பணக்காரப்பையன் உன்னை உண்மையில் உன்னை விரும்பவில்லை சிநேகம் கொள்ளவில்லை.கருவேப்பிலை போல சுவைத்து விட்டு தூக்கிப்போட்டால் கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற தைரியம். காதல் என்பது மத மாற்றத்தால் வருவதல்ல.உன்னுடைய இளம்வயது அவனுக்கு தூண்டில் போட சொல்லுகிறது. அவனுடன் உள்ள பழக்கத்தை மற. சகோதரியின் ..ஆலோசனை இஸ்திரிப்பெட்டி.சரிதான்.சுய தொழில்.உழைப்பு முன்னேற்றத்திற்கு வழி காண்பிக்கும்.அவசரப்படவேண்டாம்.நல்லவன் வருவான்.ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை வாடியே இருக்கலாம்.தவறு இல்லை.. துயரத்தின் அடுத்த படி இன்பம்தான்.நல்ல துணையும் வாழ்க்கையும் அமைய இறையருள் துணை புரியும்.
19-மே-2013 07:43:21 IST
கேடு கெட்ட அரசியல்வாதிகள் அனைவரையும் மொத்தமாக இடித்துவிட்டால் இது போன்ற அநியாய அக்கிரமங்கள் அடியோடு ஒழிந்துவிடுமே முடியமா நம்மால்?
18-மே-2013 08:27:41 IST
பெற்றோர்கள் மேல் தப்பே இல்லை.இன்றைய நகரங்களில் இளம் பருவத்தினர் பழக்க வழக்கங்கள் சமூக சீரழிவு இவைதான் காரணம்.அவர்களின் பேச்சில் கொஞ்சம் காட்டம் கூடிஉள்ளது.எல்லா பிள்ளைகளும் பாம்பே ஆட்டோகாரர் மகள் ஆடிட்டர் பிரேமா அல்லவே.தாயும் தந்தையும் அலுவலகத்திலோ வியாபாரத்திலோ பிழைப்பை நடத்தி கொண்டிருக்கும்பொழுது பிள்ளைகளை கவனிக்க நேரம் பற்றவில்லை.அவர்கள் பின்னாலேயே போய்க்கொண்டிருக்க முடியாது.நாட்டு நடப்பு அவ்வாறு சொல்ல தூண்டுகிறது.மகளாகிய நீ நான் ஒரு புடம் போட்ட பத்தரை மாற்று தங்கம் என்று நிரூபித்தால் அவர்கள் நடந்து கொண்டதற்கு மனம் வருந்துவார்கள்.அது உன் கையில்தான்.நல்ல அறிவுரை.மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி எவன் தந்தை என்நோற்றான் என்பதற்கு ஏற்ப நீ நடக்க இறையருள் துணை புரியட்டும்
12-மே-2013 15:40:36 IST
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் எல்லாம் உதிரிக்கட்சிகள்.எனவே காங்கிரஸ் எனும் மிகபெரிய ஊழல் இயக்கம் என்று அழியுமோ அல்லது தன்னை திருத்திக்கொள்ளுமோ நம் ஊழ்வினை.
09-மே-2013 08:17:37 IST
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.இதுதான் இன்றைய இந்திய அரசியல் கட்சிகளின் நிலைமை. கார்ல் மார்க்சா அவர் தேவையில்லை மண்ணாங்கட்டி.கட்சி கொள்கையா முக்கியம்எம் எல் ஏ பதவிதான் உயிர்.
07-மே-2013 08:51:17 IST