சித்தரை திருவிழா நடத்தபோகிறர்கள் என்றாலே அசம்பாவதம் நடக்கும் என்பது சாமான்யனுக்கு கூட தெரியும்.அதுவும் அசம்பாவதம் நடந்த பிறகு கண்டிப்பாக கலவரம் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும்.இதை எல்லாம் முன் கூட்டியே அறிந்து நடவடிக்கை எடுத்திருந்தால் பெரும் இழப்பு தவிர்க்கபட்டிருக்கலாம்.இவர்கள் முழு உழைப்பும் mu ka engindra ஒரு தனிப்பட்ட மனிதரை இழிவு படுத்துவதிலே மட்டும் இருக்கிறது.
07-மே-2013 09:17:03 IST
இரண்டு மூன்று வருடமாக இலங்கை பிரச்சனைக்கு முக தான் கரணம் போல் கருத்து தெரிவிகிறார்கள். மு க வால் என்ன செய்திருக்கமுடியும்?
மு க: இலங்கையில் போரை நிறுத்தவும்
மத்திய அரசு : அது உள்நாட்டு பிரச்னை ,இந்தியா தலை இட முடியாது.
மு க : நீங்கள் போரை நிறுத்தவில்லை என்றால் நாங்கள் (தி மு க) மத்திய அரசில் இருந்து விலகுவோம்.
மத்திய அரசு : விலகிகொள்ளுங்கள்
என்று கூறிவிட்டு வேறு கட்சிகளை எப்படியாவது சமாளித்து ஆட்சியை தொடரும்.அதன் பின்னர் யார் என்ன சொன்னாலும் இலங்கை பிரச்சனையில் தலை இடாது.மு க வால் அதிகபட்சம் எது செய்தாலும் இதுதான் நடந்திருக்கும். இலங்கை பிரச்சனைக்காக அதிக போராட்டங்கள் ஆர்பாட்டங்கள் நடத்தியது தி மு க வை விட வேறு எந்த கட்சி இருக்க முடியும். விடுதலை புலிகளின் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டு இரண்டு முறை தி மு க ஆட்சி இழந்தது.( தயவு : சுப்ரமணிய சாமி ) தி மு க என்றும் பிரபாகரனை குற்றவாளி அவரை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறவில்லை.இந்திய ராணுவத்தை அனுப்பி பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்று கூறவில்லை.போர் என்றால் அப்பாவி தமிழர்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று கூறவில்லை.இலங்கை பிரச்னை வேறு நாட்டு பிரச்னை, அதில் இந்தியா தலை இடக்கூடாது என்று கூறவில்லை.இப்படியெல்லாம் கூறியவர் யார் ,அவரை எந்த அளவிற்கு மேலே வைத்திருக்கிறர்கள் என்று எல்லாருக்கும் தெரியும். ஆகவே தேவை இன்றி ஒருவரை தூற்றுவது மட்டும் கருத்தாக கொண்டு முக்கிய பிரச்னையான இலங்கை பிரச்னை நீர்த்து போக செய்ய வேண்டாம் .
08-மார்-2013 10:08:05 IST
தி மு க எப்படியோ ஆனால் மக்கள் நல பணிகள் அனைத்தும் தி மு க காலத்தில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தபடுகிறது. திட்டங்கள் முடியும் தருவாயில் ஆட்சி மாற்றத்தால் மற்றவர் தொடக்க விழா எடுத்து அவர்கள் ஆதரிக்கும் பத்திரிகைகளில் முழுபக்க விளம்பரம் கொடுக்கிறார்கள் .இப்பொழுது இருப்பவர்கள் முந்தைய ஆட்சியின் ஆரம்ப கட்ட திட்டங்களை மூடுவது,தி மு க விற்கு மிக நல்ல பெயர் கிடைக்கும் என்றால் எந்த திட்டத்தையும் மூடுவது.(தலைமை செயலகம்,அண்ணா நூற்றாண்டு விழா, செம்மொழி பூங்கா, செம்மொழி நூலகம்,அமப்தூர் -எண்ணூர் பறக்கும் சாலை ,திருவள்ளுவர் சிலை )இதற்கும் மேல் எதாவது ஒரு வகையில் பலி வாங்குவது.,தான்,நான், எனது ,என்னுடயை என்று பொய்யான தம்பட்டம் அடிதுகொல்வது.இவை எல்லாவற்றுக்கும் கரணம் தி மு க செய்யும் எதாவது ஒரு தவறு மிகைபடுத்தபடுவதுதான் .
23-பிப்-2013 10:16:04 IST
தி மு க எப்படியோ மக்கள் பணி அனைத்தும் தி மு க ஆட்சியில்தான் திட்டமிட்டு தொடங்கப்பட்டு முடிபதுற்க்கு முயற்சிகள் மேற்கொள்ளபடுகின்றன .அவை முடியும் தருவாயில் ஆட்சி மற்றம் ஏற்பட்டு மற்றவர்கள் தொடக்க விழா நடுத்துகிறார்கள்.இவர்கள் ஆட்சியில் மற்றவர்களை பலி வாங்குவதும் முந்தைய ஆட்சியில் முடிக்கும் தருவாயில் இருக்கும் திட்டங்களுக்கு (பாலங்கள், அரசு கட்டிடங்கள் ,மின்சார திட்டங்கள் ,குடி நீர் திட்டங்கள் ,துறைமுகங்கள்,சாலைகள் போன்றவை )துவக்க விழா எடுப்பதே பணி.இதிலும் தி மு கவிற்கு மிக நல்ல பெயர் வருவதாக இருந்தால் (தலைமை செயலகம் ,அண்ணா நூலகம் ,செம்மொழி நூலகம்,அம்பத்தூர்-எண்ணூர் பறக்கும் சாலை,மெட்ரோ ரயில் )போன்றவை கொள்கை முடிவு என்ற பெயரில் முடக்கப்படும் .
22-பிப்-2013 11:48:36 IST
இப்பொழுது எந்த வித தடையும் இல்லாமல் துதி பாடலாம், மேஜை தட்டலாம் , முக,திமுக பற்றி நினைத்தபடி கேவலமாக பேசி மக்கள் பனி ஆற்றலாம் .அம்மா குலுங்கி குலுங்கி சிரிக்கலாம் .வாழ்க தமிழகம்
07-பிப்-2013 14:20:09 IST
இவ்வளவு கீழ் தரமாக சட்டசபை நடப்பது வேதனையாக இருக்கிறது. ஒரு எதிர் கட்சி தலைவரை, அவர் எப்படிப்பட்டவராக வேண்டுமானால் இருக்கட்டும்,இந்த அளவிற்கு கேவலமாக விமர்சிப்பது அதுவும் அதனை முதலமைச்சர் குலுங்கி குலுங்கி சிரித்து மகிழ்வது மிகவும் கொடூரம். ஏதாவது ஒரு தேவையில்லாத விஷயத்தை பேசி எதிர்கட்சியினரை தூண்டிவிட்டு அதன் மூலம் அவர்களை வெளியேற்றி பின்னர் உலக மகா துதி பாடுவதே இவர்கள் வேலை ஆகி விட்டது. மின்சாரம்,விலைவாசி உயர்வு ,சட்டம் ஒழுங்கு,தினம் பல கொலை ,கொள்ளை ,ஆள் கடத்தல் போன்ற பல மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் பற்றி பேசாமல் இதுபோல் எதிர்கட்சிகளை கேவலமாக பேசி வெளிஏற்றுவது வெட்க்ககேடான செயல். இதுபோல் அவர்களை பற்றி கதை சொல்ல சட்டசபையில் அனுமதிப்பார்கள .மக்கள் மாற்றி யோசிக்க வேண்டும்.
06-பிப்-2013 10:43:52 IST
ஒரு திரைப்படம் திரைஇடப்பட்டால் வன்முறை ஏற்படும் என்று அரசு கூறுகிறது. அப்படி என்றால் முஸ்லிம் எல்லாம் வன்முறை செய்பவ்ர்கள் என்று அர்த்தமா அல்லது வன்முறை கட்டுப்படுத்த நிர்வாக திறமை இல்லை என்று அர்த்தமா. மனம் புண் படக்கூடது என்று சொல்லும் அரசு, விலைவாசி உயர்வு,மின்சாரம் இல்லாமை ,மின்கட்டணம்,பால் கட்டணம்,பஸ் கட்டணம் உயர்வு,சட்டம் ஒழுங்கு சீர் கேடு இவற்றால் தமிழக மக்களே புண் பட்டிருக்கிறார்கள் .இதற்க்கு அரசு என்ன பதில் சொல்லும்.
02-பிப்-2013 11:14:04 IST
இப்பொழுது தமிழகத்திற்கு மிக முக்கியமானது மின்சாரம், தண்ணீர், சட்டம் ஒழுங்கு,விலைவாசி கட்டுபடுத்தல் ,சாலை வசதி, தரமான கல்வி, விவசயிகள் குறை, ,முடங்கிய தொழில்கள் மீட்பு , இதுபோன்று அடுக்கிகொண்டே போகலாம். முதலில் இதை சரிசெய்யவும். இதற்க்கு அனைத்துகட்சி கூட்டத்தை உடனே கூட்டி ஒற்றுமையாக செயல்படுவோம் வாழ்க தமிழகம்
19-ஜன-2013 17:36:53 IST