்டாளர்கள் மனிப்பு கேட்கவேண்டும். முத்துக்குமரன்.
01-ஏப்-2013 02:50:20 IST
இது போலவே பிரான்ஸ் நாட்டில் கிழக்கே ஸ்ட்ராஸ் பூரில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயத்தில் 1826ம் ஆண்டு கட்டப்பட்டது முதல் ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசியில் சூரிய ஒளி பல வண்ணங்களால் தீட்டப்பட கண்ணாடி வழியாக ஏசுநாதரின் மேல் விழுகிறது. இதைக்காண்பதற்கே பலர் பல ஊர்களி லிருந்து இங்கு வருகிறார்கள். முத்துக்குமரன்.
23-மார்-2013 03:40:15 IST
என் கருத்தும் ராஜாவின் கருத்துதான், எனவே மேலும் தேவையான செய்திகளை வெளியிட்டால் மலருக்கு உதவிகரம் நீட்ட பல வாசகர்கள் வந்து குவிவார்கள். இது போன்ற செய்திகளை வெளியிடும் தினமலருக்கு நன்றி, தொடரட்டும் உங்கள் பணி, வாசகர்களாகிய நாங்களும் உங்கள் பின் நிற்போம் இனி.முத்துக்குமரன்.
08-மார்-2013 03:39:33 IST
இந்த வழிபாடு கணவருக்கு தெரிந்தா அல்லது தெரியாமலா? பகுத்தறிவு பகலவன் வீட்டு பெண்களுக்கு மட்டும் "கடவுள் இல்லை, இல்லவேயில்லை, வணங்குபவன் காட்டுமிராண்டி" என்ற உபதேசங்கள் இல்லை போலும். முன்பு மருமகள் துர்கா ஸ்டாலின் சாய்பாபா, மற்றும் பல கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வந்தார், தளபதியும் குடும்பதுடன் குலதெய்வ வழிபாடு செய்தார். பெரியார் பாசறையில் வளர்ந்தவர்களின் பேச்சு ஊருக்குதான். சபாஷ்.முத்துக்குமரன்.
21-பிப்-2013 03:54:38 IST
போக்கு வரதுக்கு இடையுறு என்றால் சட்டம் சரியே ஆனால் இந்தியாவில் உள்ள இது போன்ற சட்டங்களை அமுல் படுத்துவதில்தான் சிக்கல் வருகின்றது. இதில் ஒரு குறிப்பிட துறையை சேர்த்த அதிகாரிகள் மட்டும் லாபம் அடைவதை மற்றவர்கள் பொருதுக்கொள்வதில்லை. அதுக்கும் காவல் துறை விதிவிலக்கல்ல சட்டம், ஒழுங்கு, போக்குவரத்துக்கு என்றாலே நம் அனைவருக்கும் தெரியும் பாரபட்சம் பாராமல் நடவடிக்கை எடுக்கும் காலம் வருவரை இது போன்ற சட்ட சிக்கல்கள் நிரந்தரமானவையே. முத்துக்குமரன்.
11-பிப்-2013 13:23:35 IST
ஹரி கிருஷ்ணன் அவர்களே வாழ்க உங்கள் பயிற்சிப்பட்டறை வளர்க உங்கள் முயற்சி, இந்த தருணத்தில் வாசர்களுக்கும் , உங்களுக்கும் ஒரு சந்தோஷ செய்தியக இருக்கும் என்று நம்புகிறேன். பிரான்ஸ் நாட்டில் பிரான்ஸ் சிவன் கோயிலில் ஒவ்வொரு விழாவிலும் எங்களால் முயன்ற அளவில் நீங்கள் கூறியது போல் நமது தமிழகத்தில் அழிந்துவரும் கலைகளை இங்கு நடத்தி நம் இளைய தலைமுறையினர் இதுவரை பார்த்திராத, கேட்டிராத வில்லுப்பாட்டு, தெரு கூத்து போன்றவற்றை நடத்துகிறோம். தினமலர் உலகத் தமிழர் செய்தியில் சென்று பார்க்கவும். உலக தமிழருக்கு தினமலர் மூலம் இந்தனை செய்ய உதவிய தினமலருக்கு நன்றி. முத்துக்குமரன்.
11-பிப்-2013 04:21:08 IST
கொலை யுண்டவரின் வீட்டில் ஒரு மூதாட்டி துக்கம் விச்சரிக்க வந்து குலுங்கி அழுவதைப்பார்த்து "கொலைசெயதவனும் குலுங்கி குலுங்கி அழுகிறானே" என்ற வரிகளை படிக்கும்பொழுது, கொலையாளி யார் என்பது தெரிந்திருக்கும் என்றுதான் தோன்றுகிறது. திருச்சியில் கொலைசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்தின் விஷயத்தில் இன்னும் கொலைகாரர்களை கண்டுபிப்பதில் சிக்கல் அல்லது தெரிந்தும் கைதுசெய்யப்படாமல் இருப்பதை போல் இதவும் கிடப்பில் போய்விடுமா???
02-பிப்-2013 03:05:55 IST