சுதந்திர ஜனநாயக இந்தியாவில் ஒரு பிரதமராகிய எனக்கு இந்த கூட்டு குழு, பொரியல் குழு முன்னாடி எல்லாம் ஆஜராக எனக்கு இஷ்ட்டமில்லை ன்னு சொல்லற சுதந்திரம் கூட கிடையாதா? ஒரு பிரதமருக்கே சுதந்திரத்தை புடுங்கினீங்கன்னா பாவம் வோட்டு போட்ட / போடாத / போடப்போற / போடாத இருக்கப்போற மக்களுடைய சுதந்திரமெல்லாம் என்னாவது ??????
09-ஏப்-2013 09:54:23 IST
ஜனநாயக நாட்டில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று சொல்லிக்கொள்வதெல்லாம் வெறும் வாய்பேச்சு...... என்பது இப்போது புரிகின்றது.....
இனிமேல் நம்ம நாட்டில் முக்கியஸ்த்தர்கள் பேரில் வழக்கு வந்தால் வழக்கு ஆரம்பிக்கும் முன்பாகவே ..........உங்களுக்கு இந்தமாதிரி தண்டனையெல்லாம் தீர்ப்பில் சொல்லமாட்டோம் நீங்க தைரியமா வழக்கு நடக்கும் போது நீங்க செய்த குற்றத்திற்கு வருந்தாம ????? பெருமையா உலா வரலாம் அப்படின்னு இனிமே உங்களுக்கு உறுதி மொழி கொடுத்து விட்டுதான் வழக்கையே எடுப்போம். ..... வாழ்க சுதந்திரம் ........ வாழ்க ஜனநாயகம் ....... வாழ்க பாரதம் .......... வாழ்க அரசாங்கம் .......... வாழ்க சோனியா ......... வாழ்க காங்கிரஸ் .......... வாழ்க பாராளுமன்றம் ............. வாழ்க வோட்டு போடாத மக்கள் ........... பாவம் இந்த வோட்டு போட்ட மக்கள் ...... என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் இந்த அடிமையின் மோகம் .......... விதுரன்
09-ஏப்-2013 09:39:45 IST
காஷ்மீர் முஸ்லீம்க்கு பாகிஸ்தானில் குரல் ஒலிக்கிறது சரியோ தவறோ ???
தமிழ்நாட்டு மீனவனுக்கே இந்தியனின் (மத்திய அரசு) குரல் ஒலிக்காதபோது இலங்கைத்தமிழனுக்கா ஒலித்துவிடப்போகிறது?
...விதுரன்
15-மார்-2013 09:04:19 IST
கட்ச்சத்தீவுன்னா வெறும் மண், காஷ்மீர்னா பொன்னா? காஷ்மீரை விட்டுக்கொடுக்ககூடாதுங்கறதுக்காக தானே எல்லையில் படை, துப்பாக்கிச்சூடு, போர் எல்லாம். கட்ச்சத்தீவு மட்டும் என்ன சொத்தை கத்திரிக்காயா? காஷ்மீர் மண்ணும், காஷ்மீர் மக்களும் தான் இந்தியாவும் இந்தியர்களுமா? கட்ச்சத்தீவும் தமிழர்களும் இந்தியாவும் இந்தியர்களுமாகப்படவில்லையோ?
சிங்களவனும் இத்தாலிகாரனும் இந்தியனை தாக்கினாலும் கொன்னாலும் கேள்வி கிடையாது. காட்டு விலங்குகள் தாக்கி தமிழன் இறந்தா கேள்விகிடையாது. காட்டுவிலங்குகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள தமிழனுக்கு உரிமை கிடையாது. மிருகத்தை கொன்னுட்டான்னு மிருகவதை தடுப்புன்னு forest departmentum வனவிலங்கு ஆர்வலர்களும் வந்துடுவாங்க. மிருகத்துக்கு இருக்கிற மரியாதையும் பாதுகாப்பும் மனுஷங்களுக்கு இல்ல. இதையெல்லாம் எங்க போய் சொல்ல.......
.........விதுரன்
15-மார்-2013 08:58:26 IST
இத்தாலி தூதரகம் சுப்ரீம் கோர்ட்டில் அளித்த உறுதி மொழியினை ஏற்று ஜாமீனில் தானே 4 வாரங்களுக்கு விடுவித்தது. நம் ஊர் வழக்கப்படி ஜமீந்தாறரை கைது பண்ணி சட்டப்படி நடவடிக்கை எடுத்தால், குற்றம் சுமத்தப்பட்டவரை இத்தாலி நாடு தன்னாலே ஆஜர்படுத்திவிட்டு போகிறது. அப்படியும் சரிப்பட்டு வராவிட்டால் இத்தாலி தூதரகத்தை மூட நடவடிக்கை எடுக்கவேண்டியது தானே. இத்தாலி அம்மா இதுக்கெல்லாம் முட்டுக்கட்டை போடுறாங்களோ என்னவோ.
13-மார்-2013 15:38:44 IST
ராம்சிங் குற்றவாளி என்று இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அவன் குற்றம் சுமத்தப்பட்டவன். அவன் குற்றவாளியாகவும் இருக்கலாம் அல்லது நிரபராதியகவும் குற்றமற்றவனாகவும் இருக்கலாம். அவன் குற்றவாளிகளுக்கு உடந்தையாக மட்டுமே இருந்திருக்கலாம். அல்லது அப்ரூவராக அல்லது சாட்சியாக கூட இருந்திருக்கலாம். ஆண்டவனுக்கே வெளிச்சம். முக்கிய குற்றவாளிகள் அரசியல் புள்ளிகளின் அல்லது பெரும் புள்ளிகளின் வாரிசுகளாக இருந்து, இவன் (ராம்சிங்) வாய் திறந்தால் அது அவர்களுக்கு எதிராகவும் ஆபத்தாகவும் போய்விடக்கூடும் என்று அஞ்சி, அவனை தீர்த்துவிட்டு தற்கொலை என்று ஜோடித்திருக்க கூடுமே. இதற்கு சிறையிலும் ஒத்துழைப்பு இருந்திருக்ககூடும். எல்லா கோணத்திலும் ஆராய வேண்டும். ஆராயாமல் கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது சொல்லக்கூடாது. கோவலனுக்கு நேர்ந்த கதி யாருக்கும் வரக்கூடாது.
13-மார்-2013 14:30:03 IST
தி. மு. க. அப்பிடின்னா திராவிட முன்னேற்ற கழகம் அப்பிடின்னு நீங்க நெனைச்சா அது உங்க தப்பு. தி.மு.க. ன்னா திருவாரூர் மு. கருணாநிதி ன்னு விளங்கிக்கோங்க. அதேமாதிரி தமிழ் சமுதாயம் அப்பிடின்னா கருணாநிதியோட குடும்பமும் மேற்படி குடும்பத்தோட சம்பந்தப்பட்ட சமுதாயமும் அப்படின்னு அர்த்தம். அந்த பெரிய தமிழ் குடும்ப சமுதாயத்துக்கு தி.மு.க. தான் நிரந்தர தலைவர். யுப்போ புரிஞ்சுதா?
13-மார்-2013 11:43:23 IST
இலங்கை தமிழர்களுக்காக இரக்கப்பட்டு பந்த் நடத்துவது தவறில்லை. ஆனால் அதை யார் நடத்தினால் தவறில்லை என்பதுதான் கவனிக்கவேண்டிய ஒன்று. இதை தி.மு.க. நடத்துவதுதான் தவறு. இவர்களே மத்திய அரசில் ஒரு அங்கம். மத்திய அரசை எதிர்த்து இவர்கள் பந்த் செய்வார்களாம். அதை மக்களும் ஆதரிப்பார்களாம். யார் காதுல பூ சுத்துற வேலை. இந்தமாதிரி அறிவிக்கப்படும் பந்த் எல்லாம் மக்களுக்கு தொல்லை தரும் பந்த்கலே. இதனால் மக்கள் வெறுப்பைத்தான் சம்பாதிக்கமுடியும். பந்த் என்பது மக்களாகவே முன் வந்து நடத்தினால்தான் அதுக்கு மரியாதை.
......... ஆமாம் இவங்களை எதிர்த்து இவங்களே பண்ணிக்கிற பந்தை ஆதரிக்க மக்களை என்ன அறிவே இல்லாத முண்டங்கள்னு இன்னும் நெனிச்சிக்கிட்டு இருக்காங்க. இவங்களுக்குதான் அறிவு இல்லை. உண்மையில் பந்த் பண்ண விரும்பினால் முதலில் இவங்க மத்திய அரசுக்கு கொடுக்கும் ஆதரவை விலக்கிக்கவேண்டாமா? மந்திரிசபையிலிருந்து ராஜினாமா பண்ணி விலகிவிட்டு பிரகில்ல பந்த் பண்ண வரணும். இவங்க சுயநலம் பதவி ஆசை மந்திரி பதவியில் ஒட்டிக்கிட்டு இருக்க சொல்லுது. ஆனா இவங்க ஊர்ல இருக்கவங்களுக்கு தொல்லை கொடுக்கரதுக்காகவே பந்த் பண்ணுவாங்க .... அதுக்கு தொல்லைக்கு ஆட்படுரவங்கலே ஆதரவும் தருவாங்களாம் ....... யானை தன தலையிலே தானே மண்ணை வாரி போட்டுக்கிற மாதிரி மக்களையும் எதிர்பார்க்கிறாங்க ...... எப்பதான் மக்களுக்கு புத்தி வந்து இந்தமாதிரி அரசியல் வியாதிங்களை புரிஞ்சிக்கபோராங்களோ?
....... புரிஞ்சிக்கிட்டுதான் இருப்பாங்க ..... என்ன செய்ய ...... இந்த மாதிரி பந்த் அறிவிப்புகளின்போது நம்ப கடையை திறந்து வச்சோ ..... நம்ப வண்டியை வெளியில் எடுத்தோ ....... இல்ல நாமே பஸ்ல ட்ரைன்ல போய் ....... காலிப்பசங்ககிட்ட கல்லடியோ தடியடியோ பட்டா நஷ்ட்டமும் காயமும் நமக்குதானே ........ அதனாலதான் நாம வீட்ட விட்டு வெளியில வர்ரதில்ல ....... இதை என்னமோ அவங்க பந்துக்கு ஆதரவு கொடுத்ததா நெனச்சுக்குறாங்க........... இது நம்ம போதாதகாலம் ..........
.............விதுரன்
13-மார்-2013 10:06:39 IST