முன்பு ராஜாஜி அவர்கள் ஒரு முறை கூறி உள்ளார்கள், ஒரு பிரட்சினையை அப்படியே அமுக்கி மூட வேண்டுமானால் ஒன்று அதன் மீது கமிசனை போடுங்கள் என்று சொல்லி உள்ளார். இப்போது காவேரி விசயத்தில் ஒரு வழக்கு போட்டு விடுங்கள் என்று சொல்லி இருப்பார். நீதிபதிகளின் மண்டையை காய வைக்க எந்த வழக்கு எதற்கு போடப்பட்டது என்று வழக்கு எங்களை தேடி தேடி வழக்குகள் நடத்திக் கொண்டே போகலாம். உச்ச நீதி மன்றமே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிய பிறகும் கர்நாடக அரசு என்னவோ வழக்குகளுக்கு மரியாதை கொடுப்பது போல் வழக்கு தொடுத்து மக்களை நன்கு இந்த அம்மையார் ஏமாற்றுகிறார். இது வரை போட்ட வழக்குகளுக்கும் தீர்ப்புகளுக்கும் கர்நாடக அரசு என்ன செய்துள்ளது. மேலும் மேலும் வழக்குகள் போட்டு தமிழக முதல்வரின் மூக்கு உடைப்பட்டது தான் மிச்சம்.
15-ஜூன்-2013 08:45:27 IST
கட்டிடங்கள் இடிக்கின்றபோது மின் இணைப்பை surrer செய்தாலும் இந்த வைப்பு தொகையை திரும்ப கொடுப்பதில்லை. வைப்பு தொகை போனது போனது தான்.
14-ஜூன்-2013 06:30:11 IST
1980 பாராளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மூலம் அமோக வெற்றி பெற்றதால் வடசென்னை ( கோவை தொகுதி கிடையாது ) பாராளுமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட G.லக்ஷ்மணன் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். பின் கூட்டணி முறிந்தபோது துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டார்.
14-ஜூன்-2013 06:20:47 IST
@ Hasan Abdullah பொறுத்திருந்து பாருங்கள் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் தலைமிடம் அனுமதி பெற்று விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றுள்ளதாக ஓர் செய்தி. ஏற்கனவே டெல்லியில் முதல்வர் அவர்கள் பரதனிடம் அக் கட்சி உறுப்பினர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து உள்ளார். ஒரு வேளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தேமுதிகவும் திமுகவை கை விட்டால் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அதிமுக ஆதரவுடன் தேர்வு செய்ய வாய்ப்பு உண்டு.
14-ஜூன்-2013 05:44:34 IST
தமிழக முதல்வர் இப்போது தமிழகத்தின் அவசிய தேவையை கருத்தில் கொண்டு நேரடியாக களத்தில் இறங்கி காரியம் பெரிதா வீரியம் பெரிதா என நினைத்து சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என கருதி செயல் பட வேண்டும். அரசிதழில் வெளியிட்டால் தண்ணீர் வரும் என கருதினால் தண்ணீர் ஏட்டில் மட்டும் தான் வரும். மழை பெய்து கர்நாடக அணைகள் நிரம்பி உடையும் நிலையில் தான் அவர்கள் தண்ணீரை திறப்பார்கள். இந்த விசயத்தில் போராட அந்த மாநிலத்தில் உள்ள கட்சிகளிடையே உள்ள ஒற்றுமையும் நம் அரசியல் கட்சிகளுக்கிடையில் கிடையாது confrontational attitude will never solve this problem .....
13-ஜூன்-2013 04:58:10 IST
மாநிலங்களுக்கு இடையில் பாயும் நதிகளை கண்காணிக்கவும் நிர்வாகிக்கவும் நதி நீர் ஆணையம், தேர்தல் ஆணையம் போல் யாதொரு கட்டுப்படும் இன்றி சுதந்திரமாக செயல் பட அதிகாரங்கள் வழங்கப்படுதல் அவசியம். மாநிலங்களுக்கு இடையில் பாயும் நதிகளை நிர்வகிக்க மாநில அரசாங்கங்களுக்கு எந்த உரிமையும் இருக்க கூடாது. ஆனால் இந்த அரசியல்வாதிகள் நதி நீரில் அரசியல் செய்ய நதி நீர் ஆணையம் சுதந்திரமாக செயல் பட விரும்ப மாட்டார்கள்.
13-ஜூன்-2013 04:45:21 IST
இந்த ஆணவ அம்மையார் தமிழகத்தின் முதல்வராக உள்ள வரை தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். இயற்கையாக மழை பெய்தால் தான் விடிவு. காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் Gazette இல் வெளி இட்டதால் எல்லாம் காவிரியில் தண்ணீர் வராது. முதல்வர் கெளரவம் பார்க்காமல் தமிழகத்தின் நலன் கருதி சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என தமிழகத்திற்கு தேவையான் நீரை பெற முயல வேண்டும்.
12-ஜூன்-2013 19:13:12 IST
All is well now. ஒரு குடும்பத்தில் உள்ள பெரியவரை கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுத்து விட்டால் வரும் பிரட்சினையை போல் தான் இதுவும். இப்போது அத்வானிஜி சமாதானம் செய்யப்பட்டு இனி வரும் காலம்களில் எல்லா முடிவுகளும் அத்வானிஜியை கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்ற உத்திரவாதம் கொடுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
11-ஜூன்-2013 19:17:10 IST
இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும். எதற்கும் உதவாத இலங்கை பிரச்சினைக்கு போராடிய மாணவ சமுதாயம் இந்த மது கடைகளை மூட போராடலாமே.
11-ஜூன்-2013 14:18:00 IST