வெள்ளப்பெருக்கால் உயிர் உடைமை இழந்த சகோதர சகோதரிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
இயற்கையின் கொடை மழை நீர். குறைந்தாலும் உயிர் போகும், அளவுக்கு மீறினாலும் உயிர் போகும்.
அதிகம் நீர் வளம் உள்ள ஆறுகளில் அணைகள் கட்டி தண்ணீர் இன்றி தவிக்கும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.
நதி நீர் இணைப்பு திட்டம் வந்தால் கிடைக்கும் நன்மைகள்.
1) வறட்சியும் வெள்ளமும் தடுக்கப் படலம்.
2) நீர் வழிப் போக்குவரத்து அதிகரிக்கும். இதனால் அரசாங்கம், தனியார் துறைகளில் வேலை வாய்ப்பும் பெருகும்.
3) விவசாயிகள் தற்கொலை தடுக்கப் படும். அவர்கள் பொருளாதாரம் மேம்படும்.
அரசியல் வாதிகளே , என்னனவோ சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் பேசுறீங்க. ஒரு தடவை பதவிக்காக பேசுறதை விட்டு மக்களுக்காக பேசுங்களேன். விவசாயத்தை முதுகெலும்பாக கொண்ட நம் பாரதத் திருநாட்டை வாழ விடுங்கள்.
17-ஜூன்-2013 19:41:06 IST
"ஷாருக்கானோ, கமலோ அல்ல. வடிவேலு ரேஞ்சுக்கு கூட, தேற மாட்டான். " சிவப்பு உசத்தி கருப்பு மட்டம் என்ற எண்ணம் இந்த பெண்ணுக்கே உள்ளது தெரிகிறது. இதனை குறைகள் முதலில் தொலைபேசியில் உரையாடியபோது தெரியவில்லையா என்ன ?
02-ஜூன்-2013 07:51:57 IST
கனவு மெய்ப்பட வேண்டும். விவசாயின் கண்ணீர் துடைக்கப் பட வேண்டும். நினைத்துப் பார்க்கும் பொழுதே திட்டத்தின் அருமை புரிகிறது. பசுமையான பாரதம் திகழ மாநிலங்கள் எல்லாம் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும்.
05-மே-2013 19:08:04 IST
போர் என்பது என் விருப்பம் அல்ல. ஆனாலும் போர் என்று ஒன்று சீனாவுடன் வந்தால் ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் உள்ள ஊழல்கள் வெளி வரும் என்று பயம் இருக்கலாம். இம்சை அரசன் புலிகேசி திரைப்படத்தில் போருக்குப் புறப்படும்போது வாளின் கைப்பிடி கழன்று வருவது போல, பீரங்கியோ துப்பாக்கியோ கழன்று விழலாம்.
25-ஏப்-2013 02:21:46 IST
அந்த தாயின் வேதனை சிறுமியைக் கொன்ற மிருகத்திற்கும் கீழானவர்களுக்குத் தெரியுமா? இவர்களுக்கு நிச்சயம் கொடூர தண்டனை கொடுக்க வேண்டும். மரண தண்டனை வேண்டாம் என்று நம் நாடு முடிவெடுக்க முடியாத மாதிரி தான் குற்றங்கள் நிகழ்கின்றன.
19-ஏப்-2013 05:07:05 IST
வாழ்த்துக்கள் தம்பி. உன் போல் பலர் வர வேண்டும் நம் பாரத தாயை பல சமுதாயக் கொடுமைகளில் இருந்தும் மீட்டு எடுக்க சிறுவன் என்று அலட்சியப் படுத்தாமல் அவரின் கருத்துக்குச் செவி சாய்த்த கிராம மக்களுக்கும் நன்றி
16-ஏப்-2013 02:47:42 IST