முதலில் 10 கி.மி. இப்பொழுது 19 கி.மி. இப்படியே விட்டால் 100 கி.மி பிறகு முழு லடாக். அவர்கள் 19 கி.மி. பகுதியை முழுங்கிய பிறகும், அவர்களுடன் சேர்ந்து ராணுவ பயிற்சி. அதற்கான ஒப்பந்தம். இந்திய அரசுக்கு மானம் இருக்கிறதா இல்லையா ? சீனாவை மிரட்டும் அளவுக்கு ஜப்பானுக்கு தைரியம் இருக்கிறது. ஆனால் நம் அரசுவுக்கு ? சரி சீனாவை எப்படி வெளி ஏற்ற போகிறீர்கள் ? அதை சொல்லுங்கள். உங்கள் ஒப்புதல் யாருக்கும் வேண்டாம். சீனர்கள் நம் பகுதியில் இருக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.
27-ஏப்-2013 10:21:20 IST
தினத்தந்தி பத்திரிக்கையின் வளர்ச்சியில் டாக்டர்.சிவந்தி ஆதித்யன் பங்கு அபாரம். ஒரு பத்திரிக்கையின் வெவ்வேறு துறையிலும்,அவருக்கு அறிவு ,பயிற்சி இருந்தது. உண்மையிலேயே அவருடைய இறப்பு இந்திய பத்திரிக்கை துறைக்கு பெரும் இழப்பு. அன்னார் ஆத்மா சாந்தி அடைக
20-ஏப்-2013 10:17:15 IST
மறைந்த முதல்வர் பெரியவர் பக்தவத்சலம் பெயரை வைக்கலாம் என்று எந்த காங்கிரஸ் உறுப்பினர் யாராவது கோரிக்கை வைத்தார்களா என்று பாருங்கள் ? எம்.ஜி.ஆர் . அண்ணா பெரியார் இவர்கள் பெயரை எல்லாம் வேண்டிய அளவு வைத்தாகிவிட்டது..
16-ஏப்-2013 23:23:08 IST
மோடியை ஆதரித்தால் பீகாரில் முஸ்லீம்கள் வாக்கு அளிக்க மாட்டார்கள் என்று நிதிஷ் பயப்படுகிறார். ஆக எல்லோரும் முஸ்லிம்களை வாக்கு வங்கியாகத்தான் பார்க்கிறார்கள். அதே சமயம் அத்வானி பிரதமர் ஆனால் அவருக்கு அதரவு தெரிவிப்போம் என்கிறார் நிதிஷ். அத்வானிதான் பாபர் மசூதியை இடிப்பதற்கு மூல காரணமாக இருந்தவர். தன வாழ்நாளில் வருந்தப்பட வேண்டிய, நடக்ககூடாத தவறான விஷயம் என்று அவரே சொல்லிருக்கிறார். அத்வானியை ஆதரித்தால் மட்டும் முஸ்லிம்கள் வாக்கு அளிப்பார்களா ? நிதிஷ் குமார் மறுபடியும் யோசிக்க வேண்டிய விஷயம். மோடியின் மேல் உள்ள எரிச்சலால் எதையோ பேசக்கூடாது.
16-ஏப்-2013 23:15:31 IST
இந்த செய்தியை வெளி இடுவதின் நோக்கம் என்ன ? இந்தியாவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான். எதற்காக இந்தியாவில் மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் ? இந்தியாவை ஏன் குறி வைக்கிறார்கள் ? உலகில் பல நாடுகளில் மரணதண்டனையை ரத்து செய்யவில்லை. ஏன் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக இராக்கில் பகிரங்கமாக தூக்கு தண்டனையை நிறைவேற்றினார்கள். அது எவ்வளவு கொடூரம் ? முதலில் அங்கெல்லாம் மரணதண்டனையை ரத்து செய்யட்டும். பிறகு இந்தியாவை பற்றி பேசலாம்.
11-ஏப்-2013 08:52:29 IST
இந்திய மீனவர்களை கைது செய்வது வாடிக்கையாக போய்விட்டது. ஏன் இந்திய அரசு மௌனம் சாதிக்கிறது ? குறைந்த பட்சம் இலங்கையை கண்டனம் செய்வது கூட கிடையாது ? ரோஷம் துளி கூட கிடையாது. தமிழக மக்கள் இனிமேலாவது காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டு போடக்கூடாது. இந்திய அரசு மனது வைத்தால் கடற் படையை மீனவர்களுக்கு பாதுகாப்பாக அனுப்ப முடியாத ? அவர்கள் பிடித்து வந்த மீன் மாத்திரம் வேண்டும் . ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது. இது ஒரு அரசு .
07-ஏப்-2013 11:37:18 IST
நம் இந்திய குழுவினர் இலங்கைக்கு சென்று அங்கு கண்ட உண்மை நிலைமையை உள்ளது உள்ளபடி உலகிற்கு சொல்ல வேண்டும். இலங்கை அரசு கொடுக்கும் பரிசு பொருட்களை வாங்கி கொண்டு, எல்லாம் நல்லபடி நடக்கிறது என்று சொல்வதற்கு அவர்கள் அங்கு போகத்தேவை இல்லை. இந்திய மக்களின் வரிப்பணத்தையும் வீணடிக்கத் தேவையில்லை. உல்லாச பயணத்திற்காக செல்ல வில்லை .என்று இந்திய குழு அறிந்து கொள்ள வேண்டும். அப்படியே இந்திய மீனவர்களை சுடுவது, அவர்களை கைது செய்வது, அவர்களின் வலைகளை நாசம் செய்வது, அவர்கள் பிடித்த மீன்களை கொள்ளை அடிப்பது இவைகளை எல்லாம் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரவேண்டும் .
07-ஏப்-2013 11:22:29 IST
சஞ்சய் இப்படி சொன்ன பிறகு அவருக்கு மன்னிப்பு கொடுக்க வேண்டும் என்று யாரும் வக்காலத்து வாங்க வேண்டாம். தான் செய்தது தவறு என்று அவருக்கு நன்றாக தெரிந்து விட்டது. சிறைக்குப்போக தயாராகி விட்டார். இனி அவரை யாரும் தொந்திரவு செய்ய வேண்டாம். இனி இத்துடன் இந்த விவாதத்திற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் .
28-மார்-2013 13:56:03 IST
நானும் பல ஆண்டுகளாக BBC வானொலியின் தமிழ் சேவையை கேட்டு வருகிறேன். அவர்களால் முடிந்த வரை நடுநிலை தவறாமல் சேவையை ஒலி பரப்புகிறார்கள் என்பதுதான் என்னுடைய அபிப்ராயம். எத்தனையோ முறை இந்தியாவுக்கு எதிராக அவர்களுடைய எண்ணங்களை ஒலிபரப்பி இருக்கிறார்கள். இலங்கையும் அவர்களுக்கு எதிரான எண்ணங்களை மறுத்திருக்க வேண்டும் அல்லது உண்மை நிலை எடுத்துரைத்திருக்கவேண்டும்.இப்படி தடங்கல் ஏற்படுத்தி இருக்கக்கூடாது .அது சரியான முறை அல்ல .இலங்கைதான் தவறு என்றாகிவிடும்
28-மார்-2013 13:44:14 IST
இவர் தந்தை காங்கிரஸ் எம்.பி. பழம்பெரும் நடிகர். இவர் தாயோ மிக பிரபல நடிகை அந்த காலத்தில் .(நர்கிஸ்)
தங்கையோ காங்கிரஸ் எம்.பி. இத்தனையும் வைத்து கொண்டு influence பண்ணாமல் இருக்க மாட்டார்கள்
24-மார்-2013 13:45:11 IST