Advertisement
தினமலர் முதல் பக்கம் » Raju அவரது கருத்துக்கள்
Raju : கருத்துக்கள் ( 4 )
Raju
Advertisement
பிப்ரவரி
10
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
பேரன்புடன் கருத்துரைத்த எல்லோருக்கும் நன்றி. சிலர் கூறியது போல் யாருடைய நேரத்தையும் வீணாக்கும் நோக்கத்தில் நான் இங்கு எழுதவில்லை. என் சுயநலத்தின் காரணமாக என்னை நம்பி வந்த பெண்ணின் வாழ்வை மூன்றுக்கும் மேற்பட்ட வருடங்களாக நரகமாக்கிக் கொண்டும், மேலும் ஒரு பெண்ணின் (குழந்தைகளுடன் 4 பேர்) வாழ்வினையும் சீரழித்து விடுவேனோ என்றும் உள்ளுக்குள் எண்ணிக்கொண்டும் இருப்பதால், என் மாறா மன நிலையை கருத்தில் கொண்டே(இந்த ஜென்மத்தில் மாறுமோ???), அவர்களின் வாழ்வை மேலும் கெடுக்க விரும்பாமல் ஒதுங்குவதற்காக வேண்டி, +/- தெரிந்துகொள்ள இங்கே பதிந்தேன். நிச்சயமாக உங்களது கருத்துக்கள் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. மன்னியுங்கள் மீனவன், உங்கள் கருத்தின் ஆழத்தை புரிந்துகொள்ள முடிகிறது. நான் காதல் என்பதை காமத்தின் கன்னி பருவம் என்று கருதவில்லை என்றே நினைக்கிறேன். 'வெறும் இனக்கவர்ச்சி இல்லை என் காதல்' என்று யாருக்கும் நிரூபணம் செய்கிறேனோ இல்லையோ, எனக்கு நானே நிரூபிக்கும் தேவையை உணர்த்தியுள்ளீர். நன்றி. என் முக்கிய வருத்தம் யாதெனில், திரு கண்ணன் அவர்கள் சுட்டும் மண் குதிரையாகிய நான் ஆற்றில் இறங்குவதோ, திரு Gokzz அவர்கள் கூறுவதுபோல் கனவுலகில் வாழும் பேருபெற்ற நான் நிஜ உலக பிரஜைகளின்(4) வாழ்வில் மீதமுள்ள நாட்களை நாசமாக்க வேண்டுமோ என்றே எண்ணுகிறேன். உங்கள் வார்த்தைகள் விழலுக்கிறைத்த நீராகியிருப்பின், மன்னியுங்கள், உங்கள் பொன்னான நேரங்களை திருடியதற்கு. தினமலருக்கும், அனைவருக்கும் நன்றியுடன் ராஜு.    17:32:18 IST
Rate this:
9 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
3
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
நன்றி HoustonRaja அவர்களே. அக்கொடுமையான தனிமையை பழகிக் கொண்டு இருக்கிறேன். திரு Gokzz அவர்கள் கூறுவது போல், நான் யாருடைய வாழ்கையையும் மென் மேலும் நரகமாக்க விரும்பவில்லை. இத்துடனாவது நிறுத்திக்கொள்ள விரும்புகிறேன், அவர்கள் நலன்/எதிர்கால வாழ்க்கை கருத்தில்கொண்டு. ஆனால் அதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. கடனுக்கு அவர்களிடம் குடும்பம் நடத்த விருப்பம் இல்லை. பதில் சொல்லும் நாட்களுக்காக காத்திருக்கும்... ராஜு.   14:41:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
3
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
என்னால் என்னவளை மறக்க முடியாது. கடந்த முன்று ஆண்டுகளை புரட்டி பார்த்த பின், ஒன்றை மட்டும் நிச்சயமாக கூற விரும்புகிறேன். என் ஆழ்மனதில் இருக்கும் அவளால் மட்டுமே/அவள் பற்றிய எண்ணம் தரும் ஆறுதலால் மட்டுமே என் வாழ்வு பயணம் தொடர்ந்து கொண்டுள்ளது. மிகவும் அறிதாக அவளை பார்க்க கிடைக்கும் வாய்ப்புகள், பேசும் சந்தர்பங்கள் மட்டுமே என் வாழ்வின் இதயத்துடிப்புகளாகின்றன. அவள் என்னை தூக்கி எறிந்து விடுவாளோ என்ற பயம் என் மனதில் சில சமயம் இருக்கத்தான் செய்கிறது. அது தான் அவளது உண்மையான விருப்பம் என்றால், என்னவள் விரும்பும் வாழ்விற்கு எந்த சூழலிலும் நான் தடையாக இருக்க மாட்டேன் என நம்புகிறேன். அவளுடன் நான் இருக்கிறேன்/இல்லை என்பதை பற்றி கவலைபடப் போவதில்லை. அதே நேரம் மதிப்பிற்குரிய கண்ணன் அவர்கள் கூறியது போல், நான் அவளை நடுத்தெருவில் விடும் வாய்ப்பு இல்லை. ஏனெனில், நான் அவளுடன் சேரவே போவதில்லை, நான் அவளுக்கு துன்பம் என்றால். நான் அவளுக்கு எவ்வாறு துன்பம் ஆக முடியும் என்ற யோசனையில் தான் மீண்டும் இங்கு பதிகிறேன். உங்கள் கருத்துகளுக்கு நன்றி. அதே மாதிரி மேலும் என் குடும்பத்திடமும், என்னை கல்யாணம் செய்த பெண்ணுடனும் மற்றும் இந்த சமூகத்திடமும் போலியாக வாழ்ந்து, ஏமாற்ற விரும்பவில்லை. அதனால் தான் தேவைப்பட்டால் எல்லோரையும் பிரிந்து விடவும் காத்திருக்கிறேன். குடியை வெறுத்து, எங்கள் குடும்பம் செய்த சாராய வியாபாரத்தை ஏழ்மையிலும் என் 17 வயதில் நிறுத்தினேன் என்று பெருமையுடன் வாழ்ந்தேன். இதோ நான் குடிக்க ஆரம்பித்து 2.5 வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கு கருத்து கூறுபவர்கள் அடையாளம் காணும் முட்டாளாக, லூசாக, ஈகோவாக இருப்பதையே விரும்புகிறேன். ஆம் இந்த லூசால் என்னை மணந்த பெண்ணிடம் பேசத் தோன்றவில்லை, பார்க்க பிடிக்கவில்லை, அவர் இருப்பதால் என் விட்டிற்கு போக பிடிக்க வில்லை, வேறு வழின்றி போக நேர்ந்தால், நான் பிறந்து வளர்ந்த வீட்டில் பச்சை தண்ணியோ உணவோ அருந்த பிடிக்கவில்லை, அதற்கு பட்டினியாக இருப்பதே பரவாயில்லை என்றாகிறது. ஆம் எனக்கு பிறந்த குழந்தை, அக்குழந்தைக்காக என்று கூறி என்னுடன் மட்டுமே வாழ்வேன் என்றுறைப்பதால், குழந்தையை விட்டும் விலகுகிறேன். இப்படியாக நிறைய... முற்றி விட்டதாக படுகிறதல்லவா? இருப்பினும் சைக்கோவாக மாட்டேன், என் அருகில் இருப்பவர்கள் பயப்படத் தேவை இல்லை. (மேலும் பல நல்ல உள்ளங்களை வருந்த செய்ததிற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.)   13:53:54 IST
Rate this:
73 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
3
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
வணக்கம், என்னுடைய வயது 30 . ஏழை விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன். நான் பட்டயப் படிப்புடன், ஒரு மென் பொருள் நிறுவனத்தில் பணி புரிகிறேன் கடந்த 5 வருடங்களாக.. “நான் சரியான விலாசத்துடன் வந்து தவறான முகவரியில் தந்து விட்டு சென்று விட்ட தபால்” ஆகிவிட்டேன். சரியான என்னவளின் விலாசத்திற்கு போய்ச்சேரும் என் ஆசையை நிறைவேற்ற தயவுசெய்து உதவுங்களேன்… வாழ்வில் நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என் மண வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டேன். என் தம்பி, தங்கை மண வாழ்விற்கு எவ்விதத்திலும் தடையாக இருக்க கூடாது என்பதால், என் விதவை தாய்க்கு அதிக சிரமம் கொடுக்க கூடாது என்பதாலும் என் 27 வயதில் 24 வயது இளநிலை பட்டம் பெற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன். அப்பெண்ணுடன் கல்யாண பத்திரிக்கை கொண்டு செல்லும் போதுதான் அப்பெண்ணின் நண்பியான அக்-கைம்பெண்ணை (அப்போது என் அவள் வயது 27) சந்தித்தேன். அப்போது எனக்குள் தோன்றிய எண்ணங்கள்,”நான் இப்பெண்ணை தான் மணந்திருக்க வேண்டும், அவளின் செல்லக் பெண்குழந்தைக்கு(வயது 6) ஒரு நல்ல அப்பாவாகவும் இருக்க வேண்டும்” என்றே தோன்றியது. ஆனால் தைரியம் எனக்கு இல்லை செய்த கல்யாண ஏற்பாடுகளை நிறுத்தும் அளவிற்கு, ‘நான் உன் தோழியை மணம் செய்ய விரும்ப வில்லை, உன்னைத்தான் மணம் செய்ய விரும்புகிறேன்’ என்று என்னவளிடம் கூறும் அளவிற்கு. அவளுடன் மட்டும்தான் என் வாழ்கையே இருக்க முடியும் என்பதை எனக்கு கூறிட யாரும் அன்று இல்லை. பயந்து, என் விதியை நொந்து கொண்டு விதிப்படி, கல்யாணம் செய்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என்று எண்ணி, கல்யாணமும் செய்தேன், உடனே ஒரு பெண் குழந்தையும் உருவாகி விட்டது. நான் திருமணம் செய்த பெண்ணிடம் ஒரு மாதமே பேசி பழக முயற்சி செய்தேன், அப்பெண்ணிடம் என் மனம் ஒன்றவே இல்லை. எப்போதும் என் மனம் என் வாழ்வையே இழந்துவிட்டதாகவே எண்ணி மனம் புழுங்கி எதிலும் விருப்பம் இல்லாமல் செயல் பட ஆரம்பித்தது. பல முறை முயன்றும் என் மனதை என்னால் சமாதானம் செய்ய முடியவில்லை. விளைவு வீட்டில் பெரும் சண்டை. கல்யாணம் செய்த 4 மாதங்களில் என் குடும்பத்தார், அப் பெண்ணின் குடும்பத்தார் எல்லோரும் வந்து பேசும் அளவிற்கு சென்று, 3 மாதம் முழுகாமல் இருந்த அப் பெண்ணிடமும் மற்றும் எல்லோரிடமும் எனக்கு விவாகரத்து கண்டிப்பாக வேண்டும் என்று கேட்டேன். அன்று முதல் இன்று வரை நானும், அப் பெண்ணும் தனி தனியாகத்தான் வாழ்கிறோம். பேசிக்கொள்வது கூட இல்லை. நான் வேலை செய்யும் இடத்தில தனி ரூம் எடுத்து தங்கி இருக்கிறேன். என் அம்மாவுடன், குழந்தையுடன் என் ஊரிலேயே அவர்கள் இருந்து வருகிறார்கள். எங்களை சேர்த்து வைக்க எடுக்கப்பட முயற்சிகள், அறிவுரைகள் எல்லாவற்றயும் காற்றில் பறக்கவிட்டேன். நாளுக்கு நாள் அதிகமான வெறுப்பு அப்பெண்ணை பார்த்தாலே வெறுக்கும் அளவிருக்கு போய்விட்டது. என் மனம் இப் பெண்ணிடம் வாழ 0.01% கூட சம்மதிக்க இல்லை என்பதை சொன்னேன். ஆனால் “நீ வாழ்ந்தால் என்னோடு மட்டுமே வாழ், இல்லையேல் செத்துப்போ, அப்புறம் நான் தனியாக வாழ்ந்து கொள்கிறேன். இப்போது போக மாட்டேன் என்கிறார்கள்” அப்பெண்மணி. பக்தி,ஆன்மிகம்,சன்யாசம் போன்ற வார்த்தைகளை ஆராய்ந்து, மாற்று வழியாக முயன்று, என்னவளுடனான(என் காதலி) வாழ்வு மட்டுமே முடியும் என்று திரும்பி விட்டேன். ஒருவேளை என்னவளுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் இந்த ஜென்மத்தில் இல்லாமல் போனாலும், அவளுடைய நினைவுகளுடனே வாழ விரும்புகிறேன்(தமிழ் சினிமா கிளைமாக்ஸ் இல்லங்க) நிஜமாக. என்னை அவளுடனும் சேர்ந்து வாழ விட மாட்டேன், அவள் நினைவுகளுடன் நான் தனியாக வாழவும் கூடாது என்கிறார்கள், நான் தாலி கட்டியப் பெண்ணும், என் குடும்பத்தாரும். கல்யாணம் செய்து பின் ஒருநாள் "நான் உன் தோழியை முதலில் சந்தித்திருந்தால், அவளையே மணம் செய்திருப்பேன்" என்று நான் தாலி கட்டிய பெண்ணிடம் கூறி விட்டேன். இந்த செய்தி என்னவள் காதிற்கும் யார் மூலமோ சென்று விட்டது. பின்பு நான் பேச கிடைத்த சந்தர்பங்களில் நான் அவ்வாறு கூறி இருக்க கூடாது என்றும் அது அவர்கள் நீண்ட நாள் நட்பை அழித்து விட்டதாகவும் கூறி வருத்தப்பட்டுள்ளாள் என்னவள். என்னவளுக்கு எங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் தெரியும். இப் பிரச்சினைக்கு மூல காரணம் என்னவள் மீதுள்ள காதல் என்பதை நான் யாரிடமும் நேரடியாக ஒப்புக்கொள்ள வில்லை என்றாலும் எல்லோருக்கும் இது தெரிந்த ஒன்றே. என்னுடைய விருப்பத்தை இந்த நாள் வரை யாரும் அங்கீகரிக்க வில்லை, எங்கள் குடும்பம், ஊர், நட்பு எல்லோருமே.இங்கே நான் செய்த எதையும் ஞாயப்படுத்த விரும்ப வில்லை. இதை எல்லாம் நான் விரும்பும் அப் பெண்ணிடம் முழுமையாக/நேரடியாக பேசியதில்லை. நான் தாலி கட்டியப் பெண் எனக்கு விவாகரத்து கொடுத்த பின் என்னவளுடன் இவ்விசயங்களை வெளிப்படையாக பேசலாம் என்று தோன்றுகிறது. ஆனால் இந்த விவாகரத்து கிடைக்கும் நம்பிக்கை மிகவும் குறைந்து விட்டது. உண்மையில் என் மனம் என்னவளை மட்டுமே நினைக்கிறது, அவளுடன் மட்டுமே பேச துடிக்கிறது, அவளுக்காக மட்டுமே வாழ வேண்டுகிறது, அவள் இல்லையேல் எனக்கு எதுவும் (வாழ்வு, அம்மா, குழந்தை, குடும்பம், நட்பு, ஊர், உலகம், உணவு, உயிர் எல்லாமே) வேண்டாம் என்றே தோன்றுகிறது. நான் எல்லாவற்றையும் இழந்து விட்டதாகவே படுகிறது. நான் பிதற்றுவதாகதான் உங்களுக்கு தோன்றும், இது கடந்த 3.5 வருடங்களாக நான் படும் சித்ரவதை. என் இயலாமை கண்டு எனக்கு என் மேல் ஏகப்பட்ட வெறுப்பு. யாரிடமும் பேச, பழக, சந்திக்க விருப்பம் இல்லை. தனிமை மட்டுமே விரும்புகிறேன். என் வேலையில் கடமை உணர்ச்சி/முன்னேற்றம் இல்லை. தற்கொலை எண்ணம் தொடர்ந்து இருந்ததாலும், அதற்கும் தைரியம்இல்லை. மன நோயின் பண் பட்ட நிலையில் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. நான் வாழ்க்கையில்(/காதலில்) தோற்று கொண்டிருக்கிறேன். வெற்றி பெற வழி தெரிந்தால் காட்டுங்களேன் தயவு செய்து. என்னால் வாழ முயன்று முடியாமல் போன, ஏற்கனவே எல்லோரும்(உறவு/நட்பு) கூறிய, ‘நான் தாலிக்கட்டியப் பெண்ணிடம் சேர்ந்து வாழ வேண்டும்’ என்று தயவு செய்து மீண்டும் கூறவேண்டாம். (நான் வாழ்ந்து சாதிப்பது என்ன என்கிறீர்களா?) எல்லோருக்கும், தினமலருக்கும் நன்றி....   00:52:50 IST
Rate this:
57 members
0 members
2 members
Share this Comment