ஒரு வருடம் மட்டுமே +2 படித்துவிட்டு இது போன்ற சாதனைகளை இந்த மாணவர்கள் எடுத்திருந்தால் கண்டிப்பாக இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் நாமக்கல்லில் பல பள்ளிகளில் +2 பாடத்தை இரண்டு வருடம் நடத்துகிறார்கள். அங்கு +1 என்று ஒன்று இல்லை. . கண்டிப்பாக அரசு இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் பள்ளி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு மாணவர்களை அதிக சுமை தூக்க வைக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளி பாடத்திட்டத்தில் இன்னும் மாற்றங்கள் கொண்டு வந்து சிறந்த போட்டியை கொடுத்து தலை சிறந்த அறிவார்ந்த மாணவர்களை வெளிக்கொண்டு வர வேண்டும்.
10-மே-2013 07:05:48 IST
இங்க இருக்கும் கருத்தை படிக்கும் பொது, நமக்கு உள்ளேயே ஒற்றுமை இல்லாததைதான் காட்டுகிறது. முதல்வர் கேட்ட கேள்விகள் அனைத்தும் நாம் கேட்க வேண்டியது. நம் அனைத்து அரசியல் கட்சிகளும் கேட்க வேண்டியது. அப்படி கேட்டிருந்தால், முதல்வர் கேட்டதுக்கு இவ்வளவு விமர்சனங்கள் வந்திருக்காது. ஆனால் நாம்தான் தமிழர்கள் ஆச்சே. யார் எக்கேடு கேட்டால் என்ன என்று கேள்வி கேட்காமல், கேள்வி கேட்பவர்களையும் விமர்சிப்பவர்கள் தானே நம் தமிழர்கள். நடுநிலைமையாக எழுதுங்கள். நீங்களும் அரசியவாதிகள் போல கட்சி தொண்டர்கள் போல கருத்து எழுதாதீர்கள்.
27-டிச-2012 15:53:55 IST
10 நிமிடத்தில் ஒரு மாநிலத்தின் பிரச்சினைகளை பேசுவது சாத்தியமில்லாதது. அதுவும் தேசிய வளர்ச்சிக் கழகத்தில் மாநிலத்தின் தேவைகளை பேசுவதற்கு 10 நிமிடம் கண்டிப்பாக போதாது. இது எல்லாம் தெரிந்த NDC கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கும் தெரியும். அப்படி இருக்கையில் கண்டிப்பாக இதில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதாகத்தான் தெரிகிறது. ஆதாரங்கள் மற்றும் புள்ளி விவரங்கள் இல்லாமல் இங்கு பேச முடியாது. அதனால் தமிழக முதல்வர் சொல்வது முற்றிலும் உண்மையாகத்தான் இருக்க முடியும். பாமர மக்களுக்கும் தெரியும் என் காவிரியில் நீர் இல்லை என்று. மீனவர்கள் கொல்லபடுவதிற்கும் எந்த தீர்வும் கிடையாது. மதிய தொகுப்பிலிருந்தாவது சிறிது மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்கலாம். அதுபோல் இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினால் கிராமத்தில் இருக்கும் சாராய கடைகளுக்கு தான் வருமானம். வேலைக்கும் அங்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. இந்த திட்டத்திற்கு தேசபிதா வின் பெயர் வேறு. நம் முதல்வர் சரியாக தான் இந்த திட்டத்தை பற்றி சொல்லி இருக்கிறார். அதுபோல் நம்முடை அரசியல் அமைப்பு சட்டத்தில் மாநிலங்களுக்கு இருக்கும் சில உரிமைகளையும் இந்த மைய அரசு தன கையில் எடுத்து கொண்டு தன் சொல் கேட்காத மாநிலங்களை அடக்க பார்க்கிறது. அப்படி கேட்காத முதல்வர்களை IB மற்றும் சிபிஐ பயன்படுத்தி அவர்களின் பலவீனங்களை தெரிந்து கொண்டு (ஊழல்கள்) மிரட்டுகிறது(லாலு, முலாயம், மாயாவதி). இப்படி தான்தொன்றிதனமாய் நடக்கும் மத்திய அரசு பற்றி நம் முதல்வர் குற்றம் சாட்டுவது சரியே. மேலும் நம் முதல்வரும் சில நேரங்களில் நல்ல ஆலோசனைகளை எதிரிகள் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
27-டிச-2012 15:45:58 IST
வருண பகவானுக்கு நன்றி. வாக்கு, கடமை தவறும் மக்களை போல் நீ இல்லாமல் உன்னுடைய சீசனில் நீ கடமை தவறாமல் பொழிய வேண்டும் என உன்னை வேண்டி கொள்கிறேன்.
27-டிச-2012 08:23:45 IST
எல்லோரும் உண்மையை முழுவதுமாக புரிந்து கொண்டு கருது எழுதுங்கள். டெல்லி சம்பவம் நடைபெற்ற விதம் தூத்துக்குடியில் நடை பெற்ற விதத்தில் இருந்து வேறுபட்டது. டெல்லி ல் அந்த பெண் தன ஆண் நபருடன் நள்ளிரவில் அந்த குறிப்பிட்ட பேருந்தில் பயணிக்கிறாள். அங்கு ஏற்கனவே இருந்த ஆண்கள் அந்த பெண்ணை கிண்டல் செய்கிறார்கள். அதனை அந்த ஆண் நண்பர் தட்டி கேட்கிறார். அவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது. கைகலப்பு ஆகிறது. ஒருவரை ஒருவர் அடித்து கொள்கிறார்கள். அந்த பெண் அவருடைய நண்பருக்கு ஆதரவாக வருகிறார். அந்த பெண்ணும் கொடூரமாக இரும்பு கம்பிகளால் தாக்க படுகிறார். அவளுடைய ஆடைகள் கிழிக்கபடுகின்றன அந்த சண்டையில். இதுபோல் அந்த ஆண் நண்பரின் ஆடைகளும் கிழிக்கபடுகின்றன. அந்த கொடூரர்கள் அந்த பெண்ணை பழிவாங்கும் நோக்கில் மானபங்கபடுதுகிறார்கள். ஆனாலும் அந்த பெண் இங்கு கற்பழிக்கபடவில்லை. மானபங்கம் வேறு கற்பழிப்பு வேறு. கண்டிப்பாக இதுவும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவை. இந்த செய்தியை மிக பெரிதாக ஆக்கி பாரளுமேன்றதைய நடத்தவிடாமல் செய்தது மிக பெரிய முட்டாள்தனம். இந்த மானபங்கம் ஒரு அரசியல் வாதியின் வாரிசால் நடத்தப்பட்டு இருந்தால் கண்டிப்பாக இந்த விவகாரம் வெளியில் வந்து இருக்காது. இதற்கு காரணம் மீடியாக்கள் தான். அவர்கள் தங்கள் சுயநலத்துக்காக இதனை பயன்படுத்துகிறார்கள்(தினமலர் மன்னிக்கவும்). தூத்துக்குடி சம்பவம் மிக கொடுமையானது. இதற்காக யாரும் போராடினது மாதிரி தெரியவில்லை. காரணம் அந்த பள்ளி மாணவி கிராமத்தில் இருப்பவர். கிராமத்து மக்களின் பிரச்சினைகளை இந்த மீடியாக்கள் ஒருபோதும் வெளிபடுத்துவது இல்லை. அதுபோல் பவர் கட் பிரச்சினை, சுத்தமான குடிநீர் பிரச்சினை, விவசாயிகளின் தற்கொலை பிரச்சினை, தமிழக மீனவர்களின் பிரச்சினை, ஊழல் பிரச்சினை, அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் பிரச்சினை, கொலை கொள்ளை பிரச்சினை, கூலிப்படை பிரச்சினை, பள்ளிக்கூடம் அருகிலே சாராயம் விற்கும் பிரச்சினை, போக்குவரத்து பிரச்சினை, கழிப்பிட வசதி இல்லாத பிரச்சினை, மரங்களை வெட்டி சுற்றுப்புரத்தை கெடுக்கும் பிரச்சினை, நதி நீர் மாசுபாடு பிரச்சினை, ஆற்று மண் விதிமுறைகளை மீறி அல்லும் பிரச்சினை, கல் குவாரி பிரச்சினை, வேலைக்கு ஆட்கள் கிடைக்காத பிரச்சினை, இன்னும் பல பிரச்சினைகளுக்கு ரோட்டில் வந்து போராடி இருக்கீர்களா? போராட மாட்டீர்கள். என் என்றால் அது சமுதாயம் சார்ந்த ஏழை குடிமக்கள் பிரச்சினை. இந்த பிரச்சினைகள் உங்களை(மீடியாக்களால் நடத்தபடகூடிய மிடில் மற்றும் அப்பர் கிளாஸ்) கண்டிப்பாக பாதிக்காது. என்று நீங்களா சமுதாய பிரசினகளுக்காக போராடுகிறீர்களோ அப்போதுதான் இந்தியாவில் மக்களாட்சி நடக்கும்.
25-டிச-2012 12:56:59 IST
இவரு சொல்றத பார்த்தா பண்ணுங்கன்னு சொல்ற மாதிரி தோணுது. யோவ் நீ அரசியல் பண்ணுறதுக்கு இப்போ எங்க வீட்டு விவசாயிதான் கிடைச்சானா? . நிறைய பிரச்சினைகள் இப்போ இருக்கு தமிழ் நாட்டுல. அந்த பிரச்சினைகளுக்கு தீர்வ சொல்லு. உன் ஆட்சிலதான் ஒன்னும் கிழிக்க முடியல அப்புறம் இப்போம் மட்டும் நீ என்ன தீர்வ சொல்லி கிழிக்க போறா?
24-டிச-2012 08:58:33 IST