" அவர்களை அந்த பெருமாள் பார்த்து கொள்வார். " - அப்போ, நீங்க என்ன செய்றீங்க ?? இப்படி சொல்லியே நமக்கு நாமே நாமம் சாற்றிக் கொள்கிறோம்.. இந்த சில்லறை விஷயங்களுக்கெல்லாம், அந்த அண்ட பராசரங்களை எல்லாம் ஆளும் உம் எம்பெருமான் வருவார் என்று நினைக்கிறீர்களா ?? சரியான கேலிக் கூத்து.. மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இந்த வரியை தடுக்க ஒரு லட்சம் கோடிகளை கொட்டிய பல கோடி ஆத்திக பக்தர்களால் முடியாதா ?? வாயை மூடிக் கொண்டு, "அவன் பாத்துப்பான்" என்று கையாலாகாமல் சொன்னால், அவர்கள் பக்தர்கள் இல்லை... வெறும் பதர்கள்...
23-மே-2013 15:14:59 IST
ஆத்திகத்தை அழிப்பவர்களில் முதல், முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஆத்திகர்களே.. நாட்டில் 99 விழுக்காடு ஆத்திகர்களே.. அது தெரிந்தால் இப்படி உளறிக் கொட்ட மாட்டீர்கள்.. செற்றியில் நாமமும், உள்ளமெல்லாம் வக்கிரமும் உள்ளவர்களை விட, கடவுளை நிந்திக்கும் நாத்திகர்கள் மிக மிகக் குறைவு.. உண்மை அது தான் என்பது அந்த கடவுளுக்கும் தெரியும்..
23-மே-2013 09:52:31 IST
நான் ஸ்ரீரங்கமும் செல்வதில்லை.. தூணிலும், துரும்பிலும் இருப்பவனை எங்கேயாவது போய் ஏன் தொழ வேண்டும்.. கோவில் குளம் எல்லாம், கடவுள் மேல் உண்மையான நம்பிக்கை இல்லாதவர்களுக்கு மட்டுமே..
23-மே-2013 09:48:54 IST
வரி விதிக்க வேண்டியது தான் ... பாவம், ஒரு கோபுரம் மட்டும் தங்கத்தில் பள பளக்கிறது .. மத்தது எல்லாம் பாவமாக இருக்கு.. அதுக்கும் தங்கத்தில் இழைக்க வேண்டாமா.. ஒரு லட்சம் கோடி மட்டும் வச்சிக்கிட்டு பெருமாள் ரொம்ப ஏழையாக இருக்கிறாராம்..
23-மே-2013 07:49:09 IST