அவர் இருந்தார் என்பதற்கு குர்ஆனில் ஆதாரம் இருக்கு தோழா, ஆனால் அவரை உயிரோடு அல்லாஹ் அழைத்து பாதுகாத்து வருகின்றான், வரும் காலங்களில் தானே கடவுள் என்று மக்களை கொடுங்கோல் செய்து கொண்டிருப்பவனை , அவர் வந்து கொலை செய்து மக்களை 40 ஆண்டுகாலம் ஆட்சி புரிவார், அப்போது மக்கள் அனைவரும் ஏக இறைவனை மட்டுமே வணங்குவார்கள், அதன் பிறகு தான் அவர் உயிர் பிரிந்து பூமியில் பிறந்த உயிரினங்கள் அனைத்தும் பூமியிலேயே மரணிக்க வேண்டும் என்ற தத்துவத்தினடிப்படையில் அவரின் உடலும் மண்ணில் புதைக்கப்படும். அது உலகம் அழியப்போகும் முன் உள்ள அடையாளங்களில் ஒன்று.
19-ஏப்-2018 14:57:59 IST
குற்றங்கள்,கொலை செய்துவிட்டு அடுத்தவர்கள் மீது போட்டாலும், குண்டு செய்து அடுத்தவர்களை கொன்றால் எதற்கு இருக்கு நரகம். இங்குள்ளது போல் அங்கே வாய்மையே வெல்லும் பொய்ச்சாட்சிகள் என்றெல்லாம் எடுபடாது. எங்களின் முன் சென்ற இப்ராஹிம் நபி அவர்கள் எப்படி மீண்டும் இறந்தவர்களை உயிர்பிப்பாய் என்று இறைவனிடம் கேட்டபோது, ஏன் நம்பிக்கை இல்லையா என்று திருப்பி இறைவன் கேட்டதற்கு, என் மனம் சமாதானம் அடைவதற்காக தான் கேட்டேன் என்கிறார். பறவையை அறுத்து அதை ஐந்து கூறாக ஆக்கி நான்கு பக்கமும் உள்ள மலை மீது ஓவ்வொரு கூறா வைத்து விட்டு ஒரு கூரை தன்னோடு வைத்து கொண்டு கூப்பிடு அவைகள் அனைத்தும் வொன்றோடொன்று இணைந்து உன்னிடம்முள்ள கடைசி பகுதிக்காக வந்து அவைகள் இணைந்து மீண்டும் உயிர் பெரும் என்று இறைவன் கூற அது மீண்டும் முழு உருவம் பெற்றது. இது குர்ஆனில் உள்ள வசனம் மட்டுமல்ல, யூத, கிறிஸ்தவ வேதங்களிலும் வந்திருக்கலாம். ஏனென்றால் அவர் யூத, கிறிஸ்தவத்திற்கு முன் வாழ்ந்தவர். இறைவன் சர்வ வல்லமை படைத்தவன். நம்முடைய உள் உறுப்புகளின் இயக்கங்களை இயக்குபவன் அவனே. நன்மையின் எடை கூடினால் சுவர்க்கம், குறைந்தால் நரகம். அவன் நினைத்தால் மன்னிக்க கூடும், ஆனால் அந்த சர்வ வல்லமை படைத்த மனித கண்களால் யாரும் காண முடியாத,யாரும் பார்த்திராத (முகம்மது நபி இறைவனை அவனின் அழைப்பிற்கிணங்க காண சென்ற போது திரைகளுக்கு அப்பால் அலை போல் உருவத்தை கண்டதாகவும், அதேநேரத்தில் மறுமையில் நிலவை பார்ப்பதுபோல் அனைத்து கண்களிலாலும் பார்க்கலாம் என்றார்) இறைவனை மட்டுமே வணங்க வேண்டும், எதையும் படைக்காத தன்னையே பாதுகாத்து கொள்ளமுடியாதவைகளை அவனுக்கு இணையாக்குவதை மன்னிக்க மாட்டேன் என்று கூறுகிறான், இதுவும் அனைத்து வேதங்களிலும் கூறியுள்ளேன் என்று சொல்கின்றான், இது உங்கள் வேதங்களிலும் இந்த வாசகம் இருப்பதாக அறிகின்றேன், உருவம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி கேளுங்கள். நன்றி வல்வில் ஓரி
19-ஏப்-2018 14:38:24 IST
அந்த 72 கன்னிகள் கிடைக்கணும் என்றால் பல தியாகங்களை செய்யணும். பொய், பித்தலாட்டம் கொலை, கற்பழிப்பு, திருட்டு இவைகளை நினைத்தே பார்க்க கூடாது, நேர்மை, தூய்மையான எண்ணங்கள், கண்ணியமான உடை, கண்ணியமான பேச்சு, மேலும் நமது பார்வைகள் கூட கணக்கில் எடுத்து கொள்ளப்படும். இது அல்லாமல் முக்கியமாக படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனோடு யாரையும் கூட்டு வைக்க கூடாது.
18-ஏப்-2018 19:59:07 IST
மஹாராஷ்டிராவில் உங்கள் கட்சி ஆளை ரயில் பெட்டி ஒன்றில் பார்த்தவுடன் பெண் குழந்தைகள் இருக்கின்றது என்று ஒட்டுமொத்தமாக கோஷமிட்டு அவரை கீழே இறக்கிய நிகழ்வு வலை தளத்தில் வந்து கொண்டிருக்கே கருத்து செல்லும்முன் அதையெல்லாம் பார்த்தாச்சா?
18-ஏப்-2018 11:28:04 IST
அவருடன் வெளிநாட்டிற்கு சென்றவர்களின் விபரத்தை கூட தகவல் அறியும் சட்டத்தின் படி பெறமுடியவில்லை. அதன் பலனை பற்றிய தகவல் கண்டிப்பாக கிடைக்காது.
17-ஏப்-2018 13:13:04 IST
புதிய நோட்டுக்கள் தட்டுப்பாடான நேரத்தில் பிஜேபினரிடம் புதிய 2000 கட்டுகள் மிகுந்து காணப்பட்டது. அதில் சில நேரடியாகவே ரெகார்ட் இல்லாமல் இருந்ததும் அப்போது செய்திகளானது. இப்போது கர்நாடகாவில் தோல்வியிலிருந்து விடுபடுவதற்காக சென்றிருக்கலாம்மோ? என்ற சந்தேகம் வருகின்றது.
17-ஏப்-2018 12:49:44 IST
காஸ்மீரில் வெளி மாநில மக்கள் குடியேற அனுமதி இல்லை. அப்படியிருக்க மத்திய அரசை மீறி ரோஹிண்யா மக்கள் எப்படி குடியேற முடியும். பிரிவினைவாதிகள் மக்களை சிந்திக்க விடாமல் செய்யவே இந்த ரோஹிண்யா கதை.
17-ஏப்-2018 11:44:02 IST
சட்டம் ஏளனமாக்கப்பட்டு கொண்டிருக்கு. காஸ்மீர் பிரச்னையை திசை திருப்ப பயங்கரவாத மிருகங்கள் நாடெங்கிலும் தலைமை ஏற்று நடத்தி கொண்டிருப்பது போல் தெரிகின்றது.
17-ஏப்-2018 11:32:41 IST
ரவுடியிசங்கள் தலை தூக்கி கொண்டிருப்பதற்கு மேலும் இது வலுவூட்டுகின்றது. பெண்கள் பாதுகாப்பற்ற நிலையை கடந்த நான்காண்டுகளாக கண்டு வருகின்றோம். மனித உரிமை கமிஷன் அதிகாரி ஐ நாவில் அறிக்கை கொடுக்கும்போது காஸ்மீரில் பாதுகாப்பு படையினராலேயே 7 வயது முதல் 77 வயது வரையினரான 10000 பெண்களுக்கு மேல் கற்பழிக்கப்பட்டுள்ளதாக கூறும்போது தன்னை அறியாமல் கண்ணீர் விட்டு கதறிய நேரடி காட்சியை வலை தளத்தில் காணும்போது மிகவும் அவமானகரமான செயல் நம் நாட்டில் நடந்தேறுவது நம்மை வெட்கி தலை குனிய வைக்கின்றது. அறிக்கை வாசித்தவரே தாங்க முடியாமல் கதறுகின்றார் என்றால் அங்குள்ள பெண்களின் நிலை எவ்வாறு இருக்கும்.
16-ஏப்-2018 20:52:52 IST