"அதனால் என்ன? மிஞ்சி மிஞ்சிப் போனால் விளையாட தடை விதிப்பார்கள். அவ்வளவுதானே. விளையாடாவிட்டால் போகிறது. கொஞ்ச நாள் கழித்து கமெண்ட்ரி செய்து சம்பாரித்துக் கொள்ளலாம். சொத்தையா பறிமுதல் செய்துவிடப்போகிறார்கள் கவலைப்படுவதற்கு? பணம் கண்ணே பணம். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எந்த எல்லைக்கும் போகலாம். நியாயம், தர்மம் எல்லாம் ஓல்டு பேஷன். பணம் ஹா ஹா ஹா ஹா பணம் பணம்." ச்சீ வெட்கக்கேடான மனிதர்கள்.
17-மே-2013 15:13:26 IST
சிலை வைத்தால் தமிழ் வளருமா? தமிழ்வழிப் பாடத்திட்டப் பள்ளிகளைக் கவனிக்கலாம், தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தை நல்ல பாடத்திட்டங்கள் மூலம் வலுப்படுத்தலாம், சிறந்த தமிழ் அறிஞர்களை அழைத்து, கௌரவப்படுத்தி, மாநிலமெங்கும் சென்று தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகளை பேசச் செய்யலாம், தொலைக்காட்சிகளில் அவர்களின் தமிழ் உரைகளை ஒளிபரப்பலாம், நல்ல புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்யலாம், தமிழ் கற்பதும், தமிழில் பேசுவதும் பெருமை என்று இளைய சமுதாயத்தை உணரச் செய்தாலே தமிழ் சிறக்கும். எல்லாவற்றையும் விட எளிய வழி, அரசுப்பள்ளிகளை கவனித்தாலே போதும். நல்ல ஆசிரியர்களை நியமித்து, பாடத்திட்டத்தை சீரமைத்து சிறந்த முறையில் முதல்வரின் நேரடி மேற்பார்வையில் வைத்தால், தமிழ் மிக நன்றாக வளரும்.
14-மே-2013 15:44:13 IST
மிகவும் சரியான கருத்து. பெரும்பாலான முதல் தரத்தில் இருக்கும் பள்ளிகள் இப்படித்தான் செய்கின்றன. நாம் கூறியதுகூறும் கிளிப்பிள்ளைகளைத்தான் தயாரித்துக்கொண்டு வருகிறோம்.
10-மே-2013 14:46:37 IST
அதுவும் சரிதான் விழுப்புரம் ஜீவிதன் சார். இருந்தாலும் மரியா ஏதாவது சொல்லி, ஒரு பத்துபேர் அதுக்கு பதில் சொல்லி....ப்ச்.....அது ஒரு தனி feeling.
26-ஏப்-2013 18:08:09 IST