சரியாக சொன்னீர்கள். பெண்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். இங்கு கருத்து எழுதொவோரை பார்த்தால் வேதனையாக இருக்கிறது. ஒழுங்காக உடை அணிந்து, தனியாக பகலிலேயே போனாலும் பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பில்லை.
25-டிச-2012 16:07:00 IST
எதற்கு இந்த வீண் வேலை. குற்றம் செய்தவர்கள் ஒப்புகொண்டார்கள், , குற்றம் செய்ததும் நிரூபனமாயிற்று ..எதற்கு விசாரணை கமிஷன் .. தண்டனையை தள்ளி போடவா? குற்றவாளிகளை தப்பிக்க விடவா?
23-டிச-2012 15:10:15 IST
2001 -2002 ஆண்டுகளில் கடுமையான குடிநீர் தட்டுபாடு இருந்தது. சென்னையில் நிலத்தடி நீர் அடியோடு வற்றி போய் இருந்தது. எங்கு பார்த்தாலும் ஆழ் துளை போடும் வண்டிகள் சென்னையில் சப்தம் போட்டு கொண்டிருந்தன. ஜெயா ஆட்சிக்கும் வந்தவுடன் தொலை நோக்கு பார்வையில் மழை நீர் சேமிப்பை கட்டாயமாக்கினார். கொண்டு வரவே முடியாது என்று திமுக சொன்ன வீராணம் தண்ணீரையும் கொண்டு வந்தார். அன்றும் இது போல்தான் எல்லாரும் கிண்டலடித்தனர். ஆனால் இன்று தண்ணீர் பிரச்சினை குறைந்திருபதர்க்கு காரணம் ஜெயாதான். இதை மறக்க கூடாது. நிலத்தடி நீர் அளவு இன்று உயர்ந்து நிற்கிறது. இதை சில நாட்கள் முன்னர் ஸ்டார் தொலைகாட்சியில் காண்பித்து, மற்ற மாநிலங்களும் பின் பற்ற வேண்டும் என்றனர். அது போலத்தான் தொலைநோக்கோடு சோலார் எனெர்ஜிஐ செயல் படுத்த நினைக்கிறார். கண்மூடித்தனமாக ஜயாவை ஆதரிபதர்காக இதை சொல்லவில்லை. இன்று சோலார் எனெர்ஜி காலத்தின் கட்டாயம். எதிர்காலத்தில் அதுவே நிரந்தரம். இதை உணர்ந்து கொண்டு, அட்லீஸ்ட் செயல் படுத்தும் வசதி உள்ளவர்கள் செயல் படுத்தினால், அரசின் மின்சாரத்திடம் இருந்து விடுதலை பெற்று தன்னிறைவு கொள்ளலாம்.
21-அக்-2012 12:10:28 IST
தாமதமானாலும் அருமையான திட்டம். சென்னையில் எனக்கு தெரிந்து உறவினர் சிலர் தங்கள் வீடுகளில் ஏற்கனவே நடைமுறை படுத்தி இருகின்றனர். புதிதாக வீடு கட்டுபவர்கள் சோலார் சிஸ்டம் அமைப்பது மிகவும் நல்லது. மூன்று படுக்கை அறை கொண்ட வீடு ஒன்றிற்கு ஒன்றரை லட்சம் செலவாகிறது. இதில் முப்பது சதவீதம் மானியம் மாநில அரசிடம் இருந்து கிடைகிறது. சுமார் ஐந்து வருடங்களில் செலவிற்கேற்ற கேற்ற மின்சாரம் ஈடாக கிடைக்கும். பின்பு முற்றிலும் இலவசம் என்று வைத்து கொள்ளலாம். சோலார் செல்கள் இருபத்தை ந்து வருடங்கள் வேலை செயுமாம். பாட்டரிகளை மட்டும் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டுமாம். இந்த தொடர் மழையில் கூட சோலார் சிஸ்டம் நன்றாக வேலை செய்வதாக விசாரித்த பொது சந்தோஷமாக கூறினர். பகலில் நேரடியாகவும், இரவில் சார்ஜெர் மூலமாகவும் தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கிறதாம். அவர்களை பார்த்து அக்கம் பக்கத்தில் மற்றவர்களும் வீடு மாடியில் சோலார் சிஸ்டம் அமைக்க இருக்கின்றனர்.
21-அக்-2012 11:22:24 IST
அது சரி, ஒட்டு மொத்த நாட்டை காங்கிரஸ் பல வருடங்களாக ஆளுகிறது. ஆனால் நாட்டின் மற்ற பகுதிகளில் ஏனிந்த முன்னேற்றம் இல்லை ? முக்கியமாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இல்லையே? அதற்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் தான் காரணமா? சோனியா இதற்கு விளக்கம் தருவாரா? மக்கள் முட்டாள்கள் என்று சோனியாவும் காங்கிரஸ்ம நினைகின்றனர்.
03-அக்-2012 15:53:16 IST