திரு.நடராஜ் அய்யர் அவர்களே, சிங்கப்பூரில் மட்டுமல்ல. எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் கக்கூஸ் முதற்கொண்டு எல்லா இடங்களிலும் வருவது நல்ல சுத்தமான குடிதண்ணீரே. மக்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவையான தண்ணீரை கூட, அறுபத்தைந்து வருட சுதந்திர இந்தியாவில்,ஒரு அரசால் வழங்க முடியவில்லை என்றால் அந்த அரசு இருப்பதை விட இல்லாமல் இருப்பது மேல்.
18-மே-2013 23:11:06 IST
திரு.நவாஸ் அகமது அவர்களே, நேற்றே டி.வி.செய்தியிலும், இந்த கிரிக்கெட் சூதாட்ட பின்னணியில் தாவூத் இப்ராஹிம் இருப்பதாக சொன்னார்களே...
17-மே-2013 06:48:01 IST
இந்தியாவில் பிறந்த இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு மட்டும் இங்கு ரேசன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ்,படிப்பு, வேலைவாய்ப்பு போன்றவைகளை ( அவர்கள் கேட்டால் ) வழங்கலாம்.
15-மே-2013 19:57:08 IST
தமிழ்த்தாய சிலை எப்படியும் செல்வி ஜெயலலிதா உருவத்தை போல தான் இருக்க போகிறது. அது தான் தமிழ்த்தாய் என்று சொல்லப்போகிறார்கள். ஏனென்றால் ஒருவரும் தமிழ்த்தாயை நேரில பார்த்தது இல்லையே. சரி... ஜெயலலிதா போல இருக்கப்போகும் சிலையை சுற்றிலும் அதிமுக எம் எல் ஏ க்கள் எல்லோரும் நின்றுகொண்டு கும்பிட்டுக்கொண்டிருப்பது போலவும் ஏகப்பட்ட சிலைகள் அமைக்க வேண்டுமே. இதற்கெல்லாம் சேர்த்துதான் ரூ.100 கோடி செலவா ???
15-மே-2013 08:56:48 IST
குழந்தை பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று, நான் வணங்கும் இறைவனிடம் வேண்டுகிறேன். மேலும் வெறும் 12 அடி ஆழமே உள்ள குழியி்ல் மாட்டிக்கொண்ட ஒரு, 7 வயது குழந்தையை மேலே எடுக்க நம்மிடம் எந்த வசதியும் இல்லையே எனும்போது மிகுந்த வருத்தமாகவும் வேதனையாகவும் ஆத்திரமாகவும் இருக்கிறது.
27-ஏப்-2013 20:50:32 IST
நண்பர் செந்தூரான் அவர்களே, இந்த அம்மா சென்னைக்கு மட்டும் தான் முதல் அமைச்சர் என்பது போல தான் எல்லா விஷயங்களிலும் நடந்து கொள்கிறார்கள். ஆனால் தேர்தலில் போட்டி இட மட்டும் தென் மாவட்டத்துக்கு தவறாமல் வந்து விடுவார். அப்போது மட்டும் அவர் தென் மாநிலத்தை சேர்ந்தவர் போல் காட்டிக்கொள்வார். ஏனென்றால் சென்னையில் போட்டியிட்டு அவரால் ஜெயிக்க முடியாது. தென் மாநிலங்களில்தான் இளித்தவாயர்கள் அதிகம்.
26-ஏப்-2013 12:34:15 IST
திரு.நவமயம் மற்றும் திரு.ஆர்.சுப்ரமணியன் ஆகியோருக்கு எனது நன்றிகள், காங்கிரசின் வரலாறை விளக்கியதற்கு. நான் கூட இதுவரை, காந்தி, காங்கிரசை கலைக்க சொன்னார் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது அதன் உண்மை நிலவரத்தை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். மீண்டும் நன்றி.
03-ஏப்-2013 05:07:48 IST
சிபிஐ மட்டுமல்ல. நாட்டில் உள்ள அனைத்து வகை போலீஸ் துறையும் ஆளும் கட்சிக்கு ( மத்தியில் மற்றும் மாநிலத்தில் ) சாதகமாகவே செயல்படுகிறது என்பது வெளிப்படை. இதே சிபிஐ, பாஜக ஆட்சியில் இருந்தால், அவர்கள் விருப்பத்திற்கு இணங்க செயல்படும்.
27-மார்-2013 22:50:59 IST
திரு.ஸ்ரீநாத் அவர்களே, நானும் வெப்சைட்டில் போய் ஹம்மர் காரின் விலை பார்த்தேன். ஹம்மர் ( ஹெச் 3 மாடல் ) காரின் விலை டெல்லியில் ரூ.40 லட்சம் மட்டுமே.
26-மார்-2013 12:53:09 IST
எஸ்.தினகரன்,தஞ்சாவூர் அவர்களே, என்னவோ காங்கிரஸ் அரசாங்கம் தான் ஒன்றும் கிழிக்க போவதில்லை என்னும் பா.ஜ.க வந்தால் பெரிதாக கிழித்து விடப்போவதாகவும் சொல்கிறீர்களே, பா.ஜ.க. அரசு இருந்த போதுதான் கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் நுழைந்தது என்பதும், தீவிரவாதிகள் பாராளுமன்றம் வரை எளிதில் வந்து தாக்குதல் நடத்த முடிந்தது என்பதை எல்லோரும் மறந்து விட்டார்கள் என்று நினைத்தீர்களோ ??
23-பிப்-2013 22:25:00 IST