\\\\ உண்மையில் மாநிலத்தில் உள்ள ரேசன் கடைகள் முழுவதும் ,மன்மோகன் சிங் படமும் , சோனியா காந்தி படமும் போடா வேண்டும்....... //// மன்மோகன் சிங்கின் படம் சரி .... சோனியா படத்தை ஏன் போடவேண்டும்? தில்லியில் இருப்பதால் அவ்வளவு பக்தியா நவமயம்? கலைஞர் படம் இருந்தபோது அதெல்லாம் தெரியலையோ?
23-மே-2013 14:56:17 IST
அக்கம் பக்கத்தில் யாராவது ஏழைகள் பசியுடனிருந்தால் ஒரு வேளை உணவு கூடக் கொடுக்க மாட்டார்கள் ..... இது போன்ற கோவில்களுக்குச் சென்று கொட்டிக் கொடுப்பார்கள் ..... "மனித உணர்வுடன் இயைந்த அன்பே எனது மதம்" என்று விவேகானந்தரே கூறியுள்ளார் ....
23-மே-2013 14:52:48 IST
பல வாசகர்கள், பங்கு கேட்கும் அந்தப் பெண்ணைக் குறை கூறியுள்ளனர் ..... நீதிபதியையும் பரிகசித்துள்ளனர் ..... நமது இந்தியச் சமூகத்தில் ( தொன்று தொட்டு ) குடும்பத்திற்காக வருமானம் ஈட்டுதல் கணவனுடைய கடமையாகவும், குடும்பம் பேணுதல், குழந்தைகள் பெற்றால் அவற்றைப் பேணுதல் பெண்ணின் கடமையாகவும் இருந்து வருகிறது ...... சில காரணங்களுக்காக மனைவியைப் பிரிந்து வாழ்ந்தாலும் அந்தக் குழந்தை இவனுடையதுதானே? அதை மாற்ற முடியாதே. வேலை இல்லை என்ற காரணத்தால் அவர்களைப் பராமரிப்பின்றி விட்டு விட முடியுமா? ( நான் ஆணாதிக்க வாதியோ, பெண்ணாதிக்க வாதியோ அல்லன் )
23-மே-2013 14:47:16 IST
\\\\ கோவில் குளம் எல்லாம், கடவுள் மேல் உண்மையான நம்பிக்கை இல்லாதவர்களுக்கு மட்டுமே..... //// தமிழகத்தின் பெரும்பாலான பழம்பெரும் கோவில்கள் சுமார் அறுநூறு ஆண்டுகள் முதல் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகள் காலத்திற்கு முற்பட்டுக் கட்டப்பட்டவை ...... பெரும்பாலானவை பிரம்மாண்ட அளவில் கட்டப்பட்டுள்ளன. கட்டியவர்கள் மூவேந்தர்கள் உட்பட பல்லவர்கள், மராட்டிய மன்னர்கள் ஆகியோர் ..... இன்று நாகரிகத்திலும், தொழில் நுட்பத்திலும் சிறந்த நாடுகளாக நாம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைக் கருதி வருகிறோம் ...... ஆனால் அங்கெல்லாம் நாகரிகம் வளர்ச்சி அடையும் முன்னரே நாம் ஆன்மிகம், சமூக அமைப்பு, கடல் கடந்த வணிகம் என்று நாகரிகத்தில் முதிர்ச்சி அடைந்தவர்களாக இங்கே வாழ்ந்திருந்தோம் அவர்களுக்கெல்லாம் நம்ம விருமாண்டி-க்கு உள்ள விழிப்புணர்வு, அறிவு இல்லையே ????
23-மே-2013 14:13:38 IST
பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் திமுகவுக்கோ, காங்கிரசுக்கோ வாக்களித்தால் அது தலை அரிக்கிறதே என்று கொள்ளிக்கட்டையால் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும் ..... இதை மறுப்பவர்கள் நான் ஏன் அவ்வாறு எழுதியுள்ளேன் என்று சிந்தியுங்கள் .....
22-மே-2013 14:08:03 IST
\\\\ போய்ப்பேசி கட்ச தீவை மீட்டு கொண்டு வர வேண்டியது தானே.......... //// உம்ம தானைத் தலைவர் தம் மீதான ஊழல் வழக்குகளினின்றும் தப்பிப்பதற்காக தாரை வார்க்க மத்திய அரசுக்கு உதவுவார் ..... காவிரி டெல்டா விவசாயிகள் நா வறண்டு, பயிர் வறண்டு சாவதற்காக கபினி ஆணை கட்டிக் கொள்ள கர்நாடகாவிற்கு அனுமதி வழங்குவார் (இது இன்னொரு துரோகம்) ...... ஆனால் ஜே தான் ஒவ்வொன்றாக செய்து சாதிக்கிறார் ,...... "மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்காக மண்ணெண்ணெய் பெற வக்கில்லையா என்று கூட கேட்டார் உங்கள் தானைத் தலைவர் (அப்போ மத்தியக் கூட்டணியில் இருந்தீர்கள் ...... """"நாங்க கெடுத்துக் குட்டிச் சுவர் ஆக்குவோம் ..... உங்களால சரி பண்ண முடியாது"""" என்று எக்காளமிடுவது ,,,, கொக்கரிப்பது ..... இதெல்லாம் நல்ல பண்பா தங்கராஜா?
22-மே-2013 14:06:03 IST
காங்கிரஸ் கூட்டணியில் இருந்த பொழுது திமுகவிற்கு மத்தியில் நல்ல செல்வாக்கு அதிகாரம் இதெல்லாம் இருந்தும் கடிதம் எழுதி அக்கறை இருப்பது போலக் காட்டிக் கொண்டதற்கும், இதற்கும் உள்ள வித்தியாசத்தை சென்னை நண்பர் உணராதது ஏனோ?
22-மே-2013 13:59:49 IST