"அப்பா, காவல் துறையில் பணிபுரிபவர் என்பதால், மக்களுக்கான சேவை செய்து குறித்து, எப்போது வீட்டில் பேசி கொண்டே இருப்பர். அப்பாவின் பேச்சு, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அதிகப்படுத்தியது."ஒரு தந்தையாக மிக சரியாக தனது கடமையை செய்துள்ள இவருக்கு என் நன்றிகள்.பெற்றோரின் கடமை பிள்ளைகளிடம் நல்ல ஆர்வத்தைதுண்டுவதுதான்.வாழ்க்கை பயணத்திற்கான வழிகாட்டி நூல்களை மட்டும் கொடுங்கள் ,பயணத்தை மேற்கொள்ளும் ஆர்வத்தையும் தகுதியையும் தூண்டிவிடுங்கள்.அவர்களுக்கான இலக்கை நோக்கிய பயணத்தை அவர்களே மேற்கொள்ளட்டும்.அவர்களைதூக்கி சுமந்துகொண்டு கொண்டு உங்கள் பாதையில் நடப்பதை விடுங்கள்.வெற்றிபெற்ற அனைவருக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள்,பெற்றோர்,உறவினர் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள்.இவர்கள் தங்கள் பதவியில் நேர்மையாகவும் சமுதாயத்திற்கு நலம்பயக்கும் வகையிலும் பணியாற்றினால் அனைவரது உழைப்பிற்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.செய்வார்கள் என நம்புவோமாக.
04-மே-2013 06:55:30 IST
இவ்வாறான தான செயல்களுக்கு நன்றி என்பதை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை.இவரது உடல் உறுப்புக்களை தானம் பெறுவோர் ஒரு அர்த்தமுள்ள வாழ்கை வாழ்ந்து இந்த தானத்தையும் அதை அளித்தவர்களையும் பெருமைப்படுத்த வேண்டுகிறேன். மேலும் வாழும்காலத்தில் மது ,குட்கா மற்றும் போதை பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருந்து உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டுமே இறந்தபின்னும் நம் உடல் உறுப்புக்களை பிறருக்கு தானம் செய்ய இயலும் என்பதை உணர்ந்துகொண்டு வாழும்போதே நல்ல பழக்கவழக்கங்களுடன் வாழ்வோம்.
04-மே-2013 06:36:04 IST
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனாவை அசைக்க முடியாமல் மிரட்டமுடியாமல் இந்திய அரசாங்கம் தடுமாறிகிடக்கையில் அவர்களை விரட்ட இயற்க்கையாவது சற்று முயற்சி எடுத்துள்ளதே.இந்தியாவிற்கு பயந்து இல்லாவிடினும் இயற்கையின் சீற்றதிர்கேனும் பயந்து ஒடுவார்களாக. நன்றி இறைவா.
01-மே-2013 16:00:17 IST
இதற்கும் பழக்க தோஷத்தில் "இதனால் மத்திய அரசின் ஆட்சிகாலதிர்க்கு எந்தவித பாதிப்பும் வராது.ஐயிக்கிய முற்போக்கு கூட்டனி தனது முழு ஆட்சிகாலத்தையும் நிறைவுசெய்யும்" என நமது ப.சி. அறிக்கை கொடுத்தாலும் கொடுப்பார்.இதற்க்கு சற்றும் சளைக்காது " அதுதான் இன்னமும் ஊடுருருவல் காரர்கள் நாட்டினுள் பயங்கரவாத செயல்களை செய்யவில்லையே பிறகு எப்படி அவர்களால் நாட்டிற்க்கு ஆபத்து என சொல்லமுடியும்?" என கபில்சிபில் போன்றோர் வரிந்துகட்டிக்கொண்டு வரலாம்.நாமெலாம் எந்த நம்பிக்கையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே தெரியவில்லை.(ஏப்பா கிரிகெட் ஸ்கோர் என்ன ?)
01-மே-2013 08:49:41 IST
மத்திய ஆட்சில் பங்கு பெற்று, உறுதியாக கேட்டால் நிச்சயமாக பெறமுடியும் எனும் நிலையிலும் பெயருக்காக முன்னாள் முதல்வர் கடிதம் எழுதி காலம் கடத்திகொண்டிருந்ததையும் தற்போதைய முதல்வரின் செயல்பாட்டையும் ஒப்பிட முடியாது நண்பரே.
26-ஏப்-2013 14:57:00 IST
சுட்டு தின்பான் என தெரிந்தும் புறாவை பறகக விடுவதேன்? " கொத்தாதே என்றுதான் சொன்னேன், சீறாதே என சொல்லவில்லையே " என பாம்பை கேட்ட முனிவரின் கதைதான் நினைவுக்கு வருகிறது. தன்மானமில்லாதவனது சமாதானத்தை யாரும் மதிக்க மாட்டார்கள். நாட்டின் பாதுகாப்பை விட தங்களது ஆட்சியின் ஆயுட்காலம் பற்றி மட்டுமே கருத்தாக கொண்டு ஆண்டு வருபவர்களை என்னவென்று சொல்வது?
26-ஏப்-2013 12:30:08 IST
தனது நாட்டு ராணுவத்தினர் மூலம் அயல் நாட்டு எல்லைகளுக்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்யும் சீன நாட்டு அரசியல்வாதிகளுக்குதங்களது சொந்த நாட்டினுள் சொந்த மக்களை காக்கும் பணியை மட்டும்பாருங்கள் என இயற்க்கை அன்னை தன் செயலால் நினைவுட்டுகிறாள்.இது சீனனுக்கு புரிந்தால் சரி.உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அப்பாவிமக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். நமது நாட்டு அரசியல்வாதிகளுக்கும் என்று எப்படி ஆண்டவன் எச்சரிக்கை மணி அடிப்பானோ ?
22-ஏப்-2013 05:48:35 IST
இந்த விசயத்தில் சீனாவே பேச்சுவார்த்தைக்கு நம்மை அழைத்தாலும் சீனாவின் இந்திய ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு பிறகு பேச்சுவார்த்தைபற்றி சிந்திக்கலாம் என்று பதில்தரும் நிலையில் நாமிருக்கவேண்டும்.அதனினும் அத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்ற முதலில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இழந்துவிட்டபின் பேசி வாங்கிகொள்ளலாம் என்று இருந்தாலோ அல்லது அத்தகைய இழப்புகளால் நமது நாட்டிற்கு உடனடியாக இழப்பேதும் இல்லை என அறிக்கைகுடுப்பதாக இருந்தாலோ எல்லையில் இருக்கும் நமது ராணுவத்தை உடனடியாக மீட்டுக்கொள்ளலாம்.அவர்களை அங்கிருக்கவைத்து வீணாக ஏன் பாடாய் படுத்துவானேன்
20-ஏப்-2013 09:50:58 IST
இத்தனை நாட்களாக , "கருணாநிதியின் வழிகாட்டுதலின்படி நடைபோடும் ஐக்கிய முற்போக்கு கூட்டனி " என்றபோது வாயெல்லாம் பல்லாக இருந்தது.ஆனால்தவறு சுட்டிகாட்டப்ப்படும்போது மட்டும் ஒரு மத்திய அமைச்சரால் பிரதமரை தவறாக வழிநடத்தமுடியாது என மறுப்பு விடுக்கமுடிகிறது.போராட்டமென்றால் சிலிர்ப்பதுவும் நடவடிக்கை என்றால் வெறும் காகிதத்தைதானே எரித்தோம் என பல்டிஅடிப்பதுவும் கருணாநிதிக்கு புதிதா என்ன?அடுத்த ஆண்டு துவங்க இருக்கும் மக்கள் நலதிட்டதிர்க்கும் முன்னைய தனது ஆட்சியிலேயே பிள்ளையார் சுழி போட்டவன் நான் என பெருமைபேசுவார்.ஆனால் தற்போது பதினாலு மணிநேரமாக இருக்கும் மின்வெட்டிற்கு தனது பொறுப்பற்ற ஆட்சியையும் ஒரு காரணம் என ஒப்புக்கொள்ளமாட்டார். கொள்ளு என்றால் வாயை திறப்பதுவும் கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்வதுவும் குதிரைக்கு மட்டும் பழக்கமானதல்ல.
20-ஏப்-2013 06:13:15 IST
வாழ்த்துக்கள் திரு. நாராயணசாமி,பள்ளி சென்று பயிலவில்லை என வருத்தம் கொள்ளவேண்டாம்.அவ்வாறு சென்றிருந்தால் நீ மற்றவரின் வாழ்க்கையைத்தான் மனப்பாடம் செய்து ஒப்பித்துகொண்டு கிளிப்பிள்ளையாய் ,சர்க்கஸ் புலியாய்,வயிற்றை நிரப்ப ஒரு வேலையை கற்றவனாய் இருந்திருப்பாய். .ஆனால் உன் சுய ஆர்வத்தாலும் முயற்சியாலும் இன்று உலகமே படிக்கும் ஒரு நாயகனாய்,உன் மனதிற்கு பிடித்த வேலையை செய்பவனாய் உருவாகிவிட்டாய்.வாழ்த்துக்கள்.ஆத்ம பயணம் தொடரட்டும்.உன் சாதனை விதை ஆலமரமாய் தழைக்கட்டும்.
16-ஏப்-2013 05:32:27 IST