சில கோடி பேர் முன்று வேளை சாப்பிட வழியில்லை இந்த திருநாட்டில். ஆனால் மத்திய அரசின் முன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நடைபெற்ற விழாவில் வந்தவர்களுக்கு தலா ரூபாய் 7500/- செலவில் விருந்து பரிமாறப்பட்டது. விருந்து நடத்தியது, நம்ம பொருளாதார புலிகள். கலந்து கொண்டவர்களில் சிலர் நமது தமிழகத்தை, தமிழ் மொழியை, தமிழ் பண்பாட்டை காக்க பிறந்தவர்களும் உண்டு. அவர்கள் அங்கே விருந்து சாப்பிட்டு வந்து விட்டு இங்கே வீர வசனம் பேசுகிறார்கள். இவர்கள் யார் என்று உங்களுகே தெரியும்.
இந்த ஏழை தேசத்தின் வரிப்பணம் இவர்களுக்கு நடனம் பார்ப்பதற்கும், விருந்து சாப்பிடவும் வேண்டும். பணம் இல்லையா, கவலை வேண்டாம், ஏற்றுங்கள் வரியை. அதை கொடுத்து உதவதற்கு இந்த ஏழை தேசம் தயாராக உள்ளது. ஏன் என்றால் வேற வழி இல்லை.
05-பிப்-2013 12:23:43 IST
உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருப்பேன் என்றால் உங்களையே நீங்கள் கண்ணாடியில் பார்த்து கொண்டு இருக்குறீர்களா?.. அதனால் உங்களை நீங்கள் மன்னித்து கொள்ள மாட்டீர்கள்..
28-ஜன-2013 03:44:26 IST
எல்லாம் உங்களை பார்த்து தான்.. உங்களுக்கு தான் என்ன வேலைன்னு தெரியாமே வேலை செய்யாமே இருக்குறிங்க. அது போல தான் எல்லாம்.. இந்த நாலு வருட ஆட்சியில் இப்போது தான் எதோ அறிக்கை விட்ட மாதிரி தெரிகிறது.
28-ஜன-2013 03:39:10 IST
மீண்டும் ஒருமுறை பெங்களூரில் திருவள்ளுவர் சிலை மற்றும் சென்னையில் சர்வஜன சிலை திறந்தால் தண்ணீர் வந்து விட போகுது. இது நம்ம தானைத் தலைவர் கண்டு பிடித்த வழி. ஆனால் பாவம், தண்ணீர் தான் வரவில்லை. தடி எடுத்தால் தான் குரங்கு குட்டிகரணம் போடும். பிரச்னை என்றால் தீர்க்க தான் உச்ச நிதிமன்றம். அங்கே வழக்கு போடுவதில் எந்த தவறும் இல்லை. அம்மா அவர்கள் சட்டையை எடுத்து விட்டார்கள். கர்நாடக குரங்கு குட்டிகரணம் கண்டிப்பாக போடும்.
22-ஜன-2013 08:01:10 IST
ஒருவர் தன் பெயரையே எல்லா இடத்திற்கும், திட்டத்திற்கும் வைத்து கொண்டார். ஆனால் நமது முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தன் பெயரை எங்கும் வைக்க விரும்ப வில்லை. மாறாக தமிழ் நாட்டுக்கு உழைத்தவர்கள் பெயரையே வைக்க விரும்புகிறார்..
19-ஜன-2013 10:20:52 IST
கலைஞர் அவர்களே, முதலில் உங்கள் அறிக்கையை நீங்கலே படித்து பாருங்கள். எதாவது உங்களுக்கே புரியற மாதிரி இருந்ததுனா அதை வெளிவிடுங்கள். உங்களுக்கு புண்ணியமா போகும்.
19-ஜன-2013 10:14:55 IST
கலைஞர் அவர்களின் அறிவுரையை ஏற்று , காங்கிரஸ் அரசு உடனடியாக டீஸல் விலையை 50 காசுகள் குறைத்து விட்டது. கேட்க நன்றாக இருக்கும் நடந்தால். காங்கிரஸ் தலைவியின் கார் ஓட்டுனர் சொன்னால் கூட குறைப்பார்கள் ஆனால் இவர் சொல்லி குறைக்க மாட்டார்கள்.
18-ஜன-2013 14:06:16 IST
இங்கே எதுவும் இலவசமாக தரப்படுவதில்லை. குறைந்த செலவில் உணவு உண்ணலாம் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். மக்களை சோம்பேறி ஆக்கிவிடும், அவர்கள் வேலை செய்ய மாட்டார்கள் என்று இந்த திட்டத்தை குறை கூறுபவர்களே, உங்கள் கையில் காசு இருக்கிறது என்று இப்படி பொதுநலவாதி போல் நடித்து , இந்த தேசத்தை வளர்க்க போவதாக பந்தாவாக பேசுகிறீர். குறைந்த கட்டணத்தில் கொடுக்க கூடாது என்பவர்கள், ஏன் பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும், மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கேட்கிறிர்கள். வாழ்வு சுகமாக இருப்பதற்கு இவைகள் இலவசமா கொடுத்தா உங்களுக்கு இனிக்கும் , ஆனால் வாழ்க்கை வாழ்வதற்கே சாப்பாடு குறைந்த கட்டணத்தில் கொடுத்தால் உங்களுக்கு கசக்கும். ஏன் என்றால் அந்த கஷ்டம் உங்களுக்கு இல்லையே. அது மற்றவனுக்கு தானே. அவன் அவன் கஷ்டங்கள், அவன் அவனுக்குதான் தெரியும். எனக்கு நன்றாக தெரியும் அந்த பசியின் வலி. மகன், மகள் பசி அறிந்து அதை கஷ்டப்பட்டு போக்குபவர் நமது தாய். அந்த தாய் தான், இப்பொது இந்த தமிழ் தேசத்தின் முதல்வராய் இருக்கிறார், என்என்றும் இருப்பார்.. :)
14-ஜன-2013 06:14:06 IST