கருணாநிதியின் அறிக்கையில் சுய தம்பட்டம் இல்லாமல் இருக்காது என்பதற்கு உதாரணம் - "எங்களின் முயற்சியால் நளினியின் தண்டனை குறைக்கப்பட்டது. தி.மு.க, காலத்தில்த்தான் தியாகு, கலியபெருமாள் தண்டனை குறைக்கப்பட்டது".
ஒருவேளை ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து மூவரின் தண்டனை குறைக்கப்பட்டாலும் - "மத்திய அரசின்மீது நாங்கள் ஏற்படுத்திய நெருக்குதலால்தான் வெற்றி கிடைத்தது" என்று சொல்லுவார். ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தோல்வி அடைந்தால், "ஜெயா அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால்தான் மூவரையும் காப்பாற்ற முடியாமல் போனது" என்று குற்றம் சொல்வார்.
13-ஏப்-2013 17:34:50 IST
கவனம் வாசகர்களே... இந்த அறிக்கையின் மூலம் இவர் சொல்ல வருவது என்னவென்றால், நரிப்பையூர், ராமநாதபுரம், மீஞ்சூர், ஒகேனக்கல், நெம்மேலி குடிநீர்த் திட்டங்களை கொண்டு வந்தது ஜெயலலிதா அல்ல, திமுகதான் என்பதுதான். அதாவது அதிமுக ஒன்றுமே செய்யவில்லை. எல்லாமே திமுக செய்ததுதான் என்று சொல்கிறார். "எல்லாப்புகழும் இறைவனுக்கே" என்று சொல்வார்கள். நம்ம ஆளு "எல்லாப்புகழும் எனக்கே" என்று அலைபவர். திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது. அதற்க்கான நிதி ஆதாரங்களை உருவாக்கி, திட்டத்தை நிறைவேற்றி, செயல்பாட்டுக்கு கொண்டுவந்தால் மட்டுமே அதற்க்கான புகழுக்கு உரிமை கொண்டாடலாம் என்று யாராவது இவருக்கு புரியவைப்பார்களா? வீராணம் ஒன்று போதுமே இவரது புகழ் பாட சமீபத்திய உதாரணம், மின் திட்டங்கள். பேச்சு பேச்சாத்தான் இருக்கோனும் என்று வடிவேலு சொல்வதுபோல, திட்டங்கள் திட்டங்களாகத்தான் இருக்கணும் என்று புது இலக்கணம் வகுத்தவர் பேசுகிறார்.
12-ஏப்-2013 11:10:05 IST
செத்து நாலு வருடம் கழித்துத்தான் பலருக்கு ஞானோதயம் பிறந்திருக்கிறது. தமிழர்கள் அவ்வளவு வேகமாக இருக்கிறார்கள். இன்னும் பத்து அல்லது இருபது வருடம் கழித்து இன்று உள்ள ஒருசில மாங்காய் அரசியல்வாதிகள் இறந்து ஒழிந்த பின்னர், வெளிநாடுகளில் கூவிக்கொண்டிருக்கும் எல்.டி.டி.இ. கும்பல் ரிடையர் ஆன பின்னர், உலகில் வேறு புதிய பிரச்சனைகள் தோன்றிய பின்னர், எல்லோருக்கும் ஈழம் மறந்துபோகும். நீங்கள் தண்டிக்க விரும்புபவர்களும் இறந்துபோவார்கள். அப்புறம் என்ன? சுபம்.
11-ஏப்-2013 15:59:48 IST
நீங்கதான் பக்கத்துல இருந்து பார்த்தீங்களா? சும்மா திமுக எதிர்ப்பு எண்ணங்களால் இவ்வாறு உளறுவதை குறைத்துக்கொள்ளுங்கள். வெயில் ஜாஸ்தி அடிக்கிறது பாருங்கள்.
11-ஏப்-2013 15:52:19 IST
உங்கள் வழிக்கே வருகிறேன். நீங்கள் சொல்வதுதான் சரி. அதைத்தான் இந்தியாவும் இன்று இன்கயுடனான உறவில் செயல்படுத்துகிறது. அதாவது... "எந்த ஒரு நாடும் சிறுபான்மையினரை அரவணைத்து போக வேண்டும் ... பெருன்பான்மையினருக்கு அந்த பொறுப்பும் கடமையும் உள்ளது..." என்பதுதான் அது. தெற்கு ஆசியாவில் மக்கள்தொகயிலும், அளவிலும் மிகப்பெரிய நாடான இந்தியா, இலங்கையுடனான உறவில் நிதானமாகவே செயல்படுகிறது. இலங்கையை அரவனைத்துதான் செல்கிறது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படுவதில்லை.
10-ஏப்-2013 11:10:22 IST
பலனை எதிர்பாராமல் செய்வதற்குப் பெயர்தான் சேவை. அரசாங்க வேலையே எதிர்பார்த்தும், இலவசங்களை எதிர்பார்த்தும் செயல்படுவதற்குப் பெயர் தகிடுதத்தம். இவர்கள் விளம்பரப் பிரியர்கள். தீய நோக்கம் கொண்டவர்கள். சமூகத்தினால் ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.
10-ஏப்-2013 10:59:06 IST
தீர்மானம் வெற்றி. மத்திய ஆட்சியிலிருந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு (சந்திரசேகர், வி.பி.சிங், தேவகவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் (1), மன்மோகன் சிங் (2)) திமுக ஒழிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு வெற்றி.
22-மார்-2013 19:52:05 IST
இப்படியே கத்திக்கொண்டிருந்தால் இதுதான் விளைவு. "நுணலும் தன வாயால் கெடும்" என்பது அவ்வையின் வாக்கு. "வாய்ச்சொல்லில் வீரரடி" என்பது பாரதியின் பொய்யா மொழி இதயத்தால் யோசிப்பதை விட்டுவிட்டு, மூளையை என்று பயன்படுத்துகிறார்களோ அன்றுதான் உலகம் தமிழர்களை திரும்பிப் பார்க்கும்.
22-மார்-2013 19:42:55 IST