அப்படி என்றால் கலியுக கண்ணகி எங்கள் தங்கத்தலைவி இல்லையா?? ஏன்?? கஞ்சித்தொட்டி ராணி, வால்மார்ட் ராணி, தமிழகத்தை இருண்ட கண்டமாக்கிய தங்கத்தலைவி, விலைவாசியை ஏற்றிய விடிவெள்ளி, பால்விலையை ஏற்றிய பாவை, பொய்வழக்கு புகழ் பொன்னியின் செல்வி அவருக்கு இந்த அக்கறை இல்லையா? எங்கோ சென்ற வைகோவை வழியில் போவதுபோல நாடகமாடி சந்தித்து நலம் விசாரித்த நயவஞ்சகம் யாருக்கு வரும்? அவருக்கு இலங்கையில் யார் செத்தால் என்ன? அவரின் மங்குனி அமைச்சர்களை பந்தாடவும், பதவியில் அமர்ந்து சுகம் காணவும் மட்டுமே தெரியும். அவரை ஏன் யாருமே இந்த பிரச்னையில் எதிர்பார்ப்பதில்லை என்று புரிகிறதா???
06-மார்-2013 14:31:52 IST
ஐயோ ...அப்படி என்றால் எங்கள் தங்கத்தலைவி, தமிழகத்தை ஒரு வழியாக்கி கொண்டிருக்கும் தன்னலமற்ற தலைவி 40 சீட்டுக்களை மட்டும் வைத்து கொண்டு இந்தியாவின் பிரதமராகிவிடலாம் என்று பகல் கனவு காணும் தலைவியின் நிலை? அடுத்த பிரதமராக வரவில்லை என்றால் அவர் என்ன செய்வார்? தமிழகத்தின் நிலை மிக மோசமாகிவிடாதா? வெறும் 15 ஆண்டுகளில் குஜராத்தை பல உண்மையான வளர்ச்சி திட்டங்களின் மூலம் முன்னணி மாநிலமாக மாற்றி இந்திய அளவில் புகழ் பெற்றுள்ள மோடியை விட, முன்னணி மாநிலமாக இருந்த தமிழகத்தை படுபாதாளத்தில் தள்ளி, இருண்ட கண்டமாக்கிய எங்கள் தங்கதலைவிதான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர். அப்போதுதான் இந்தியாவும் தமிழகம் போல சிதைந்து சின்னாபின்னமாகும். 200-300 சீட்டுக்களை பெற்றால் பிரதமராக வரும் வாய்ப்புள்ள மோடியை விட, வெறும் 40 சீட்டுக்களால் பிரதமராக என்னும் எங்கள் தலைவியை யாரும் எள்ளி நகையாடாதீர்கள்.
02-மார்-2013 13:37:18 IST
ஆஹா..அடடா....என்ன ஒரு இயல்பான நடிப்பு.. நீலி கண்ணீருக்கு பெயர் போனவராயிற்றே ஜெயா..அவரை நம்பி கூட்டணி அமைத்த எல்லா கட்சிகளையும் தேவை முடிந்தபின்னர் எட்டி உதைப்பது அவரின் குணமாயிற்றே... தேவை ஏற்பட்டால் நல்லவர்போல கரிசனம் காட்டி முதலில் காலை பிடிப்பது, பின்னர் மாரில் எட்டி உதைப்பது இதுதான் ஜெயாவுக்கு தெரிந்த அரசியல் பண்பாடு. ஜெயாவுக்கு அரசியல் வாழ்க்கையை பிச்சை போட்ட ஆனானப்பட்ட எம்ஜிஆரின் பெயர், புகழையே தேர்தல் வரும்போது மட்டும் பயன்படுத்தும் ஜெயாவுக்கு, வைகோ எம்மாத்திரம். கூட்டணியில் தக்க மரியாதை அளிப்பார் என்று நம்பியிருந்த வைகோவை ஒரு புழு போல மதிக்காமல் அவமானம் செய்தவர் ஜெயா. இப்போது எதற்காக இந்த நாடகம் தெரியுமா? 2 ஆண்டு கொடுங்கோல் ஆட்சியில் மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். எனவே பாராளுமன்ற தேர்தலில் பெரிய ஆப்பு உறுதி என்று ஜெயாவுக்கு இப்போதே அச்சம் வந்துவிட்டது. மேலும் கேப்டன் வேறு இப்போது எதிர்கட்சியாகி விட்டார். மறுபுறம் மக்கள் பிரச்னைகளுக்காக போராடும் திமுகவுக்கு பெருகும் மக்கள் ஆதரவு போன்ற காரணங்கள் ஜெயாவை மிகவும் அச்சமூட்டி உள்ளன என்பது உண்மை. ஆகவே இப்படி எல்லாம் நாடகம் தொடங்கி விட்டார். ஆனால் வைகோ ஏற்கனவே ஒருமுறை ஜெயாவின் குள்ளநரி குணத்தால் வஞ்சிக்கப்பட்டவர். மேலும் இந்த அராஜக ஆட்சியின் கொடுமைகள் அவருக்கும் தெரியும். எனவே இம்முறை வைகோ ஏமாறமாட்டார் என்று நம்பலாம்.
19-பிப்-2013 20:49:34 IST
எங்கே போனார் ஜெயா? என்னவோ தான் ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் முறித்து நட்டி விடுவேன், மின்வெட்டை சரி செய்து, மின் மிகை மாநிலமாக்குவேன் என்றெல்லாம் பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்தாரே. 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு எழவும் நடக்கவில்லை. வீண் செலவுகளை கூட குறைக்காத ஜெயா, சொல் புத்தியும் இல்லை சொந்த அக்கறையும் இல்லை என்ற லட்சணத்தில் தமிழகத்தை நாசம் செய்கிறார். திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின்திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இப்பவும் கிடப்பில் போட்டு வைத்துவிட்டு, நீலிக்கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றுகிறார். அத்திட்டங்களை தொடங்கினால், அவருக்குத்தானே நற்பெயர் கிடைக்கும். மேலும் மின்வெட்டு பிரச்சனை தீர்ந்து, இந்த கொடுங்கோல் ஆட்சியில் நசுங்கி நாசமாய் போயிருக்கும் மாநிலத்தின் தொழில்வளர்ச்சி மீண்டும் ஏற்றம் பெரும் அல்லவா? அந்த அக்கறை எல்லாம் ஜெயாவுக்கு இல்லை. கண்மூடித்தனமாக ஜால்ரா அடிக்கும் குருட்டு அல்லக்கைகள் இருக்கும் வரை ஜெயாவின் அராஜக ஆட்சிக்கு முடிவு இல்லை. பாராளுமன்ற தேர்தலில் மக்கள் இதை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் அதிமுக மண்ணை கவ்வ வேண்டும்.
16-பிப்-2013 14:04:32 IST
அப்படியே ஆகட்டும் அதே போல், 3 மாதங்களில் மின்வெட்டை முழுதும் நீக்குவேன் என்று பொய் வாக்கு அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்துவிட்டு இப்போது மின்வெட்டை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழகத்தை இருண்ட கண்டமாக்கிவிட்டு அதற்கு நடுவண் அரசை காரணம் காட்டி ஏமாற்றுவதற்கும், தொழில்நகரங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற நகரங்களை நாசம் செய்ததற்கும், அதன் விளைவாக பல்லாயிரம் கோடி இழப்பீட்டை உண்டு செய்ததற்கும் தேவை இன்றி அடிப்படை பொருட்களின் விலைவாசியை உயர்த்தி அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடித்ததற்கும், விவசாயிகள் தற்கொலையை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்ததற்கும், 8 கோடி வெட்டி செலவு செய்து சமாதியில் கட்சி சின்னத்தை எழுப்பியதர்க்கும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து போனதற்கும், புனிதமான அண்ணா நினைவு நூலகத்தை கல்யாணத்திற்கு விட்டு அசிங்கப்படுதியதற்கும் தமிழகத்தை தொழில்துறையில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக மாற்றியதற்கும், ஆட்சியின் கொடுமைகளை உரிமையுடன் கேள்வி கேட்கும் எதிர்கட்சிகள் மீது பொய் / அவதூறு வழக்கு போட்டு மக்களின் வரிப்பணத்தை வீண் செலவு செய்ததற்கும், நாறிப்போய் நாற்றமெடுக்கும் சென்னை மாநகராட்சியை சரி செய்யாமல் விட்டதற்கும், என்று 1000 கொடுமைகளுக்கு உங்களை பதவி நீக்கம் மட்டுமல்ல, சிறையில் தள்ளவேண்டுமே...அதற்கு என்ன சொல்வீர்கள்? தான் என்ன செய்தாலும் தவறில்லை, மற்றவர்களை குற்றம் சொல்லும் முன்னர் முதலில் தன யோக்கியதை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
25-ஜன-2013 19:54:15 IST
ஆஹா...கேட்பதற்கு நன்றாக உள்ளது. இதே போல இங்கே தமிழகத்தை சீரழிக்கும் கொடநாட்டு கொடியசக்திக்கும் , மன்னார்குடி மாபியா தலைவிக்கும் பெங்களூர் வழக்கில் தக்க தண்டனை கிடைத்து சிறை செல்லும் காலம் வராதா? வாய்தா வாங்கியே தப்பித்து ஓடி ஒளியும் பாட்டி, சிறையில் கழி திங்கும் காலம் தமிழகத்தின் பொற்காலம்.
17-ஜன-2013 10:56:58 IST
கேட்கவே எவ்வளவு ஆனந்தமாக உள்ளது. உண்மையில் நடந்தால்....தமிழக மக்கள் இப்போது ஆவலுடன் எதிர்பார்ப்பதும் அதுதான். பெங்களூர் வழக்கில் நல்ல தீர்ப்பு விரைவில் வந்து, கொடியசக்தியும், மன்னார்குடி மாபியா தலைவியும் சிறையில் சேர்ந்து களி திங்கும் காலம் வரவேண்டும். பதவி என்ன, என்ன பொறுப்பு என்று எதுவும் தெரியாத 32 அல்லக்கை அமைச்சர்களில் யாராவது ஒருவர் முதல்வராவார். ஏற்கனவே அனைத்து துறைகளிலும் சீரழிந்து சட்டம் ஒழுங்கு என்பதே இல்லாமல் நிலைகுலைந்து போய் இருக்கும் தமிழகம் மேலும் சீரழியும். அப்போது நடுவண் அரசு 356 மூலம் ஆட்சியை கலைக்க வேண்டும். 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக தோற்று, தமிழகத்திலும் கொடியசக்தியின் பேயாட்சி ஒழியும். காசுக்கு கூவும் அல்லக்கைகளும் அடங்கும்.
11-ஜன-2013 15:08:36 IST
ஒரு பழ மொழி எல்லோரும் அறிந்ததே. அப்படித்தான் இருக்கும் கொடியசக்தியின் குணம். சட்ட சபையில் மற்றவர்களை பேச விடாமல் , தன்னை துதி பாடும் கேவலமானவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்த கஞ்சிதொட்டி ராணிக்கு இப்போது அந்த அவமானம், வலி எல்லாம் தெரிந்திருக்கும். கொடுங்கோல் ஆட்சி புரியும் ஜெயாவை அந்த மாநாட்டில் அனுமதித்திருக்கவே கூடாது. இங்கே விவசாயிகள் தற்கொலை வரை பல பிரச்னைகளை கண்டுகொள்ளாத கொடிய உள்ளம் படைத்த வால்மார்ட் ராணிக்கு இது போதாது. இந்த வெளிநடப்பு ஒரு நயவஞ்சக நாடகம் என்பது தமிழக மக்களுக்கும் புரியும். ஆகவே இதில் தமிழகத்திற்கு எந்த அவமானமும் இல்லை. வாய்தா ராணியின் இப்படிப்பட்ட ஆணவ போக்கால் தான் தமிழகத்திற்கு நடுவண் அரசால் முறையாக கிடைக்க வேண்டிய பலன்கள் கூட கிடைப்பதில்லை. பொதுவாகவே நடுவண் அரசை எப்போதும் முறைத்து கொள்ளும், கொடியசக்திக்கு இது ஒன்றும் புதிதல்ல. 10 நிமிடங்கள் இல்லை, 5 நிமிடங்கள் வழங்கியிருந்தாலே ஜெயா சொல்லப்போவதெல்லாம் ஒன்று தமிழகத்தில் நடக்கும் எல்லா பிரச்னைகளுக்கும் நடுவண் அரசை குறை கூறி இருப்பார். அல்லது ஒன்றுமே செய்யாமல் என்னவோ எல்லாம் செய்து விட்டது போன்று தன சுய புராணம் பாடியிருப்பார். தன் ஆட்சியில் நடக்கும் கோமாளிதனங்களை மறைத்து கடும் கோபத்தில் இருக்கும் தமிழக மக்களை திசை திருப்ப வேண்டி கொடியசக்தி ஆடும் நாடகங்கள் பல. உதாரணமாக அவதூறு மற்றும் பொய் வழக்குகள், சமாதி புனரமைப்பு...இப்போது இந்த நாடகமும் ஒன்று. அவ்வளவு ரோஷம் உள்ள ஜெயா ஏன் தன் கட்சி உறுப்பினர்களை பாராளுமன்றதிற்கு அனுப்புகிறார்? அவர்களையும் பதவி விலக சொல்ல முடியுமா? இந்த விவேகமற்ற வீரம் ஒரு நயவஞ்சக நாடகம்.
27-டிச-2012 13:41:56 IST
ஹிஹிஹிஹி...மன்னார்குடி மாபியா தலைவிக்கு முற்றி விட்டதோ? கொஞ்சம் விட்டால் பிரணாப் முகர்ஜி தன்னை தூண்டி விட்டார், நோண்டி விட்டார் என்று கூட புலம்புவார். மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடித்து விட்டு 15 ஆண்டுகளாக வாய்தா மேல் வாய்தா வாங்கி ,நீதி மன்ற படிஎறும்போது தான் உனக்கு இப்படி எல்லாம் சொல்ல தோன்றுகிறதோ? பெண் இனத்தின் அசிங்கங்களாக மாறி விட்ட கொடிய சக்தியும், மாபியா தலைவியும் நீதிமன்றத்தால் தக்க தண்டனை பெற்று சிறையில் களி திங்கும் காலமே தமிழகத்தை பிடித்த சனி விலகும் பொற்காலம். நாடே காறித்துப்பிய கோமாளியின் கல்யாணத்தை இருவரும் சேர்ந்து நடத்தி அதற்கு வால்டரை வாட்ச்மேன் வேலை பார்க்க வைத்த அசிங்கத்தை எல்லோரும் பார்த்தனரே. அப்புறம் என்ன சசிக்கு பசப்பு நாடகம்? ஒரு வேளை களி தின்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதால் வந்த பயமோ? கல்யாணத்தை பெண் வீட்டார் செலவு செய்து நடத்தினர் என்றால், அது சிவாஜியின் குடும்பத்தை அவமானம் செய்வதல்லவா? பாவம் அந்த குடும்பம். கலைஞர் அவர்களோடு நல்லுறவு வைத்துள்ள அவர்கள் கொடியசக்தியிடம் சிக்கி மாபியா குடும்பத்திடம் சம்பந்தம் வைத்து இப்போது இந்த அசிங்கத்திற்கும் ஆளாகின்றனர். வால்மார்ட் ராணி பெங்களூரு நீதிமன்றம் சென்றாலும், தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றாலும், அல்லது எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவரோடு செல்லும் மாபியா தலைவி எப்போது கலைஞரை சந்தித்தார் என்று யாரும் எண்ணிப்பார்க்க மாட்டார்களா? புனிதமாக இருந்த தமிழக அரசியலை கூவமாக்கிய கொடியசக்திக்கு உடன் பிறவா தோழியாக இருந்த, இருக்கும் மாபியா தலைவி இப்படி எல்லாம் சொல்லவேண்டும் என்று யார் மிரட்டி இருப்பார்கள்? அதிமுகவின் கொள்கை..இல்லை கொள்ளை பரப்பு செயலாளராக இருக்கும் சசிக்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை..பாவம்..இதெல்லாம் ஊரை வளைத்து போடும்போதும், நகைக்கடையில் கோடிக்கணக்கில் நகையை இருவரும் அபேஸ் செய்து விட்டு பின்னர் அதற்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியபோதும் புத்தியில் உரைத்திருக்க வேண்டும். பொய் வழக்கு போட்டு மிரட்டப்பார்க்கும் கொடியசக்தியின் தந்திரங்கள் எல்லாம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆகிவிட்டதால், இப்போது மன்னார்குடி மாபியா தலைவியை கொடியசக்திதான் உண்மையில் தூண்டி விட்டிருப்பார். கொஞ்சம் பொறுத்தால், கொடியசக்திக்கும் ஒரு தீர்ப்பு வந்து இருவருக்கும் அருகருகில் அறைகள் கிடைக்கும்... எப்போதும் உடன் இருக்கும் தோழி களி திங்கும்போதும் உடன் இருப்பார். தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும். அப்போது தமிழகம் மீண்டும் தலை நிமிர்ந்து இருக்கும். அதுவும் வெளிச்சமாக...
26-டிச-2012 12:23:04 IST