தயாரித்த மின்சாரத்தை விநியோகம் செய்ய மின் கட்டமைப்பு வசதிகளான Transmission Lines போதுமான transformer போன்றவை இல்லாததால் இரு தினங்களுக்கு முன்னர் உற்பத்தியான காற்றாலை மின்சாரம் எடுக்கப்பட வில்லை என தினமலரே செய்தி வெளி இட்டிருந்தது. மின் பகிர்மானம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் இவ்வரசு போதிய கவனம் செலுத்த வில்லை. மொத்தத்தில் மின்சாரத்துறை மேலாண்மையின் மிக மோசமான செயல்பாடே இத்தகைய சூழலுக்கு காரணமாகும். அம்மையாரும் கெளரவம் பார்க்காமல் மத்ய அரசின் உதவியை நாடி புதிய அனல் மின் நிலையங்கள் NTPC துணையுடன் மற்றும் சூரிய மின்சக்தி மூலம் மின்சார உற்பத்தியினை தமிழக தேவையை கருத்தில் கொண்டு இப்போதே திட்டங்களை தொடங்க ஆவன செய்ய வேண்டும்.
22-மே-2013 05:05:06 IST
இன்னும் அது என்ன பேனா பிடித்து கடிதம் எழுதுவது இந்த காலத்தில் கூட. ஏன் மின் அஞ்சல் மூலம் விரைவாக உங்கள் கோரிக்கைகளை தெரியப்படுத்தலாமே.
22-மே-2013 04:45:11 IST
ஆமாம் நீங்கள் சொல்வது என்னவோ உண்மைதான் என்ன செய்வது மக்கள் கோவத்தில் மாற்றி மாற்றி வாக்களித்து நீங்கள் இருவரும் முறை வைத்து தமிழகத்தை கொள்ளை அடிக்க செய்து விடுகிறார்கள். யாரும் விரும்பி தேர்வு செய்வதில்லை. By default CM you both are elected due to anti incumbency votes. என்றைக்கு தமிழக அரசியலுக்கு நல்ல காலம் பிறக்குமோ தெரிய வில்லை. MGR மட்டுமே மக்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்.
22-மே-2013 04:35:55 IST
இந்தியாவுக்குள் உள்ள நதி நீர் வழக்குகளுக்கே ஒரு மரியாதையும் காணோம். இது காலம் கடந்த முயற்சி. முதலை விழுங்கிய மீனை மீண்டும் உயிரோடு எடுப்பதற்கு சமம் மீண்டும் கச்ச தீவினை மீட்பதென்பது.
21-மே-2013 14:15:50 IST
ஏன் புதிய மின் திட்டங்கள் இன்னும் தொடங்கவில்லை. எந்த மின் திட்டம் தொடங்கினாலும் குறைந்தது 5 அல்லது 10 ஆண்டுகள் பிடிக்கும். எப்படியும் இந்த ஆட்சி 5 ஆண்டுக்கு பிறகு தாக்கு பிடிக்காது என முடிவேடுத்ததனால் ஏன் தொலை நோக்கு திட்டங்களை நிறைவேற்றுவது என இந்த அரசு வாளாவிருக்கிறதோ. கருணாவின் ஆட்சியில் தொடங்கிய திட்டங்களை நம்பியே நத்தம் விஸ்வநாதான் சட்ட சபையில் ஒவ்வொரு முறையும் இன்னும் மூன்று மாதங்களில் மின்வெட்டு தீர்ந்து விடும் என அறிக்கை விட்டுக் கொண்டுள்ளார். மக்களுக்குக்காக தான் இந்த அரசு செயல் படுகிறது என நினைத்தால் புதிய மின் திட்டங்களை தொடங்க ஆவன செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரிக்கவே செய்யும். சென்னையை சுற்றி ஓடும் பக்கிங்காம் கால்வாயை concrete தளம் கொண்டு மூடி ஆங்கங்கே நச்சு வாயு வெளியேறும் புகை குழாய்களை அமைத்து அதன் மேல் தளம் முழுவதும் நெடுகிலும் சுமார் 60 km தூரம் ( எண்ணூர் to மாமல்லபுரம் வரை ) சூர்ய மின் தகடுகளை அமைத்து மின்சாரம் தயாரிக்கலாம். இத்திட்டம் மிக குறிகிய காலத்தில் 5 ஆண்டுகளுக்குள் செயல் படுத்தலாம்.
21-மே-2013 07:02:33 IST
சூதாட்டமும் IPL இம் பிரிக்க முடியாதது. ஆகவே IPL ஐயை தடை செய்வதுதான் ஒரே வழி. IPL சூதாட்டத்தால் இழந்த பணத்தை பெற கடத்தலில் ஈடுபட்டு சிறுவனை கொன்ற செய்தியின் விசாரணைக்கு பிறகுதான் இந்த சூதாட்டத்தில் சம்பந்தப்பட்ட வீரர்களை கைது செய்தார்கள்.
20-மே-2013 06:29:51 IST
அரசு சுற்றுலா துறை முன்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே தான் இப்போதும் உள்ளது. மிக சொற்பமாக வரும் வெளி நாட்டினரால் வரும் வருமானமும் இழக்க நேருடுவதை பற்றி எந்த அரசும் அக்கறை கொள்வதில்லை.
20-மே-2013 06:17:27 IST
முதல்வர் ஜெயா அவர்கள் எவ்வாறு பாமக கட்சியை வன்முறையில் ஈடுபட்டதற்காக தடை செய்வேன் என எச்சரித்தார்களோ அதே போல் நாம் தமிழர் கட்சியையும் வெறும் எச்சரிக்கையோடு நிற்காமல் உடனே தடை செய்ய வேண்டும். இது பிரிவினை வாதம் பேசும் வைகோ போன்றோருக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்ற திடமான உறுதியான முடிவுகளை இப்போதுள்ள முதல்வர் ஜெயாவால் மட்டுமே எடுக்க முடியும்.
20-மே-2013 05:40:16 IST
தமிழக போலீஸ் நிலைமை அவ்வளவு கேவலமாக போய் விட்டதா அல்லது இதுவும் மேட்ச் fixing போல் சொல்லி வைத்து நடத்திய நாடகமா. இது போல் பிரிவினைவாத தலைவர் பங்கு கொள்ளும் கூட்டத்திற்கு எவ்வாறு அனுமதி அளித்தார்கள். சீமான் ஜெயாவின் துதிபாடியாக உள்ளதால் பிரிவினை தூண்டும் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு இத்தகைய கொடிய விஷ ஜந்துக்களை வளர விடுவது தமிழகத்திற்கு மிக பெரிய ஆபத்து. பிரிவினை வாத சக்திகளை வளர விட்டால் பாகிஸ்தானில் குண்டுகள் வெடிப்பதுபோல் அங்கங்கே குண்டுகள் வெடிக்கும்.
20-மே-2013 04:36:37 IST