கட்சிக்காக தன்னையே அர்பணித்தவர்... என்பதற்காக தலைமை இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி இருக்கிறது .ஜெயலலிதா மொழியை விடுவாரா,பாவம் திருச்சி சிவா போன்றவர்கள்.
15-ஜூன்-2013 12:24:14 IST
போலீசாருக்கு இதன் மூலம் தங்களது பணியினை செய்ய ஒரு வாய்ப்பு உண்டாகியுள்ளது.தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன், கமாண்டோ போலீசார் எல்லாம் கேம்பில் தூங்கிகொண்டுதானே இருந்தார்கள்.இந்த பாதுகாப்பு பணிகள் 24X7 தொடர்ந்தால் தமிழகத்தில் குற்றங்களை முழுமையாக குறைக்கலாம்.
07-மே-2013 09:19:33 IST
அரசின் கொள்கை முடிவினால் வந்த கோளாறுதான் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கிய காரணம்.கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு முறையை அரசு ஏற்படுத்தியதன் மூலம் அரசே ஒருவகையில் ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.விளையாட்டு போட்டியில் முதல் 3 நபர்களுக்கு பரிசுகொடுப்பது அவர்களின் திறமையின் அடிப்படையில் ஆனால் கல்வி மற்றும் வேலைவைப்பில் ஜாதிவாரியாக இட ஒதுக்கீடு முறை.இவ்வாறு இட ஒதுக்கீட்டில் வேலை அல்லது பயன் அடைந்தவர்கள் தான் அவர்கள் தங்களது ஜாதி அல்லது ஜாதி தலைவர்களின் பின்னால் செல்கிறார்கள் எனவே இந்த இட ஒதுக்கீடு முறையை ஒழித்தால் எல்லாம் ஒழியும்.
06-மே-2013 09:50:40 IST
நீதிபதி ராமகிருஷ்ணன் அவர்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களை, கற்பழித்த காமக் கொடூரன் ஜெய்சங்கருக்கு, பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு சொல்லி இருக்கிறார்.இந்த தீர்ப்பு நீதிபதியின் மனசாட்சிபடி வழங்கிய தீர்ப்பா? தற்போது நாட்டில் உள்ள சூழ்நிலையில் இந்த பத்தாண்டு தண்டனை + 1,000 ரூபாய் அபராதம் போதுமானதா என்பதுதான் கேள்வி?
30-ஏப்-2013 09:21:00 IST
நடிகர்/நடிகைகளை கொண்டு ஹெலிகாப்டர் மூலம் செய்யும் தேர்தல் பிரசாரத்தை கைவிடுங்கள்.தேர்தல் காலங்களில் மட்டும் உபயோகப்படுத்தும் இந்த ஹெலிகாப்டர்களில் இயந்திர கோளாறு ஏற்படுவது நிச்சயம். ஹெலிகாப்டர் விபத்தில் தான் பிரபல நடிகை சவுந்தர்யாவை இழந்தோம்.மீண்டும் ஒரு இழப்பு வேண்டாமே
29-ஏப்-2013 09:53:31 IST
எதெர்க்கெடுத்தாலும், எந்த பிரச்சினை என்றாலும் உடனே அரசு சொத்துக்களுக்கு,குறிப்பாக அரசு பஸ்களுக்கு சேதம் விளைவிப்பதும், சூறையாடுவதும் அதிகளவில் நடைபெறுவதை கடுமையான சட்டங்களை கொண்டு தடுக்கவேண்டும்.சேதங்களை கணக்கிட்டு சம்பந்தப்பட்ட கட்சி அல்லது நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளரிடம் இருந்து வசூல் செய்யவேண்டும் அல்லது அவர்கள் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும்.
29-ஏப்-2013 09:44:20 IST